Skip to main content

'அருவி' இயக்குனரின் அடுத்த படம்! 

Published on 30/05/2018 | Edited on 31/05/2018
arun prabhu


சிவகார்த்திகேயனின் வெற்றி பட நிறுவனமான 24 ஏஎம் ஸ்டூடியோஸ் ஆர்.டி.ராஜா தற்போது சிவகார்த்திகேயனின் 'சீமராஜா' மற்றும் 'இன்று நேற்று நாளை' பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கும் புதிய படம் ஆகியவற்றை தயாரித்து வருகிறார்.

 

 


இந்நிலையில் இப்படங்களை தொடர்ந்து இவர் அடுத்ததாக 'அருவி' படத்தை இயக்கிய அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கும் புதிய படத்தை 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பாக தயாரிக்க இருக்கிறார். இந்த புதிய படத்திற்கான பூஜை நேற்று போடப்பட்டது. மேலும் இதன் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது வெளியாகியுள்ளது..

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்தியில் ரீமேக்காகும் சூப்பர் ஹிட் தமிழ்ப்படம்!

Published on 05/03/2021 | Edited on 05/03/2021

 

aruvi

 

அருண் பிரபு இயக்கத்தில், அதிதி பாலன் நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான படம் 'அருவி'. டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படம், ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமின்றி விருது விழாக்களிலும் பல விருதுகளை வென்று குவித்தது.

 

ad

 

இந்த நிலையில், 'அருவி' படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. 'தங்கல்' படத்தில் நடித்துப் புகழ்பெற்ற பாத்திமா சனா ஷேக், மையக்கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை இ.நிவாஸ் இயக்குகிறார்.

 

அருவி படத்தின் தயாரிப்பாளரான எஸ்.ஆர்.பிரபு, இது குறித்து ஒரு ட்விட்டர் பதிவினை வெளியிட்டுள்ளார். அதில், 'அருவி திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுவதைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. படக்குழுவினருக்கு வாழ்த்துகள்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Next Story

பிடிவாதம் பிடிக்கும் 'அருவி' அதிதி பாலன் 

Published on 15/05/2018 | Edited on 16/05/2018
irumbu thirai.jpeg

 

 

aditi balan


'அருவி' படத்தின் மாபெரும் வெற்றி மூலம் புகழின் உச்சிக்கு சென்றார் நடிகை அதிதி பாலன். இப்படத்தில் இவர் நடித்த நடிப்பிற்கு மக்கள் மத்தியில் பாராட்டுகளும், விருதுகளும் கிடைத்தன. இந்நிலையில் அருவியில் தனக்கு கிடைத்த நல்ல பெயரை காப்பாற்றிக்கொள்ள எண்ணி கடந்த ஆறு மாதங்களாக எந்த படத்தையும் நடிகை அதிதி பாலன் ஒத்துக்கொள்ளவில்லை. அவர் இதுவரை சுமார் 150 படங்களுக்கு மேலாக கதை கேட்டு நிராகரித்துள்ளார். இதுவரை அவரை திருப்தி படுத்துகிற மாதிரி எந்த கதையும் அமையாததால் இன்னும் எந்த படத்திலும் நடிக்காமல் நல்ல கதைக்காக காத்துக்கொண்டிருக்கிறார். இதனால் இரண்டு ஆண்டுகள் சும்மாவே இருந்தாலும் பரவாயில்லை. பத்தோடு பதினொன்றாக ஒரு படத்தில் நடிக்க மாட்டேன் என்றும், மேலும்  வித்தியாசமான, அதே நேரத்தில் தனக்கு நடிக்க முக்கியத்துவம் உள்ள கதைகளில்தான் நடிப்பேன் என்றும் பிடிவாதமாக தன் முடிவில் உறுதியாக உள்ளார் அதிதி பாலன்.