ADVERTISEMENT

“அந்த நாளிற்காக காத்துக்கொண்டிருக்கிறேன்”- ஹைதரபாத் என்கவுண்டர் குறித்து ஏ.ஆர். முருகதாஸ்

11:14 AM Dec 06, 2019 | santhoshkumar

கடந்த 27ஆம் தேதி ஐதராபாத்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையிஸ் அருகே பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய முகமது பாஷா, சிவா, நவீன், சென்ன கேசவுலு என்ற நான்கு பேரை சிசிடிவி கேமரா உதவியுடன் காவல்துறையினர் கைது செய்தனர்.

ADVERTISEMENT


இந்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று நாடு முழுவதும் கோரிக்கை வலுத்து வந்தநிலையில், இன்று அந்த நான்கு பேரும் காவல்துறையினரால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். குற்றம் நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்ற போது தப்பிக்க முயன்றதால் என்கவுண்டர் செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தெரிவித்துள்ள ஹைதராபாத் காவல்துறையினர், "பெண் மருத்துவர் எப்படி கொலை செய்யப்பட்டார் என்பதை நடித்துக்காட்ட குற்றவாளிகள் நான்கு பேரையும் சிறப்புப்படை போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு கூட்டி சென்றுள்ளனர். அப்போது 4 பேரும் ஒரு போலீசாரிடம் இருந்து துப்பாக்கியை பறித்து, தாக்கி விட்டு தப்ப முயன்றுள்ளனர். இதனை அடுத்து போலீசார் அவர்களை சரணடையுமாறு கூறினர். ஆனால், அவர்கள் அங்கிருந்து ஓட முயற்சித்ததும் வேறு வழியின்றி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்" என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT


இந்நிலையில் இதுகுறித்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ட்விட்டரில், “அவர்கள் எடுத்த நடவடிக்கைக்கு ஹைதராபாத் காவல்துறைக்கு என்னுடைய சல்யூட். இந்தியாவில் அனைத்து பெண்களும் பதுகாப்புடன் வாழலாம் என்று உணரும் அந்த நாளிற்காக காத்துக்கொண்டிருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

ஏ.ஆர். முருகதாஸ் தற்போது ரஜினியை வைத்து தர்பார் என்னும் படத்தை இயக்கி வருகிறார். இதன் ஷூட்டிங் முடிவடைந்து, படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுவருகிறது குறிப்பிடத்தக்கது.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT