Skip to main content

காட்டுத் தீயில் சிக்கிய அர்னால்ட்... காப்பாற்றிய இரண்டு ஹீரோக்கள்...

Published on 31/10/2019 | Edited on 31/10/2019

அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா மகாணத்தில் திடீரென காட்டுத்தீ பரவி உள்ளது. இதனால் லாஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கும் ஹாலிவுட் நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்களின் வீடுகளை காட்டுத்தீ சூழ்ந்துள்ளது. ஆயிரக்கணக்கான பொது மக்கள் தங்களின் வீடுகளை காலி செய்துவிட்டு வெளியேறியுள்ளனர். அமெரிக்க அரசும் காட்டுத்தீ பரவி வரும் பகுதிகளுக்கு அருகில் இருப்பவர்கள் தங்களின் வீடுகளைவிட்டு வெளியேற வேண்டும் என்று எச்சரித்துள்ளது.
 

forest fire

 

 

தீயை அணைக்க தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்காவின் பிரபல கூடப்பந்து வீரரான லிபுரோன் ஜேம்ஸ் என்பவருடைய சொகுசு வீடு எரிந்து நாசமானது என்று லிபுரோன் ஜேம்ஸே ட்விட்டரில் தெரிவித்துள்ளார். பிரபல ஹாலிவுட் நடிகரும், அரசியல்வாதியுமான அர்னால்டின் வீட்டையும் காட்டுத் தீ சூழ்ந்தது. இதனால் வீட்டுக்குள்ளேயே சிக்கிக்கொண்டு தப்பி செல்ல வழியில்லாமல் தவித்தார் அர்னால்ட். 

2 தீயணைப்பு வீரர்கள் துணிச்சலாக சென்று அர்னால்டை காப்பாற்றி வெளியே அழைத்து வந்தனர். தன்னை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள்தான் உண்மையான கதாநாயகர்கள் என்று ட்விட்டரில் அர்னால்ட் பாராட்டி உள்ளார். இதுபோல் காட்டுத் தீயில் சிக்கிய ஹாலிவுட் நடிகர்கள் கிளார்க் கெர்க், கர்ட் சட்டர் ஆகியோரையும் தீயணைப்பு வீரர்கள் காப்பாற்றி உள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வரலாறு காணாத கனமழை; பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Unprecedented heavy rains in california

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பொழிந்து வருகிறது. இதனால், பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. 

அதன்படி, கலிபோர்னியா பகுதியில் நேற்று (06-02-24) வரலாறு காணாத கனமழைக் கொட்டித் தீர்த்தது. இதில், லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட சில இடங்களில் 25 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. இந்த வெள்ளத்தின் போது பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு மக்கள் பலரும் அதில் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மணிக்கு 78 மைல் வேகத்தில் வீசிய சூறாவளி காற்றால் கிட்டத்தட்ட 8,75,000 வீடுகளின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பலரது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

வரலாறு காணாத இந்த மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பு படையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த மழை வெள்ளத்தால் தற்போது வரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அங்குள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த வெள்ளம் குறித்து தேசிய வானிலை மையம் கூறியுள்ளதாவது, ‘5 முதல் 10 அங்குலங்கள் (12.7செ.மீ முதல் 25.4 செ.மீ) வரை பெய்துள்ளது. மேலும், இந்த மழையின் அளவு அதிகரிக்கக்கூடும்’ என்றும் தெரிவிக்கப்படுகின்றது. 

Next Story

கிட்டதட்ட 70 இலட்சம் செலவழித்து சிகிச்சை பெற்ற தம்பதி... சம்மந்தமில்லாத வெறொருவரின் குழந்தையை பெற்றெடுத்த அவலம்!!!

Published on 10/07/2019 | Edited on 10/07/2019

தங்களுக்கு குழந்தை வேண்டுமென்ற ஆசையுடன் கருவள சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்ற தம்பதி, சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட குழப்பத்தால் தங்களுக்கு சம்மந்தமே இல்லாத இரட்டைக் குழந்தைகளை பெற்றுள்ளனர். 
 

ivf


கலிஃபோர்னியாவிலுள்ள ஒரு கருவள சிகிச்சை மையத்தில் ஒரு ஆசிய தம்பதியினர் சிகிச்சை பெற்றுவந்தனர் (விவரங்கள் குறிப்பிடப்படவில்லை). அங்கு நடந்த குழப்பத்தால், அந்த தம்பதியினருக்கு ஆசிய வம்சாவளிக்கு சம்பந்தமில்லாத இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளது. இதனால் அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

இதுகுறித்து அவர்கள் நியூயார்க்கில் உள்ள ஒரு நீதிமன்றத்தில் வழக்கு பதிவுசெய்துள்ளனர். குழந்தைகளின் டி.என்.ஏ., அந்த தம்பதியினரின் டி.என்.ஏ.வோடு ஒத்துப்போகவில்லை என்பது இந்த வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்தரிப்பு முந்தைய சிகிச்சை, ஆய்வக செலவுகள், ஐ.வி.எஃப். செலவு, பயணச்செலவு உட்பட இன்னும் பிற செலவுகள் ஆகியவற்றை சேர்த்தால் மொத்தம் ஒரு இலட்சம் டாலருக்கும் மேலாகும் என தெரிவித்துள்ளனர். இது இந்திய மதிப்பில் கிட்டதட்ட 70 இலட்சம் ஆகும். 

ஐ.வி.எஃப். என்றால் ஆய்வகத்தில் பெண்ணின் கருமுட்டையை கருத்தரிக்க செய்து, பின் அதை அந்தப் பெண்ணின் கருப்பையில் வைத்து குழந்தையை வளர்ப்பதாகும். குழந்தை பிறந்தவுடன் குழந்தைகளை பார்த்த தம்பதியினர் ஆசியாவின் அடையாளங்கள் எதுவுமில்லாததால் அதிர்ச்சியடைந்து புகாரளித்துள்ளனர். மேலும் அவர்கள் பெண் குழந்தையைப் பெற விரும்பியதால் ஆண் கருவை அகற்றுமாறு கூறியிருந்தனர். மருத்துவரும் ஆண் கருவை அகற்றியிருப்பதாக கூறியுள்ளனர். ஆனால் தற்போது அவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பெற்றெடுத்துள்ளனர். மேலும் அந்த இரு குழந்தைகளுக்கும் இடையேயும் எந்த வித தொடர்புமில்லாமல் இருக்கின்றன எனபதையும் வழக்கில் பதிவு செய்துள்ளனர்.