Advertisment

”இதுவே வேறு யாராக இருந்தாலும் எனக்குள் ஆயிரம் கேள்விகள் இருந்திருக்கும்” - பிரபல இயக்குநருக்கு ஆர்யா பாராட்டு

Arya

Advertisment

சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் திரைப்படம் செப்டம்பர் 8ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

நிகழ்வில் நடிகர் ஆர்யா பேசுகையில், ”நான் அழைத்தவுடன் இந்த விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி. கேப்டன் என்ற டைட்டில் ஆர்.பி.சௌத்ரி சாரிடம் இருந்தது. இந்த விஷயத்தை இயக்குநர் என்னிடம் சொன்னதும் அவரிடம் சென்று கேட்டேன். உடனே சம்மதம் கொடுத்த அவருக்கு நன்றி.

இந்தக் கதையை வேறு ஏதாவது இயக்குநர் என்னிடம் சொல்லியிருந்தால் நான் நிச்சயம் நடித்திருக்கமாட்டேன். சொன்னபடி எடுப்பார்களா, க்ராபிக்ஸ் காட்சிகள் தரமாக இருக்குமா, நம்பி நடிக்கலாமா என்று எனக்குள் ஆயிரம் கேள்விகள் இருந்திருக்கும். ஆனால், சக்தி சௌந்தர் ராஜன் சொன்னபோது எந்தக் குழப்பமும் இல்லாமல் உடனே ஓகே சொன்னேன். சி.ஜி. காட்சிகளை எவ்வளவு தரமாக அவர் கொடுப்பார் என்று எனக்குத் தெரியும். நடிகை ஐஸ்வர்யாவின் ரொமான்ஸ் காட்சிகள் சிறப்பாக இருக்கும். கேப்டன் ஆக்‌ஷன் படமாக இருந்தாலும் அழகான காதல் கதை அதில் இருக்கும்.

Advertisment

படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர், இசையமைப்பாளர் இமான், எடிட்டர் உள்ளிட்ட அனைத்து கலைஞர்கள் மற்றும் நடிகர்களுக்கு நன்றி. கேப்டன் செப்டம்பர் 8ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. அனைவருக்கும் பிடிக்கக்கூடிய படமாக நிச்சயம் இருக்கும்” எனத் தெரிவித்தார்.

Actor Arya
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe