Skip to main content

ஹேக் செய்யப்பட்ட பிக்பாஸ் பிரபலத்தின் ட்விட்டர் அக்கவுண்ட்!

Published on 06/02/2020 | Edited on 06/02/2020

மிகவும் பிரபலமான தொலைக்காட்சி போட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் போட்டி. இது ஒவ்வொரு மொழிகளிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக ஹிந்தியில் 13வது சீஸன் தற்போது ஒளிப்பரப்பாகிறது. இந்நிலையில் தமிழில் இதுவரை மூன்று சீஸன் ஒளிப்பரப்பாகியுள்ளது. இந்த மூன்று சீஸன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். 
 

biggboss

 

 

இந்நிலையில் கடந்த இரண்டாவது பிக்பாஸ் போட்டியில் பங்குபெற்றவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் ஒருசில படங்களில் மட்டும் நடித்தவருக்கு அவ்வளவாக பட வாய்ப்பு வரவில்லை, இதன்பின் பிக்பாஸ் போட்டியில் கலந்துகொண்டார். இதில் கிடைத்த பிரபலத்தை வைத்து மீண்டும் தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வர தொடங்கியுள்ளார். மூன்று படங்களில் நடிகையாக நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியானது.

இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா தத்தாவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டிருந்ததாக அவரே ட்விட்டரில் பதிவிட்டு தெரிவித்துள்ளார். அந்த பதிவில், “ இவ்வளவு நாள் என்னுடைய ட்விட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டிருந்தது. என்னுடைய டீமின் உதவியால் பல போராட்டங்களுக்கு பின்பு என்னுடைய ட்விட்டர் அக்கவுண்டை மீட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மஹத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா தத்தா-வின் 'கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா'

Published on 03/01/2024 | Edited on 03/01/2024
mahat raghavendra movie update

வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஃபேவின்ஸ் பால் தயாரிப்பில், இயக்குநர் பிரபுராம். செ இயக்கத்தில், மஹத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா தத்தா நடித்திருக்கும் படம் 'கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா'. ரொமான்ஸ் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தில் சாக்ஷி அகர்வால், யோகிபாபு, மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

இப்படத்திற்கு தரண் குமார் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். கார்த்திக் கிருஷ்ணன் பின்னணி இசையை கவனித்துள்ளர். இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்தப் படத்தின் ஆடியோ மற்றும் திரையரங்குகளில் வெளியாகும் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். 
 

Next Story

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பாகுபலி நடிகர்!

Published on 30/06/2021 | Edited on 30/06/2021
bnfxhshsh

 

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தென்னிந்திய மொழிகளிலும் பிரபலமாகி வருகிறது. இதில் தெலுங்கு பிக்பாஸ் முதல் சீசனை ஜுனியர் என்டிஆர், இரண்டாவது சீசனை நானி, மூன்று மற்றும் நான்காவது சீசன்களை நாகார்ஜுனா தொகுத்து வழங்கினர். இது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது பிக்பாஸ் ஐந்தாவது சீசன் விரைவில் ஆரம்பமாகவுள்ளது.

 

இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியைக் கடந்த இரண்டு வருடங்களாகத் தொகுத்து வழங்கிய நடிகர் நாகர்ஜுனா, படங்களின் கால்ஷீட் பிரச்சனை காரணமாக இந்த வருடம் பிக்பாஸ் நிகஸ்ச்சியில் இருந்து விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவருக்குப் பதிலாக 'பாகுபலி' புகழ் நடிகர் ராணா இதனை தொகுத்து வழங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.