Skip to main content

பிரம்மாண்ட படத்தைத் தயாரிக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்!

Published on 13/04/2021 | Edited on 13/04/2021

 

A.R. Murugadoss

 

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ஏ.ஆர்.முருகதாஸ், பாலிவுட் தயாரிப்பாளர் ஓம் பிரகாஷ் பட்டுடன் இணைந்து '1947' என்கிற பிரம்மாண்ட திரைப்படத்தைத் தயாரிக்கிறார். இப்படத்தை பொன் குமரன் இயக்குகிறார். கன்னடத்தில் பிரபல இயக்குநரான இவர், தமிழில் 'சாருலதா' என்ற படத்தை இயக்கியுள்ளார். மேலும் ரஜினிகாந்த நடிப்பில் உருவான 'லிங்கா' திரைப்படத்துக்கு கதை, வசனம் எழுதியுள்ளார்.

 

தற்போது, இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 5 மொழிகளில் உருவாகும் படம் என்பதால் நடிகர், நடிகை தேர்வில் படக்குழு தீவிர கவனம் செலுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பானது விரைவில் தொடங்க உள்ளது.

 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க திட்டமிட்டுள்ள அடுத்த படத்திற்கான கதை உருவாக்கும் பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளதாகவும் விரைவில் முருகதாஸின் அடுத்த படம் குறித்த அறிவிப்பும் வெளியாகலாம் என்கின்றனர் நமக்கு நெருங்கிய சினிமா வட்டாரங்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்த ஏ.ஆர். முருகதாஸ்!

Published on 14/05/2021 | Edited on 14/05/2021

 

A.R. Murugadoss

 

இந்தியாவில் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழகத்திலும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ள தமிழக அரசு, தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளது. ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகளை அமைத்தல், ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்கள், ஆர்.டி.பி.சி.ஆர். கிட்டுகள், உயிர்காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள் உள்ளிட்ட பிற மருத்துவக் கருவிகளை வாங்குதல் எனத் தற்போதைய சூழலை எதிர்கொள்ள தமிழக அரசிற்கு பெரிய அளவில் நிதித் தேவை ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்கும் விதமாக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குமாறு பொதுமக்கள், சமூகநல அமைப்புகள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து, பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் தங்களால் இயன்ற அளவுக்கு நிதியுதவி அளித்துவருகின்றனர்.

 

அந்த வகையில், முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் ரூ. 25 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்த ஏ.ஆர். முருகதாஸ், அதற்கான காசோலையை அவரிடம் வழங்கினார். இதையடுத்து, சமூக வலைதளங்களில் ஏ.ஆர். முருகதாஸிற்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.

 

 

Next Story

'ஒரிஜினலாவே நான் வில்லன் மா'- ரஜினியின் 'தர்பார்' டிரெய்லர் வெளியீடு!

Published on 16/12/2019 | Edited on 16/12/2019

ரஜினிகாந்த் நடித்துள்ள 'தர்பார் படத்தின்' டிரெய்லர் மும்பையில் நடந்த விழாவில் வெளியிடப்பட்டது. லைகா நிறுவனம் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ், தம்பி ராமையா உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள தர்பார் திரைப்படம் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது. 
 

actor rajini kanth darbar trailer launch at mumbai

இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார். 'ஒரிஜினலாவே நான் வில்லன் மா' என்று ரஜினி பேசும் வசனம் தர்பார் ட்ரெய்லரில் இடம் பெற்றுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் தர்பார் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.