Advertisment

”என்னுடைய 25 வருட உழைப்பிற்குப் பிறகு இது நடக்கிறது” - அருண் விஜய் நெகிழ்ச்சி

 Arun Vijay

Advertisment

ஹரி இயக்கத்தில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, ராதிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'யானை' திரைப்படம் ஜூலை 1ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

நிகழ்வில் நடிகர் அருண் விஜய் பேசுகையில், “பட ஷூட்டிங், டப்பிங்கை விட ப்ரொமோஷன்தான் ரொம்பவும் கஷ்டமாக இருந்தது. அதை ரொம்ப சந்தோசமாக பண்ணோம். தமிழ்நாடு முழுக்க போகணும் மாப்ள என்று ஹரி சார் முதலிலேயே சொல்லிவிட்டார். எல்லா பகுதிக்கும் சென்று ப்ரொமோஷன் செய்த பிறகு மாப்ள ஒரு மூணு ஏரியா விடுபட்டிருக்கு என்று சொன்னார். அதன் பிறகு, அங்கும் சென்றோம். நேற்றைய முன்தினம் மலேசியா சென்றிருந்தேன். அங்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ஜூலை 1ஆம் தேதி படம் வெளியாக இருக்கிறது. அனைவரையும் திருப்திப்படுத்தக்கூடிய கதைக்களத்துடன் உங்களைச் சந்திக்க இருக்கிறோம். படம் பார்த்துவிட்டு வரும்போது ஒரு கணத்தோடும் மகிழ்ச்சியோடும் வெளியே வருவீர்கள். இது முழுக்க முழுக்க திரையரங்கிற்கான படம். அதனால் அதற்கு ஏற்ற மாதிரி ஹரி சாரும் ஒளிப்பதிவாளரும் ஒவ்வொரு காட்சிக்காகவும் சிரத்தை எடுத்து உழைத்துள்ளார்கள். படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை பெரிய பலமாக உள்ளது. உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 1,100 திரையரங்குகளில் படம் வெளியாகிறது. தனிப்பட்ட முறையில் இது எனக்கும் மிகப்பெரிய படம். என்னுடைய 25 வருட உழைப்பிற்குப் பிறகு இது நடக்கிறது” என நெகிழ்ச்சியாகத் தெரிவித்தார்.

arun vijay
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe