Skip to main content

யானை மேல் இருந்து கீழே விழுந்து பிக்பாஸ் ஆரவ் காயம் !

Published on 11/02/2019 | Edited on 11/02/2019
Arav

 

 

பிக்பாஸிற்கு பிறகு நடிகர் ஆரவ் சுரபி பிலிம்ஸ் சார்பில் எஸ்.மோகன் தயாரிக்கும் 'ராஜபீமா' படத்தில் நடித்து வருகிறார். இது ஒரு விலங்கு சார்ந்த திரைப்படமாக வளர்ந்துவருகிறது. இப்படத்தில் நடிகர் ஆரவ் உடன் ஒரு யானையும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது. படத்தின் முக்கியமான காட்சிகளை தாய்லாந்திலும், ஒரு சில காட்சிகளை பொள்ளாச்சியிலும் படம் பிடித்துள்ளனர். மேலும் கடந்த 7 நாட்களாக கஞ்சன்புரியின் அடர்ந்த காடுகளில், மற்றும் ஓங்கி வளர்ந்த ராட்சச மரங்கள் இடையேயும் படமாக்கி வருகின்றனர். இதில் நடிகர் ஆரவ் மற்றும் பீட்டர் எனும் யானை சம்மந்தப்பட்ட காட்சிகளை படம் பிடித்த பொழுது, துருதிருஷ்டவசமாக யானை மேல் இருந்து கீழே விழுந்தார் ஆரவ். படப்பிடிப்பு குழுவினர் மருத்துவ உதவியை உடனே நாடினர். எனினும் சுதாரித்து கொண்ட ஆரவ் தயாரிப்பு தரப்பிலிருந்து முதலுதவி வருவதற்குள் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். மேலும் இதுகுறித்து பட தயாரிப்பாளர் மோகன் பேசும்போது... "இதுவே அவரின் அர்பணிப்பையும் பேரார்வத்தையும் காட்டுகிறது. இன்னும் 7 நாட்களில் முதற்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நிறைவுபெரும். சென்னையில் கடைசி கட்ட படப்பிடிப்பு எஞ்சியுள்ள நிலையில் ராஜபீமா கோடை விருந்தாக திரைக்கு வரும்" என்றார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பிக்பாஸ் ஆரவ்வுக்கு திருமணம்! பொண்ணு ஓவியா இல்லையாம்!!

Published on 27/08/2020 | Edited on 27/08/2020
shs

 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் ஆரவ், சரண் இயக்கத்தில் வெளியான 'மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். இதையடுத்து 'ராஜபீமா' படத்தில் நாயகனாக நடித்துவரும் அவருக்கு திருமணம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கெளதம் மேனன் இயக்கி வரும் 'ஜோஷ்வா' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகும் நடிகை ராஹியை ஆரவ் மனக்கவுள்ளதாக கூறப்படுகிறது. நீண்ட காலமாக காதலித்துவரும் ஆரவ் - ராஹி இருவரும் வரும் செப்டம்பர் 6-ம் தேதி சென்னையில் திருமணம் செய்யவுள்ளதாகவும், கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் தமிழ்த் திரையுலகினருக்காக வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தவும் ஆரவ் - ராஹி ஜோடி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே பிக்பாஸ் மூலம் காதலர்கள் எனக் கூறப்பட்ட ஆரவ் - ஓவியா இருவரும் ஒரே வீட்டில் வசிப்பதாகச் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.


 

Next Story

அஜித்தின் ஆதர்ச இயக்குனருடன் பிக்பாஸ் ஆரவ்... 

Published on 02/05/2019 | Edited on 02/05/2019

காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம், அசல் என்று நான்கு படங்கள் அஜித்தை வைத்து இயக்கியவர் சரண். இவர் கடைசியாக ‘ஆயிரத்தில் இருவர்’என்றொரு படத்தை இயக்கி இருந்தார். நடிகர் வினய் நடித்திருந்த இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
 

arav


அடுத்து இயக்குனர் சரண் எந்த படத்தை இயக்கப்போகிறார் என்று எதிர்பார்த்த நிலையில் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் என்று படத்தை இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்துள்ளது. 
 

பிக்பாஸ் முதல் சீசனின் வெற்றியாளர் ஆரவ்தான் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். அவருடன் ராதிகா சரத்குமார், ஜோடியாக காவ்யா தாப்பர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். போஸ்டரில் ராதிகா சிகார் பிடிப்பது போன்று போஸ் கொடுக்கிறார். இதை போலவே அஜித்தின் அசல் பட போஸ்டரில் சிகார் பிடிப்பது போல போஸ் கொடுப்பார் அஜித்.
 

devarattam


படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இன்று உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.சுரபி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் ஆகஸ்ட் மாதத்தில் திரைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.