'காவலன்' படத்திற்கு பிறகு இயக்குனர் சித்திக் நீண்ட நாட்களுக்கு பின் இயக்கியுள்ள படம் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்'. மலையாள ரீமேக்கான இப்படத்தில் நாயகனாக நடிகர் அரவிந்த் சாமியும் நாயகியாக அமலா பாலும் நடித்துள்ளனர். மேலும் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ், பேபி நைனிகா ஆகியோர் முக்கிய நடித்துள்ளார்கள். ரமேஷ் கண்ணா வசனம் எழுதியுள்ள இப்படம் வரும் மே 11ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இதன் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடந்தது. அப்போது இப்படம் குறித்தும், தன் வருங்கால படங்கள் குறித்தும் நடிகர் அரவிந்த் சாமி பேசும்போது, "அனைவரும் பேசியதுபோல இப்படம் பல தடைகளை தாண்டி விரைவில் வெளியாக இருக்கிறது. படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த முருகன் அவர்களுக்கு நன்றி. படத்தில் ரமேஷ் கண்ணா வசனம் அருமையாக எழுதியுள்ளார். சூரி, ரோபோசங்கர், ரமேஷ் கண்ணா அருமையான நகைச்சுவை காட்சிகளை கொடுத்துள்ளனர். நைனிகா, ராகவன் இரண்டு பேருமே முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து உள்ளனர். அமலா பால் ரொம்பவே நன்றாக நடித்துள்ளார். அம்ரேஷ் இசை, சித்திக் இயக்கம் எல்லாமே அருமையாக இருக்கிறது. தயாரிப்பாளர் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்தினை தெரிவித்து கொள்கிறேன்.
இப்படம் வரும் மே 11 ரிலீஸ் ஆகிறது,கண்டிப்பாக வெற்றியடையும் என்று நம்புகிறேன். நான் எப்போதும் வித்தியாசமான கதைகளில் நடிக்க ஆசைப்படுகிறேன். தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்தேன். அப்படத்தை தொடர்ந்து அந்த கதாபாத்திரம் போலவே பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், நான் அதுபோல் நடிக்க மறுத்துவிட்டேன். ஹீரோ, வில்லன் என்று இல்லாமல், நல்ல கதாபாத்திரம் அமைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். எனக்கு பிடிக்காதது ஹாரர் படம் தான். அதில் நடிக்க மாட்டேன். பார்க்கவும் மாட்டேன். முதலில் மனிதர்கள் இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு பின்னர் நல்ல மனிதரை தேடுவோம். அதன் பின் பேயை இருக்கா இல்லையா என்று தேடுவோம்" என்றார்.
'எனக்கு பிடிக்காதது ஹாரர் படம் தான்' - அரவிந்த்சாமி ருசிகரம்
சார்ந்த செய்திகள்
Next Story
'அரவிந்தசாமிக்கு எந்த கேரக்டர் கொடுத்தாலும் சிறப்பித்து விடக் கூடியவர்' - கள்ளபார்ட் இயக்குனர் புகழாரம்
மூவிங் பிரேம்ஸ் பட நிறுவனம் சார்பில் எஸ்.பார்த்தி எஸ்.சீனா இணைந்து தயாரிக்கும் படம் 'கள்ளபார்ட்'. அரந்த்சாமி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நாயகியாக ரெஜினா நடிக்கிறார். மேலும் ஹரிஷ் பெராடி, ஆதேஷ், பாப்ரிகோஷ், ராட்சசன் புகழ் பேபி மோனிகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை பி.ராஜபாண்டி இயக்குகிறார். வித்தியாசமான கதைக் களம் கொண்ட 'கள்ளபார்ட்' ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. மேலும் இப்படம் குறித்து இயக்குனர் ராஜபாண்டி பேசும்போது.... "அரவிந்த்சாமி எவ்வளவோ படங்களில் நடித்திருக்கிறார். அவருக்கு எந்த கேரக்டர் கொடுத்தாலும் சிறப்பித்து விடக் கூடியவர். இதில் அதிபன் என்கிற ஹார்ட்வேர் கதாபாத்திரம். நாம் என்ன சொல்கிறோமோ அதை அப்படியே உள் வாங்கி பிரதிபலிப்பார். அது ஸ்கிரீனில் இன்னும் பிரமிப்பை ஏற்படுத்தி விடும். கள்ள பார்ட் அவருக்கு சிகரமாய் இருக்கும். ரெஜினா டான்ஸ் டீச்சர் வேடம் ஏற்றிருக்கிறார். படம் வேகமாக வளர்ந்து வருகிறது. ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ளது" என்றார்.
Next Story
முடிவடையும் தருவாயில் அரவிந்த்சாமி, ரெஜினா நடிக்கும் 'கள்ளபார்ட்'
மூவிங் பிரேம்ஸ் பட நிறுவனம் சார்பில் எஸ்.பார்த்தி எஸ்.சீனா இணைந்து தயாரிக்கும் படம் 'கள்ளபார்ட்'. அரந்த்சாமி, ரெஜினா இணைந்து நடித்துள்ள இப்படத்தில் வில்லனாக புதுமுகம் பார்த்தி நடிக்கிறார். மேலும் ஹரிஷ் பெராடி, ஆதேஷ் பாப்ரிகோஷ், ராட்சசன் புகழ் பேபி மோனிகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். மேலும் நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கும் இப்படத்தை பி.ராஜபாண்டி இயக்கி வருகிறார். வித்தியாசமான கதைக் களம் கொண்ட கள்ள பார்ட் ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த படத்திற்காக ஏவி எம் ஸ்டூடியோவில் மிகப் பிரமாண்டமான மூன்று விதமான அரங்குகள் அமைக்கப்பட்டு 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. படத்தின் முக்கியமான ஆக்ஷன் காட்சிகள், செண்டிமெண்ட் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டது. மேலும் அரவிந்த்சாமி, ரெஜினா சம்பந்தப்பட்ட காட்சிகள் பெரும்பகுதி அங்கு படமாக்கப்பட்டது. மேலும் இன்னும் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடை பெற உள்ளது.