Skip to main content

''அவர் கார் ஏறும் வரை கூட வந்து வழி அனுப்புவார்'' - அருண் விஜய்  

Published on 17/08/2019 | Edited on 17/08/2019

பாகுபலி பிரபாஸ் நடிப்பில் மிக பிரமாண்டமாக தயாராகியுள்ள சாஹோ படம் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியில் நடிகர் அருண் விஜய் கலந்துகொண்டு பேசும்போது... 

 

arun vijay

 

பாகுபலிக்கு பிறகு பிரபாஸ் போன்ற ஒரு நடிகர் இந்த மாதிரி மாதிரியான படத்தை தேர்வு செய்ததற்கு ஒரு தைரியம் வேண்டும். அதுவும் இயக்குனர் சுஜீத் மேல் இவர் வைத்த நம்பிக்கைக்கு ஹேட்ஸ் ஆஃப். இரண்டரை வருடத்திற்கு பிறகு வரும் படம் என்பதால் பிரபாஸ் மிகவும் கவனமாக இருந்தார். அவர் நினைத்திருந்தால் எவ்வளவோ பெரிய இயக்குனர்கள் படங்களில் நடித்திருக்கலாம். ஆனால் இந்தப்படத்தை அவர் பெரிதும் நம்பியிருக்கிறார். அவர் சாதாரணமாக நடந்து போகக்கூடிய ஒரு ஷாட்டிற்கு அவ்வளவு மெனக்கெடுவார். அந்த அளவு அவர் சினிமா மேலும், நடிப்பு மேலும் பற்று உள்ளவர். இன்னும் சொல்லப்போனால் பிரபாஸ் எந்த அளவு பணிவானவர் என்றால் அவருடன் பணிபுரியும் எந்த ஆர்டிஸ்ட்டாக இருந்தாலும் அவர்கள் கார் ஏறும் வரை உடன் சென்று வழி அனுப்பி வைத்துவிட்டுதான் செல்வார். அந்த அளவு அக்கறையானவர். இதுபோல் ஒருவருடன் பணிபுரிந்து சந்தோஷமாக உள்ளது. 

 

 

இப்படத்தில் எனக்கு நிறைய சவால்கள் இருந்தது. குறிப்பாக ஹிந்தி பேசி நடிப்பதில் சிரமப்பட்டேன். இருந்தும் ஒரு பண்டிட் உதவியுடன் நன்றாக ஹிந்தி பேசியுள்ளேன். ஒருமுறை என் ஹிந்தி வசன உச்சரிப்பை பார்த்து உடன் நடித்த மந்திரா பேடி என்னை வெகுவாக பாராட்டினார். ஆனால் நானோ அதை மனப்பாடம் செய்து ஒப்பித்தேன் என உண்மையை சொன்னேன். அவர் மிகவும் ஆச்சரியப்பட்டார். இருந்தும் எனக்கு வேறொருவர் தான் ஹிந்திக்கு குரல் கொடுத்துள்ளார். எனக்கு இது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது'' என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரபல இயக்குனருக்கு நிச்சயதார்த்தம்!

Published on 12/06/2020 | Edited on 12/06/2020

 

sujith


'ரன் ராஜா ரன்' என்னும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுஜித். இந்தப் படத்தைத் தொடர்ந்து தன்னுடைய இரண்டாவது படமே மிகப்பெரும் பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக இயக்கினார். 'சாஹோ' என்று பெயரிடப்பட்ட அந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியானது. 
 


கலவனையான விமர்சனங்களைப் பெற்று வந்த 'சாஹோ' படத்தைத் தொடர்ந்து 'லுசிஃபர்' தெலுங்கு ரீமேக்கை இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சிரஞ்சீவி இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். 

இதனிடையே, நேற்று 'சாஹோ' இயக்குனருக்குத் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. பல் மருத்துவரான பரவாலிகாவை திருமணம் செய்யவுள்ளார். கரோனா அச்சுறுத்தலால் இரண்டு குடும்பத்தினர் மட்டுமே இந்த நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
 

 

Next Story

எனக்கு கோவில் கட்டுவதாக ரசிகர்கள் சொன்னார்கள்- சாஹோ இயக்குனர் சிலிர்ப்பு!!!

Published on 10/09/2019 | Edited on 10/09/2019

'பாகுபலி 2' என்ற மிகப்பெரும் வெற்றிப் படத்திற்குப் பிறகு இரண்டு வருடங்கள் கழித்து பிரபாஸ் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'சாஹோ'. இருந்தாலும் படம் பார்த்தவர்களிடையே இது கலவையான விமர்சனத்தையே பெற்றிருக்கிறது. இப்படம் ரூ. 350 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து எடுக்கப்பட்டதாலும் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் வெளியிட்டார்கள்.மேலும் படத்தில் ஒவ்வொரு சீன், மைய கதை என்று அனைத்தும் திருட்டுதான் என்று சமூக வலைதளத்தில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
 

sujeeth

 

 

கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி ஜெரோம் சல்லி என்ற பிரஞ்சு திரைப்பட இயக்குனர், எனக்கு இந்திய சினிமாவில் சிறப்பான எதிர்காலம் இருக்கிறதுபோல என்று பதிவிட்டிருந்தார். இதை பார்த்த அவருடைய ரசிகர்களுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. 

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதிஜெரோம் சல்லி என்ற பிரஞ்சு திரைப்பட இயக்குனர் தனது ட்விட்டரில், “எனது லார்கோ வின்ச் படத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்த இரண்டாவது படமும் முந்தைய படத்தைப் போலவே மோசமாக இருப்பது போல தெரிகிறது. எனவே தெலுங்கு இயக்குனர்களே என் கதையை திருடினால் தயவுசெய்து ஒழுங்காக திருடுங்கள். என்னுடைய “இந்தியாவில் எதிர்காலம்” ட்வீட் முரண்பாடாக இருந்ததால் மன்னிக்கவும், எனக்கு வேறு வழி தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.

ஜெரோம் சல்லி இயக்கத்தில் கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான படம் லார்கோ வின்ச். திரிவிக்ரம் இயக்கத்தில் பவண் கல்யாண் நடிப்பில் வெளியான அங்ஞாதவாசி படத்தையும் இவர் என்னுடைய லார்கோ வின்ச் படத்தின் கதைதான் என்று குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இந்த படத்தின் மீது வரும் விமர்சனங்கள் குறித்து இயக்குனர் சுஜீத் பேசியுள்ளார். அதில், “‘சாஹோ’ படத்தைக் காப்பி என்று சொல்பவர்கள் இன்னும் 'லார்கோ வின்ச்' படத்தைப் பார்க்கவில்லை என்று அர்த்தம். உங்களுக்கு 'சாஹோ' படம் புரியவில்லை என்றால் மீண்டும் ஒருமுறை சென்று பாருங்கள். உங்களுக்குப் புரியாத ஒரு விஷயத்தைப் பற்றி எழுதக் கூடாது. படம் இந்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. பிஹாரிலிருந்து பலர் எனக்குத் தொலைபேசி வாயிலாக வாழ்த்துகளைத் தெரிவித்தனர். நீங்கள் பிஹாரில் பிறந்திருந்தால் உங்களுக்கு கோயில் கட்டியிருப்போம் என்று கூட சிலர் கூறினார்கள்” என்றார்.