ADVERTISEMENT

பார்த்திபனின் வித்தியாச முயற்சிக்கு பாராட்டு தெரிவித்த ஏ.ஆர். ரஹ்மான்!

11:51 AM Oct 25, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

‘ஒத்த செருப்பு’ என்ற வித்தியாசமான படத்தை இயக்கி பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருந்தார் இயக்குநரும் நடிகருமான பார்த்திபன். படம் முழுவதும் தனி ஒருவராக திரையில் தோன்றி பார்த்திபன் நடித்த இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த வரவேற்பைத் தொடர்ந்து, ‘ஒத்த செருப்பு’ தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுவருகிறது.

இந்த நிலையில், பார்த்திபனின் அடுத்த படமாக ‘இரவின் நிழல்’ உருவாகிவருகிறது. இப்படம் முழுவதும் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கான படப்பிடிப்பு நிறைவுபெற்றதையடுத்து, இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இந்த நிலையில், பின்னணி இசை கோர்ப்பு பணியின்போது ‘இரவின் நிழல்’ படத்தைப் பார்த்துவிட்டு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வெகுவாகப் பாராட்டியதாக பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இரவின் நிழல் - இன்று இசை புயல் ஏ.ஆர்.ஆரின் பின்னணி இசை கோர்ப்பு இனிதே துவங்கியது. முழு படத்தை முதலில் பார்த்ததே ஆஸ்கார்தான். இது சிங்கிள் ஷாட் முதல் படம் மட்டுமல்ல; முதன்மையான படமாகவும் உதாரண படமாகவும் இருக்கும் - பாராட்டி கீபோர்டில் விரல் ஓட்டினார் - வைரல் ஆகப்போகும் இசை பிரளயத்திற்காக" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT