Advertisment

"அப்படி ஒரு கெட்ட பழக்கம் என்னிடம் இருக்கிறது" - நடிகர் அசோக் செல்வன் 

bfndcnc

Advertisment

இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இதில் ரித்விகா, ரீயா, பானுப்ரியா, கே.எஸ் ரவிக்குமார், நாசர், மணிகண்டன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுத்தில் உருவான 'சில நேரங்களில் சில மனிதர்கள்' என்ற நாவலின் தலைப்பை இப்படத்திற்கும் படக்குழு வைத்துள்ளது. தற்போது ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படத்தின் நாயகனாக நடித்துள்ள நடிகர் அசோக் செல்வன் தன்னுடைய கதாபாத்திர தேர்வு குறித்து நமக்கு அளித்த பிரத்தேக பேட்டியில் கூறியபோது....

"இந்த கதையை படிக்கும்போது எனக்கு எல்லா கதாபாத்திரங்களும் பிடித்து விட்டது. எல்லா கதாபாத்திரங்களும் நமக்கு நெருக்கமாக தொடர்புப் படுத்திக்கொள்ளும்படி இருந்ததால் இந்த கதை எனக்கு மிகவும் பிடித்தது. பொதுவாக என் கதாபாத்திரம் தெரிந்த பிறகு நான் ஸ்க்ரிப்டை படித்தால் என் கவனம் முழுவதும் என் கதாபாத்திரத்தின் மீதே இருக்கும். அப்படி ஒரு கெட்ட பழக்கம் என்னிடம் இருக்கிறது. அதனால் முடிந்த வரை என் கதாபாத்திரம் தெரியாமலேயே முழு ஸ்க்ரிப்டை படிக்கிறேன்" என கூறியுள்ளார்.

ashokselvan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe