'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தை அடுத்து நடிகர் சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கும் 'மாநாடு' படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சிம்பு பிறந்தநாளை முன்னிட்டு வரும் பிப்ரவரி மாதம் 3ஆம் தேதி துவங்கவுள்ளது. சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற கதாபாத்திரங்கள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஆக்ஷன் கிங் அர்ஜூனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அதில் அர்ஜூன் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அர்ஜூன் ஏற்கனவே வெங்கட் பிரபு இயக்கத்தில் 'மங்காத்தா' படத்தில் போலீசாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.