Skip to main content

"இது தாத்தாவோடதே, அப்பாகிட்ட கேட்டு சொல்றேன்" - உதயநிதியின் தயக்கம் குறித்து இயக்குநர் பேட்டி 

Published on 13/05/2022 | Edited on 13/05/2022

 

 Arunraja Kamaraj

 

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தான்யா ரவிச்சந்திரன், ஆரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படம் வரும் 20ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இயக்குநர் அருண்ராஜா காமராஜை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்த சந்திப்பில் 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...  

 

"எக்ஸாம் எழுதிவிட்டு ரிசல்ட்டுக்கு காத்திருக்கும் மாணவனின் மனநிலையில் இருக்கிறேன். படம் நல்லபடியாக வந்திருக்கிறது. முடிவு மக்கள் கையில் உள்ளது. ஆர்டிக்கள் 15 மூல கதையில் பெரிய அளவில் மாற்றம் செய்யவில்லை. நம் ஊருக்கு ஏற்ற மாதிரியான சின்னசின்ன மாற்றங்கள் செய்துள்ளோம். சில கேரக்டர்களை புதிதாக சேர்த்துள்ளோம். 

 

சமூக நீதி பேசக்கூடிய கதை, அதில் உதயநிதி சார் நடிக்கிறார் என்பதால் நெஞ்சுக்கு நீதி என்ற டைட்டில்  பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன். உதய் சாரிடம் சொன்னபோது இது தாத்தாவோட டைட்டிலாச்சே என்று யோசித்தார். கதைக்கு பொருத்தமாக இருக்கும் சார், இந்தக் கதைக்கு வைக்கவில்லை என்றால் வேறு எந்தக் கதைக்கும் வைக்கமுடியாது சார் என்று கூறினேன். அப்பாவிடம் பேசிவிட்டு கூறுகிறேன் என்று சொன்னார். அதன் பிறகுதான் டைட்டிலை ரிஜிஸ்டர் செய்தோம். 

 

ஒடுக்குமுறை சார்ந்த வன்முறைகளுக்கு எதிரான கதை என்பதால் எங்கு எதிர்க்குரல் இல்லை என்று யோசித்தேன். தமிழகத்தின் பிற பகுதிகளில் எதிர்க்குரல் இருந்தாலும்கூட மேற்கு பகுதியில் எதிர்க்குரல் இல்லை. அங்கு சாதி என்பது வாழ்க்கையோடு ஒன்றாக பழகிவிட்டது. படத்திற்கு லொக்கேஷன் பார்க்க சென்றபோது நானே தீண்டாமையை கண்ணால் கண்டேன். அதனால் கோயம்புத்தூரை கதைக்களமாக தேர்ந்தெடுத்தேன். 

 

நல்லது பேசுவதற்கு பயப்படத்தேவையில்லை என்பதால் துணிந்து இந்தக் கதையை கையில் எடுத்தோம். இவர்தான் செய்கிறார் என்று நாம் யாரையும் குறிப்பிட்டோ, வன்மத்தோடோ சொல்லவில்லை. அந்த மாதிரியான சிந்தனைகள் தவறு என்பதை நாம் சொல்லித்தானே ஆகவேண்டும். சென்சிட்டிவான விஷயம் என்று அதை பேசாமலும் இருக்கக்கூடாது. எந்த விஷயம் செய்தாலும் அதைத் தெளிவாக செய்யவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கக்கூடியவர் உதய் சார். அரசியல் பின்புலம் சார்ந்த ஒருவராக தன்னை அவர் காட்டிக்கொண்டதே இல்லை. கானா படம் பார்த்துவிட்டு இந்தப் படத்தை அருண் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து அவர் எனக்கு வாய்ப்பு கொடுத்ததையே பெரிய அங்கீகாரமாக நினைக்கிறேன்.

 

இந்தப் படத்துக்காக நிறைய மூத்த பத்திரிகையாளர்கள், போலீஸ் ஆபிஸர்களை சந்தித்து அவர்களோடு விவாதித்தேன். உதய் கேரக்டருக்காக லுக் டிசைன் பண்ணிவிட்டு அவரிடம் காட்டியபோது நல்ல வரைஞ்சிருக்கீங்க, நான் எப்படிங்க இதை நடிப்புல கொண்டு வர்றது என்று கேட்டார். போலீஸ் கெட்டப் செட்டாகவில்லை என்றால் கிண்டல் செய்துவிடுவார்களோ என்று யோசித்தார். அதனால் யூனிஃபார்ம் வேண்டாமே மஃப்டிலயே நிறைய சீன் வச்சுக்கலாம் என்று சொன்னார். அவருக்கு பொருத்தமாக இருக்கும் என்று நான் எடுத்துச் சொன்னேன். யூனிஃபார்ம் போட்டு முதல் ஷெடியூல் எடுத்து முடித்த பிறகு அவருக்கு அந்த சிந்தனையே வரவில்லை. அந்த அளவிற்கு போலீஸ் கெட்டப் அவருக்கு பொருத்தமாக இருந்தது".

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் விஷ்ணு விஷால்

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
vishnu vishal new movie with arunraja kamaraj

லால் சலாம், மோகன்தாஸ், ஆர்யன் உள்ளிட்ட படங்களை விஷ்ணு விஷால் கைவசம் வைத்துள்ளார். மேலும் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருகிறார். இதில் லால் சலாம் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் நிலையில், ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

இதனைத் தொடர்ந்து இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா உள்ளிட்ட சில படங்களை இயக்கிய கோகுல் இயக்கத்தில் ஒரு படமும், கட்டா குஸ்தி பட இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் ஒரு படமும் தயாரித்து நடிக்கவுள்ளார். 

இந்த நிலையில், தற்போது விஷ்ணு விஷால் நடிக்கும் புது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இப்படத்தை தயாரிக்கிறார். ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தினை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் தலைப்பு, படத்தில் பணியாற்றவுள்ள நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படம் குறித்த மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Next Story

“குரலற்ற இயலாமையின் குரலின் தொடக்கம்” - அருண்ராஜா காமராஜ் நெகிழ்ச்சி

Published on 30/12/2023 | Edited on 30/12/2023
arunraja kamaraj about label series

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் 'லேபில்'. இந்தத் தொடரில் கதாநாயகியாக தன்யா ஹோப் நடித்துள்ள நிலையில் மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முத்தமிழ் படைப்பகம் தயாரித்துள்ள இந்தத் தொடருக்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். திரைக்கதையை இயக்குநர் அருண்ராஜா காமராஜ் எழுத, கூடுதல் திரைக்கதை மற்றும் வசனங்களை ஜெயச்சந்திர ஹாஷ்மி எழுதியுள்ளார். இவர் சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு கவனம் பெற்ற ஸ்வீட் பிரியாணி குறும்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த சீரிஸ் கடந்த நவம்பர் 10 ஆம் தேதி முதல் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 7 மொழிகளில் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டது. இந்த நிலையில் லேபில் சீரிஸ் குறித்து அனைவருக்கும் நன்றி தெரிவித்து அருண்ராஜா காமராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  அந்த அறிக்கையில், “நவம்பர் 10, 2023 முதல் இன்று வரை 8 வாரங்கள். லேபிலின் கருவாக்கம், உருவாக்கம் மற்றும் வெளியீடு இவை அனைத்தும் எங்களின் சிறுசிறு ‘பெருங்கனா’. இப்படைப்பின் கரு நம் அனைவரின் ஏதோ ஒரு குரலற்ற இயலாமையின் குரலின் தொடக்கமாய் துவங்கி, கதை கண்டு, களம் கண்டு, வடிவம் கண்டு, இன்று முதல் அத்தியாயம் இன்னும் சில கேள்விகளுடனேயே நிறைவு பெறுவது நீண்ட நெடிய சுமத்தலுக்குப் பின் பிரசவிக்கும் ஓர் உணர்வு.

பிரசவித்தலுக்கான காலமே எட்டு வாரங்கள். அதை ஒரு நாளும் உணர்விக்கத்தவறவில்லை இக்குழந்தை. ஒவ்வொரு அரை மணியும் ஒரு பெரும் வாரமாய் மாறி எட்டி உதைக்கவும் தவறியதில்லை உங்களின் அன்பு மட்டுமே இக்குழந்தையை வளர்த்து இதில் உழைத்த அனைவருக்கும் சுகமாய் முழுதாய் பிரசவித்துக் கொடுத்திருக்கிறது. உங்கள் அன்பைப் பெற பாடுபட்ட என்னுடன் தோள் சேர்த்து அதை கோபுரம் ஆக்க, என் அன்புக்காக மட்டுமே அயராது சுழன்ற ஒவ்வொருவரும் ஒவ்வொருவரும்... ஒவ்வொருவரும் என்றுமே எனக்கான பொக்கிஷங்கள். உங்களால் மட்டுமே ‘லேபில்’ சாத்தியம் ஆகியுள்ளது.

பல்வேறு சிந்தனைகள், பல்வேறு மனநிலைகள், பல்வேறு நிலைப்பாடுகள், நெருங்கிய ஆளுமைகளின் மறைவுகள் பல்வேறு காலநிலை மாறுதல்கள்.. தொடர் இடர்கள், நிலையற்ற சூழ்நிலைகள், அடுத்தடுத்த முன்னெடுப்புகள், மாபெரும் இழப்புகள், சவால்கள் இவை அனைத்திற்கும் மத்தியில் வந்து நின்ற பொழுது, அப்போதைய மனநிலையில் இப்படைப்பு வீரியம் மாறி மாறி, தொடர்பற்று, உங்கள் அன்பை இழந்திருக்கக் கூட ஒரு வாய்ப்பிருந்திருக்கும். அல்லது முற்றிலும் பெற முடியாமல் தவித்திருக்கும். இவை எதுவும் நம் கட்டுப்பாட்டுக்குள் இல்லாது போனதாலேயே இந்த நீண்ட நெடிய விளக்கம். எல்லா கலை படைப்புமே எல்லாரையுமே திருப்தி படுத்திவிடுமா அப்படி பண்ண முடியுமான்னு தெரியல.. ஆனா அத பண்ண ஒவ்வொரு முறையும் கலை தன்னை தயார் செய்து கொள்ளும். அதனை முடிந்தவரை முயன்று முடிப்போம், முடியும் வரை முயல்வோம்” என்றார்.