Skip to main content

"நம்ம ஆளுக என்ன பண்ணாலும் நாம மதிக்கமாட்டோம்" - ஏ.ஆர்.ரஹ்மான் ஆதங்கம் 

Published on 05/04/2019 | Edited on 05/04/2019

மார்வெல் நிறுவனத்தின் புகழ் பெற்ற அவெஞ்சர்ஸ் வரிசையில் அடுத்த பகுதியான 'அவெஞ்சர்ஸ் - எண்ட் கேம்' விரைவில் வெளிவர இருக்கிறது. இப்படத்தின் ஹிந்தி மற்றும் தமிழ் டப்பிங் வடிவங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அவெஞ்சர்ஸ் ஆன்தம் என்ற பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இப்பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. விழாவில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை ஆன்ட்ரியா, பாடலை எழுதிய விவேக் உள்பட பலர் கலந்துகொண்டனர். விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் பேசியது...

 

a.r.rahman avengers



"இப்படத்தின் மூலமாக ஹாலிவுட் படைப்பாளர்களுக்கும் நமக்கும் ஒரு உறவு, ஒரு பாலம் உருவாகியுள்ளது. நான் இசையமைத்துள்ளேன், விஜய் சேதுபதி, ஆன்ட்ரியா குரல் கொடுத்துள்ளனர். இப்படிப்பட்ட கூட்டு முயற்சிகள் சினிமாவில் முக்கியம். இப்படத்தின் இயக்குனர் ஜோ, எனது படத்தை பார்த்தார். அதை தன் ஹாலிவுட் நண்பர்களுக்கு காட்டுவதாகக் கூறியிருக்கிறார். தனது இயக்கத்தில் மேலும் படங்கள் செய்யலாம் என்றும் கூறினார். டிஸ்னீயிலும் புதிய நண்பர்கள் கிடைத்துள்ளனர். இப்படி இந்தப் படம் பல விஷயங்களுக்குத் தொடக்கமாக அமைந்துள்ளது. இந்தப் பாடலைக் கேட்ட டிஸ்னீ நண்பர்கள் பலர் 'கேட்டதும் கண்ல தண்ணி வந்துருச்சு' என்றெல்லாம் சொன்னாங்க. இயக்குனர் ஜோ, "நீ ஒரு பெரிய ஹிட் கொடுத்துட்ட" என்று சொன்னார். இப்படி இந்த இசைக்கு நன்றாக வரவேற்றாங்க".

ஏ.ஆர்.ரஹ்மான் பேசியவுடன், நிகழ்ச்சி தொகுப்பாளர் அவரிடம், "நீங்க சிம்பிளா சொல்லிட்டீங்க, ஆனா இதே அவெஞ்சர்ஸ் வரிசையின் இரண்டாம் பாகத்தில் ஒரு சீக்வன்ஸ்க்கான இசை, எந்திரன் படத்தில் நீங்கள் உருவாக்கிய இசையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது என்று அந்த இசையமைப்பாளரே சொன்னாரே" என்று கேட்க, "ஆம், அது ஒரு நல்ல செய்தி எனக்கு. அங்க இருக்கவங்களுக்கு நம்ம திறமை புரியுது. நம்ம ஆளுங்க என்ன பண்ணாலும் நாம மதிக்கமாட்டோம், கண்டுக்கமாட்டோம். வெளிய இருந்து இப்படி ஒருத்தர் சொல்லும்போதுதான், 'பரவாயில்ல நம்ம ஆளுக்கும் ஏதோ இருக்கு'னு நினைக்கிறாங்க" என்று கூறினார்.

மேலும் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும்போதும், ஒரு கேள்விக்கு "நண்டு கதை தெரியும்ல? மேலே ஏற விடாமல் இழுத்து விட்டுறும்" என்று ரஹ்மான் குறிப்பிட்டார். தமிழகம், இவரை இசைப்புயல் என்றும் ஆஸ்கர் தமிழன் என்றும் கொண்டாடுகிறது. பாலிவுட்டும் கூட இவரை சொந்தம் கொண்டாடுகிறது. ஆனாலும் திரைத்துறையில் இசைப்புயலுக்கு ஏதோ ஒரு ஆதங்கம் இருக்கிறது போல...                                

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி குளறுபடி; டிக்கெட் தொகை திருப்பி செலுத்த தொடக்கம்

Published on 22/09/2023 | Edited on 22/09/2023

 

 A.R. Rahman's concert; refund of ticket amount 

 

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், படங்களைத் தாண்டி பல நாடுகளில் இசைக் கச்சேரி நடத்தி வருகிறார். இவரது நிகழ்ச்சிக்கு சில நிமிடங்களிலேயே டிக்கெட் விற்பனையாகி சாதனை படைத்திருக்கிறது. இந்நிலையில் 'மறக்குமா நெஞ்சம்' என்ற தலைப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் தொடர்ந்து வெளிநாடுகளிலும் இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அன்று அரங்கில் மழை காரணமாக நீர் தேங்கியதால் ஒத்தி வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்காக பல்வேறு ஊர்களிலிருந்து வந்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். பின்பு ஏ.ஆர். ரஹ்மான் ரசிகர்களின் பதிவுகளுக்கு பதிலளித்து சமாதானப்படுத்தினார்.

 

இதையடுத்து பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் (10.09.2023) அன்று  'மறக்குமா நெஞ்சம்' நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஏசிடிசி என்ற நிறுவனம் செய்திருந்தது. நிகழ்ச்சியைக் காண பல்வேறு நாடுகளிலிருந்து ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர். இதில் மணிரத்னம், அஜித்தின் மனைவி ஷாலினி, அவரது மகள் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதனால் ஓ.எம்.ஆர் சாலையில் ரசிகர்கள் பெரும் திரளாகக் கூட கடும் போக்குவரத்து பாதிப்பு அப்பகுதியில் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கில் டிக்கெட்டுகளை வாங்கிய பல ரசிகர்கள் உரிய இருக்கை கிடைக்காமல் நின்று கொண்டே பார்த்ததாகவும், சிலர் இடம் கிடைக்காமல் பார்க்காமலேயே வீடு திரும்பியதாகவும் கூறியிருந்தனர். மேலும் பார்க்கிங் வசதி சரியாக இல்லாமல் சாலையிலேயே பலர் வாகனங்களை நிறுத்தி வைத்துவிட்டு சென்றதாகக் கூறப்படுகிறது. அதோடு கூட்ட நெரிசலில் பலருக்கும் மூச்சுத் திணறல், மயக்கம் ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

 

இந்த நிகழ்ச்சி குறித்து பலரும் மோசமான நிகழ்ச்சி ஏற்பாடு எனக் குற்றம் சாட்டினர். இதையடுத்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிறுவனம், "கூட்ட நெரிசலால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாதவர்கள் எங்களை மன்னிக்கவும். அதற்கான பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்" என எக்ஸ் (ட்விட்டர்) தள பக்கத்தில் மன்னிப்பு கேட்டிருந்தது. இதையடுத்து ஏ.ஆர். ரஹ்மான் இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த எக்ஸ் (ட்விட்டர்) தள பதிவில், "அன்புள்ள சென்னை மக்களே, டிக்கெட் வாங்கிவிட்டு துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகளால் மைதானத்திற்குள் நுழைய முடியாமல் போனவர்கள், தயவு செய்து உங்கள் டிக்கெட்  நகலை பகிரவும்" எனக் குறிப்பிட்டு ஒரு மின்னஞ்சலைப் பகிர்ந்து வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் அந்த மின்னஞ்சலில் ரசிகர்களின் குறைகளை குறிப்பிடுமாறும், அது குறித்து அவர்கள் குழு விரைவில் பதிலளிக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

 

இந்நிலையில் ஏசிடிசி நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் டிக்கெட்டிற்கான தொகையை திருப்பி செலுத்த தொடங்கி விட்டோம் என்று தெரிவித்துள்ளனர். அதில் "முன்பதிவு செய்த 3 வலைதளங்கள் வழியாக பணத்தை திருப்பி செலுத்தும் பணியை தொடங்கிவிட்டோம்; உங்களுக்கு ஏற்பட்ட அனைத்து சிரமங்களுக்கும் மன்னிப்பு தெரிவித்துக்கொள்கிறோம்" என்றிருக்கிறார்கள்.  

 

 

 

 

Next Story

ஆபத்தான நிலையில் 'அவெஞ்சர்ஸ்' பட பிரபலம்

Published on 02/01/2023 | Edited on 02/01/2023

 

Marvel star Jeremy Renner in hospital

 

28 வீக்ஸ் லேட்டர், தி டவுன் உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள நடிகர் ஜெர்மி ரென்னர், உலகப் புகழ் பெற்ற மார்வெல்ஸின் 'அவெஞ்சர்ஸ்' படங்களில் ஹாவ்க்-ஐ கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தி ஹர்ட் லாக்கர், தி டவுன் படத்திற்காக சிறந்த நடிகர் மற்றும் சிறந்த துணை நடிகருக்காக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். கடைசியாக 'க்ளாஸ் ஆனியன்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். 

 

இந்த நிலையில் ஜெர்மி ரென்னர், நேற்று தனது வீட்டிற்கு காரில் சென்றுள்ளார். அப்போது அந்தப் பகுதியில் கடும் குளிர் காற்றுடன் பனிப்புயல் ஒன்று தாக்கியது. அதனால் ஆயிரக்கணக்கான வீடுகள் மின்சாரம் இன்றி இருளில் இருந்தன. இதனால் ஜெர்மி ரென்னர் பயணித்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் மோதி விபத்துக்குள்ளானது. 

 

விபத்தில் படுகாயமடைந்தார் ஜெர்மி ரென்னர். உடனே தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர், அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆபத்தான நிலையில் அவர் இருப்பதாகவும் ஆனால் உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவமனை தரப்பு தெரிவித்துள்ளது. இதனால் அவரது  ரசிகர்கள் அவர் குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர்.