ADVERTISEMENT
ADVERTISEMENT
சீமராஜா திரைப்படத்தின் ட்ரெய்லர் இரண்டு நாட்களுக்குமுன் வெளியிடப்பட்டது. அப்போது அருண்விஜய் ஒரு ட்விட் போட்டார். அதில் யாரெல்லாம் மாஸ் பண்றதுனு ஒரு வெவஸ்தை இல்லாம போச்சு, தமிழ் ஆடியன்ஸ்க்கு தெரியும் என இருந்தது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்புகள் கிளம்பின. உடனே அவர் எனது கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டது. இன்னும் ஒரு மணிநேரத்திற்கு எது வந்தாலும் அது என் பதிவல்ல என்றும் குறிப்பிட்டார் அருண்விஜய் இதுவும் விமர்சிக்கப்பட்டது, இதை மட்டும் எப்படி பதிவிட்டீர்கள். என்று கேட்டனர். அதன்பின் எனது கணக்கு சரிசெய்யப்பட்டுவிட்டது, எனது நிலையை புரிந்துகொண்ட உங்களை பாரட்டுகிறேன் என ட்விட் போட்டு இந்த பிரச்சனையை முடிவிற்கு கொண்டுவந்தார்.
ADVERTISEMENT
Show comments