Skip to main content

"இந்திய அளவில் ஒரு பயோ பிக் எடுக்கலாம்" - முதல்வர் வாழ்க்கை வரலாறு குறித்து ஏ.ஆர். முருகதாஸ்

Published on 11/03/2023 | Edited on 11/03/2023

 

ar murugadoss about cm mk stalin photography exhibition

 

முதல்வர் ஸ்டாலினின் 70-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் சேகர் பாபு ஏற்பாட்டில் வடசென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் 'எங்கள் முதல்வர்; எங்கள் பெருமை' என்கிற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த புகைப்படக் கண்காட்சியை நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் திறந்து வைத்திருந்த நிலையில் பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் வந்து பார்வையிட்டு வருகின்றனர். 

 

அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் இந்த புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டு, தன்னுடைய அனுபவங்களை செய்தியாளர்களிடம் சொன்னார். அவருடன் நடிகர் யோகிபாபுவும் கலந்துகொண்டு பார்வையிட்டார். இந்த நிலையில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தற்போது இந்த கண்காட்சியை பார்த்து ரசித்துள்ளார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மிக பெரிய தமிழின தலைவனின் மகனாக இருந்தபோதிலும் தனக்கென ஒரு வரலாற்றை உருவாக்கியுள்ளார். இது தமிழகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும், உலகத்தில் வாழும் அனைத்து இந்தியர்களுக்கும் தெரியும். நாம் எல்லாம் அறிந்திருந்த விஷயத்தை இந்த புகைப்பட கண்காட்சியில் பார்த்தது அவரோடு நாம் பயணித்த ஒரு  உணர்வை நமக்கு தருகிறது. அவர் மேல் மிகப்பெரிய மரியாதையும் உண்டாகிறது. இதனை தமிழகத்தில் இருக்கும் அத்தனை பேரும் குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்க்க வேண்டும்" என்றார். 

 

பின்பு செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர், "தமிழகம் தமிழ்நாடாக மாறியதற்கு நிறைய போராட்டங்கள் இருக்கிறது. அதற்கு உயிர் நீத்த பெருந்தலைவர்கள் இருக்கிறார்கள். அதை நம் முதல்வர் அவ்வளவு எளிதாக யாருக்கும் விட்டு தரமாட்டார். அதனை காணொளியாக சட்ட சபையில் பார்த்தோம். இப்பொழுதும் எப்பொழுதும் தமிழ்நாடு என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. இந்த கண்காட்சியில் இருக்கும் வரலாற்று பதிவுகளை நிச்சயமாக இந்திய அளவில் ஒரு பயோ பிக்காக எடுக்க முடியும். அதற்கான அத்தனை அம்சங்களும் இதில் இருக்கிறது" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிவகார்த்திகேயன் படத்தில் இணையும் மலையாள பிரபலம் 

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
biju menon to join sivakarthikeyan ar murugadoss movie

சிவகார்த்திகேயன் தற்போது கமல்ஹாசன் தயாரிக்கும் அமரன் படத்தில் நடித்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். தமிழக ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் காஷ்மீரில் கொல்லப்பட்ட சம்பவத்தை வைத்து உருவாகும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது படத்திலும் நடித்து வருகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார். அனிருத் இசைப்பணிகளை மேற்கொள்கிறார். ஸ்ரீலக்ஷ்மி மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் பூஜையுடன் தொடங்கியது. பின்பு சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தி தற்போது மீண்டும் சென்னையில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. 

biju menon to join sivakarthikeyan ar murugadoss movie

இப்படத்தில் மோகன் லால் மற்றும் துப்பாக்கி பட வில்லன் வித்யுத் ஜம்வல் நடிப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் மலையாள நடிகர் பிஜூ மேனன் இப்படத்தில் இணைந்துள்ளதாக மேலும் ஒரு தகவல் வெளியகியுள்ளது. பிஜூ மேனன், தமிழில் மஜா, தம்பி, பழனி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 2010ஆம் ஆண்டு கிஷோர் நடிப்பில் வெளியான போர்க்களம் படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு எந்தத் தமிழ் படத்திலும் நடிக்காமல் இருந்த நிலையில் இப்படம் மூலம் 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

Next Story

ஏ.ஆர். முருகதாஸ் - சிவகார்த்திகேயன் பட அப்டேட்

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
sivakarthikeyan ar murugadoss movie update

சிவகார்த்திகேயன் தற்போது கமல்ஹாசன் தயாரிக்கும் அமரன் படத்தில் நடித்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். தமிழக ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் காஷ்மீரில் கொல்லப்பட்ட சம்பவத்தை வைத்து உருவாகும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது படத்திலும் நடித்து வருகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார். அனிருத் இசைப்பணிகளை மேற்கொள்கிறார். படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் பூஜையுடன் தொடங்கியது.

முதற்கட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கி பாண்டிச்சேரியில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் சிவகார்த்திகேயன் வித்தியாசமான லுக்கில் தோன்றுகிறார்.