பிரபல திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் (வயது 54) மாரடைப்பால் காலமானார். இயக்குநர் கே.வி.ஆனந்துக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக, அவர் உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், இன்று (30/04/2021) அதிகாலை 03.00 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இயக்குநர் கே.வி.ஆனந்த் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில்...
"பெரும் திறமைகொண்ட ஒளிப்பதிவாளர் - இயக்குநர் கே.வி.ஆனந்த் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையை தருகிறது. திரை உலகின் பேரிழப்பு" என பதிவிட்டுள்ளார்.