Skip to main content

கலைநிகழ்ச்சி மூலம் கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதியை கஜா புயல் நிவாரணத்திற்கு வழங்கும் ஏ.ஆர்.ரஹ்மான்

Published on 21/11/2018 | Edited on 21/11/2018
ar rahman

 

 

 

கஜா புயல் தாக்கியதில் தமிழக டெல்டா பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை திரையுலகை சேர்ந்த நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் சார்பில் ரூ.50 லட்சமும், விஜய் சேதுபதி ரூ.25 லட்சமும், சிவகார்த்திகேயன் ரூ.20 லட்சமும், ரஜினிகாந்த் மக்கள் மன்றம் சார்பில் ரூ.50 லட்சமும், வைரமுத்து சார்பில் ரூ.5 லட்சமும், விஜய் ரசிகர் மன்றம் சார்பாக ரூ.6.5 லட்சமும், லைகா நிறுவனம் சார்பில் 1,01,00,000 ரூபாயும்,  சீயான் விக்ரம் ரூ.25 லட்சமும் நிவாரணம் வழங்கியுள்ளனர். இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் நிவாரண உதவியை அறிவித்துள்ளார். இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்... "கனடாவில் உள்ள துரந்தோவில் வரும் டிசம்பர் 24ஆம் தேதி, தான் நடத்தும் இசை நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதியை முழுமையாக கஜா புயல் நிவாரணத்திற்கு வழங்குவேன்" என்று பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்