Advertisment

காரில் வந்து ஆட்டோவில் சென்ற ஏ.ஆர். ரஹ்மான்

ar rahman in dhargha santhanakoodu festival

Advertisment

சென்னை அண்ணா சாலையில் ஹஸ்ரத் சையத் மூஸா ஷா காதரி தர்காவில் ஆண்டுதோறும் சந்தனக்கூடு கந்தூரி மற்றும் ஆண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு நடந்த சந்தனக்கூடு கொடியேற்றும் விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் தலைமை காஜி முகமது அக்பர் சாஹிப் நேற்று இரவு கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், இந்தாண்டிற்கான சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக ஏ.ஆர். ரஹ்மான் தனது சொகுசு காரில் வருகை தந்துள்ளார். பின்பு திருவிழாவில் கலந்துகொண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார். அப்போது அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர்.

பின்பு தன் காருக்குச் செல்ல ஏ.ஆர். ரஹ்மான் முற்பட்டபோது ரசிகர்கள் குவிந்து கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் தனது காரில் செல்லாமல்அவ்வழியே வந்த ஆட்டோவில் ஏறி ஏ.ஆர். ரஹ்மான் சென்றார்.

ar rahman
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe