Skip to main content

“தமிழக அரசிடம் மன்னிப்பு கேட்க முடியாது” - ஏ.ஆர். முருகதாஸ்

Published on 28/11/2018 | Edited on 28/11/2018

 

சர்கார் படத்தில் இலவசங்களை விமர்சித்த காரணத்திற்காக ஏ.ஆர். முருகதாஸ் மீது தேவராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதனால் முருகாதாஸ் கைது செய்யாமல் இருப்பதற்காக முன் ஜாமீன் கோரி இருந்தார். இன்று நடந்த இவ்வழக்கில், “அரசின் நலத்திட்டங்களை விமர்சித்தற்காக தமிழக அரசிடம் மன்னிப்பு கேட்க முடியாது. இனி வரும் படங்களில் விமர்சிக்க மாட்டேன் என்று உத்தரவாதமும் தர முடியாது. படத்தில் காட்சிகளை அமைப்பது எனது கருத்து சுதந்திரம்” என்று ஏ.ஆர் முருகதாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

டிசம்பர் 13ஆம் தேதி மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. அதுவரை இயக்குனர் முருகதாஸை கைது செய்ய தடை விதித்துள்ளது உயர்நீதிமன்றம். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சர்கார் பட விவகாரம்; ஏ.ஆர். முருகதாஸ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு...

Published on 26/07/2021 | Edited on 26/07/2021

 

High Court Cancelled case on Murugadoss basses on Supreme Court Order

 

சர்கார் பட விவகாரம் தொடர்பாக  இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான சர்கார் திரைப்படத்தில் தமிழக அரசையும், அரசால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவசத் திட்டங்களையும் கடுமையாக விமர்சிக்கும் காட்சிகள் அமைக்கப்பட்டன. இதனால் அரசின் திட்டங்களைத் தவறாகக் குறிப்பிடுவதாக படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் தேவராஜன் என்பவர் அளித்த புகாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

இந்த வழக்கில் ஏ.ஆர்.முருகதாஸ்க்கு முன் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் கடந்த 2018ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதில், தனக்கு எதிரான புகார், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அளிக்கப்பட்டதாகவும், அதனால் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

 

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி தண்டபாணி பிறப்பித்த உத்தரவில், திரைப்படம் தணிக்கை முடிந்த பிறகு தான் வெளியிடப்பட்டுள்ளது. தணிக்கை முடிந்த திரைப்படம் குறித்து தனி நபர் அல்லது அரசு கேள்வி எழுப்ப அல்லது வழக்குப் பதிவு செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை சூட்டிகாட்டிய நீதிபதி, அரசியலமைப்பு வழங்கிய பேச்சுரிமை எதிராகப்  பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை ரத்து செய்வதாக தன்னுடைய உத்தரவில் தெரிவித்துள்ளார்.

 


 

Next Story

பின்னாடி ஜெயலலிதா ஃபோட்டோ, 'டயரை நக்கி...' என்று வசனம்... இந்தப் படம் என்ன பிரச்சனையை கிளப்பப்போகுதோ? 

Published on 26/11/2018 | Edited on 26/11/2018

பாபி சிம்ஹா, ரம்யா நம்பீசன், எம்.எஸ்.பாஸ்கர், இன்னும் பலரது நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் 'அக்னிதேவ்'. ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தில் 'ரோஜா' புகழ் மதுபாலா ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். ஜெபிஆர், ஷாம் சூர்யா இருவரும் இணைந்து இயக்கியுள்ள இந்தப் படம் பிரபல நாவல் எழுத்தாளர் இராஜேஷ்குமாரின் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் வசனங்களை பிரபல திரைப்பட விமர்சகரும், திரைக்கதை ஆலோசகருமான 'கருந்தேள்' ராஜேஷ் எழுதியுள்ளார். சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ட்ரைலர் யூ-ட்யூப் ட்ரெண்டில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது. பெரிய நட்சத்திரங்கள் யாருமில்லாத இந்தப் படத்தின் ட்ரைலர் இந்த வரவேற்பைப் பெற முக்கிய காரணம் என்ன தெரியுமா? மதுபாலா நடித்துள்ள பாத்திரமும், அந்தப் பாத்திரம் பேசும் வசனங்களும்தான்.

 

agnidev madhubala



‘சகுந்தலா தேவி’ என பெயரிடப்பட்டுள்ள அந்தப் பாத்திரம் ஒரு கர்வமும் ஆணவமும் கொண்ட பெண் அரசியல்வாதியாக உருவாக்கப்பட்டுள்ளது. 'உன்னை மாதிரி ஆம்பளைங்க எத்தனை பேரை காலுக்குக் கீழ போட்டு நசுக்கி இந்த இடத்துக்கு வந்துருக்கேன் தெரியுமா' என்று கடுமையான குரலில் பேசுகிறார் மதுபாலா. 'சின்ன சின்ன ஆசை, சிறகடிக்கும் ஆசை' என்று ஆடிய மதுபாலாவா இது என்னும் அளவுக்கு டெரராக இருக்கிறார் மதுபாலா. 'அரசியல்ல கனவுல வர்ற எதிரியைக் கூட நெஜத்துல இல்லாம பண்ணிடுவேன்' என்று வேறு மிரட்டுகிறார்.

இதற்கெல்லாம் மேலாக, 'என் வீல் சேர் டயரை நக்கிட்டு கெடக்குறதா இருந்தா கெடங்க' என்று ஒரு வசனம் இருக்கிறது. 'டயரை நக்கி' என்ற வார்த்தைகள் இணையத்தில் பிரபலம். 'குனிஞ்சு குனிஞ்சு கும்பிடு போட்டா அப்படியே நம்பிடுவேன்னு நெனச்சியா?' என்ற வசனம் அதிமுகவில் ஜெயலலிதாவுக்குக் குனிந்து கும்பிடு போட்ட கட்சிக்காரர்களை குறிப்பிடுவதாக இணையத்தில் கமெண்டுகள் குவிந்துள்ளன. அந்தக் காட்சியில் மதுபாலாவின் பின்னணியில் ஜெயலலிதாவின் இளமைக் கால ஃபோட்டோ இருப்பது இன்னும் அதிக ஆர்வத்தையும் சந்தேகத்தையும் உண்டாக்குவதாக இருக்கிறது. அந்த ஜெயலலிதா புகைப்படம் அவர் அரசியலுக்கு வந்த புதிதில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

madhubala agnidev



ஏற்கனவே 'சர்கார்' திரைப்படத்தில் 'கோமளவள்ளி' என்ற பெயர் ஜெயலலிதாவை குறிப்பதாக இருப்பதாகவும் வேறு சில காட்சிகள் அதிமுகவினரையும் அரசையும் இழிவுபடுத்துவதாகவும் கூறி, கடும் எதிர்ப்பைக் காட்டி திரையரங்குகள் முன் இருந்த விஜய் பேனர்களை சூறையாடினர் அதிமுகவினர். பின்னர், சில காட்சிகள் நீக்கப்பட்ட பின்பே எதிர்ப்புகள் அடங்கின. இப்போது, 'அக்னிதேவ்' படத்தில் இடம் பெற்றிருக்கும் காட்சிகள் எப்படி புரிந்துகொள்ளப்படும், என்ன விளைவுகள் வரும் என்று ட்ரைலரைப் பார்த்த ரசிகர்கள் கேள்வியுடன் இருக்கிறார்கள். திரைப்படங்களை, கற்பனை படைப்புகளாகப் பார்த்து விட்டுவிடாமல் அதில் வரும் காட் படக்குழுவினர் இதைப் பற்றி கவலைப்படாமல் ட்ரைலர் ட்ரெண்டான மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.