டிஜிட்டல் கட்டணங்களை குறைக்க வலியுறுத்தி கடந்த மார்ச் 1ஆம் தேதி ஆரம்பித்த சினிமா ஸ்ட்ரைக் தொடர்ந்து 45 நாட்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. இதனால் புதிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. மேலும் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளதால் சினிமா துறையே முடங்கியுள்ளது. மேலும் சினிமாவை நம்பி இருக்கும் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் தவித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் நாளை அரசு சார்பில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடக்கயிருக்கின்ற சமயத்தில் தற்போது நடிகர் அரவிந்த் சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார். அதில்..."நீண்டகால சினிமா ஸ்டிரைக்கால் சோர்வடைந்து வருகிறேன். மீண்டும் படப்பிடிப்புக்கு செல்ல வேண்டும். போராட்டத்தை முன்வைத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் என்ன முன்னேற்றம் கிடைத்துள்ளது என்பது எனக்கு தெரியாது. அனைவருமே விரைவில் பணிக்கு திரும்புவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. போராட்டத்தால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர், எனவே விரைவான தீர்மானங்களை கொண்டுவர வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.
எப்போதான் முடிப்பீங்க....??? - அரவிந்த் சாமி ட்வீட்
சார்ந்த செய்திகள்
Next Story
'அரவிந்தசாமிக்கு எந்த கேரக்டர் கொடுத்தாலும் சிறப்பித்து விடக் கூடியவர்' - கள்ளபார்ட் இயக்குனர் புகழாரம்
மூவிங் பிரேம்ஸ் பட நிறுவனம் சார்பில் எஸ்.பார்த்தி எஸ்.சீனா இணைந்து தயாரிக்கும் படம் 'கள்ளபார்ட்'. அரந்த்சாமி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நாயகியாக ரெஜினா நடிக்கிறார். மேலும் ஹரிஷ் பெராடி, ஆதேஷ், பாப்ரிகோஷ், ராட்சசன் புகழ் பேபி மோனிகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை பி.ராஜபாண்டி இயக்குகிறார். வித்தியாசமான கதைக் களம் கொண்ட 'கள்ளபார்ட்' ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. மேலும் இப்படம் குறித்து இயக்குனர் ராஜபாண்டி பேசும்போது.... "அரவிந்த்சாமி எவ்வளவோ படங்களில் நடித்திருக்கிறார். அவருக்கு எந்த கேரக்டர் கொடுத்தாலும் சிறப்பித்து விடக் கூடியவர். இதில் அதிபன் என்கிற ஹார்ட்வேர் கதாபாத்திரம். நாம் என்ன சொல்கிறோமோ அதை அப்படியே உள் வாங்கி பிரதிபலிப்பார். அது ஸ்கிரீனில் இன்னும் பிரமிப்பை ஏற்படுத்தி விடும். கள்ள பார்ட் அவருக்கு சிகரமாய் இருக்கும். ரெஜினா டான்ஸ் டீச்சர் வேடம் ஏற்றிருக்கிறார். படம் வேகமாக வளர்ந்து வருகிறது. ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ளது" என்றார்.
Next Story
முடிவடையும் தருவாயில் அரவிந்த்சாமி, ரெஜினா நடிக்கும் 'கள்ளபார்ட்'
மூவிங் பிரேம்ஸ் பட நிறுவனம் சார்பில் எஸ்.பார்த்தி எஸ்.சீனா இணைந்து தயாரிக்கும் படம் 'கள்ளபார்ட்'. அரந்த்சாமி, ரெஜினா இணைந்து நடித்துள்ள இப்படத்தில் வில்லனாக புதுமுகம் பார்த்தி நடிக்கிறார். மேலும் ஹரிஷ் பெராடி, ஆதேஷ் பாப்ரிகோஷ், ராட்சசன் புகழ் பேபி மோனிகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். மேலும் நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கும் இப்படத்தை பி.ராஜபாண்டி இயக்கி வருகிறார். வித்தியாசமான கதைக் களம் கொண்ட கள்ள பார்ட் ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த படத்திற்காக ஏவி எம் ஸ்டூடியோவில் மிகப் பிரமாண்டமான மூன்று விதமான அரங்குகள் அமைக்கப்பட்டு 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. படத்தின் முக்கியமான ஆக்ஷன் காட்சிகள், செண்டிமெண்ட் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டது. மேலும் அரவிந்த்சாமி, ரெஜினா சம்பந்தப்பட்ட காட்சிகள் பெரும்பகுதி அங்கு படமாக்கப்பட்டது. மேலும் இன்னும் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடை பெற உள்ளது.