Skip to main content

'எங்க வீட்டு மாப்பிள்ளை' அபர்ணதியுடன் இணையும் இசையமைப்பாளர்! 

Published on 25/05/2018 | Edited on 26/05/2018

தற்போது பிசி நாயகனாக வலம் வந்துகொண்டிருக்கும் ஜி.வி பிரகாஷ் அடுத்ததாக அங்காடித்தெரு, வெயில், அரவான், காவியத்தலைவன் படங்களை இயக்கிய வசந்தபாலன் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஓல்டு மகாபலிபுரம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு அரங்கமைப்பில் பூஜையுடன் இன்று தொடங்கியது. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் ‘பள்ளிப்பருவத்திலே’ நாயகன் நந்தன் ராம், ‘பசங்க’ நாயகன் பாண்டி,  ஆர்யாவுடன் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான அபர்ணதி கதாநாயகியாக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா நடிக்கிறார். இவர்களுடன் ஜெனிஃபர், மணிமேகலை, பாகுபலி வில்லன் பிரபாகர் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இன்று தொடங்கிய படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

அர்ஜுன் பேசிய வசனங்களை நான் பேசி இருந்தால் சிரித்து இருப்பார்கள் - ஆர்யா  

Published on 24/05/2018 | Edited on 26/05/2018
arya


எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி மூலம் சர்ச்சைகளை ஏற்படுத்திய நடிகர் அடுத்ததாக கஜினிகாந்த், சந்தனதேவன் ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இப்படங்களின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வரும் நிலையில் தன்னால் ஏற்பட்ட சர்ச்சைகள் பற்றியும், தான் நடித்திருக்க வேண்டிய படத்தை பற்றியும் மனம் திறந்த ஆர்யா.... "எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி மற்ற நிகழ்ச்சியை போன்றது அல்ல. என் சொந்த வாழ்க்கையை பாதிக்கும் அளவுக்கு முக்கியமான நிகழ்ச்சி என்பது தெரிந்தேதான் ஒப்புக்கொண்டேன்.நீங்கள் டிவியில் பார்த்தது குறைவுதான். கேமராவுக்கு பின்பு நடந்த நிறைய சம்பவங்கள் என்னை அப்படி ஒரு முடிவு எடுக்க வைத்தது. இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை இயக்கிய சந்தோஷ் இயக்கத்தில் நடிப்பதால் அடல்ட் படத்தில் நடிப்பீர்களா என்று கேட்கிறீர்கள். 'ஏ' சான்றிதழ் வாங்கும் படங்களில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை. நடிக்கவும் மாட்டேன். இரும்புத்திரையில் அர்ஜுன் செய்த அந்த வேடத்தின் முக்கியத்துவம் கருதியே நான் மறுத்தேன். அர்ஜுன் பேசிய வசனங்களை நான் பேசி இருந்தால் மக்கள் சிரித்து இருப்பார்கள்" என்றார். 

Next Story

"அது எங்க வீட்டு மாப்பிள்ளை இல்லை, ஏமாத்துன மாப்பிள்ளை" - ஆர்யாவை விமர்சித்த தொகுப்பாளர்!

Published on 25/04/2018 | Edited on 27/04/2018
arya


சமீபத்தில் தமிழில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி சேனலில் 'எங்க வீட்டு மாப்பிள்ளை' என்ற ரியாலிட்டி ஷோ நடந்து வந்தது. அதில் நடிகர் ஆர்யா பங்குபெற்று தனக்கான மனப்பெண்ணை தேர்வு செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சில மாதங்களாக நடந்து வந்த இந்த நிகழ்ச்சியின் முடிவில் நடிகர் ஆர்யா அதில் பங்குபெற்ற எந்த பெண்ணையும் தேர்ந்தெடுக்காமல் அனைவருக்கும் ஏமாற்றமளித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பலரும் இந்த நிகழ்ச்சிக்கு கடும் கண்டனங்கள் தெரிவித்து வந்தனர். மேலும் பல பெண்கள் அமைப்புகள் சார்பாக ஆர்யா மீதும், அந்த நிகழ்ச்சி மீதும் வழக்குகளும் தொடரப்பட்டன. 

 

இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பின் போதும் பின்னர் சர்ச்சைகளாலும் சில காலம் வெளியே வராமல் இருந்த ஆர்யா, இன்று நடைபெற்ற 'மிஸ்டர் சந்திரமெளலி' பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அந்த நிகழ்ச்சியில் ஆர்யாவுடன் படக்குழுவினர், சூர்யா, விஷால், சாந்தணு, இயக்குநர்கள் சுசீந்திரன், கவுரவ் நாராயணன், கார்த்திக் முத்துராமன், நண்டு ஜெகன், உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். அப்போது பலரும் ஆர்யா பங்குபெற்ற 'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியில் ஆர்யாவின் முடிவை பயங்கரமாக கிண்டல் செய்தனர்.

 

 

அப்போது நடிகர் கார்த்திக் இந்த நிகழ்ச்சி குறித்து பேசும்போது, "சீக்கிரமே நீங்க (ஆர்யா) கல்யாணம் பண்ண போறீங்க... வாழ்த்துக்கள்" என்று சொல்ல அப்போது நண்டு ஜெகன் குறுக்கிட்டு, "ஆர்யா அதில் எந்த பெண்ணையும் தேர்வு செய்ய வில்லை" என சொல்லி மேலும் அது... "எங்க வீட்டு மாப்பிள்ளை இல்லை, ஏமாத்துன மாப்பிள்ளை" என்று ஆர்யாவை கிண்டல் செய்தார். மீண்டும் நடிகர் கார்த்திக் பேசும்போது... "அந்த நிகழ்ச்சி உண்மையில் பெண் பார்க்கும் படலமா அல்லது வெறும் கண் துடைப்புக்கான நிகழ்ச்சியா?" என்று கேட்க, அதற்கு மீண்டும் குறுக்கிட்ட நண்டு ஜெகன்... "அதில் வரும் அனைத்தும் உண்மை தான்..ஆனால் ஆர்யா அதில் பங்கேற்ற பெண்ணை தேர்ந்தெடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்" என்றார். 

 

 

 

இதையடுத்து நடிகர் விஷால் இது குறித்து பேசும்போது.. "நானும், நடிகர் கார்த்திக் அவர்களும் அந்த நிகழ்ச்சியில் உண்மையில் பெண் பார்க்கிறீர்களா இல்லையா என்று பல முறை கேட்டிருக்கிறோம். அதற்கு இது வரை எங்களுக்கே பதில் தெரியவில்லை. அந்த நிகழ்ச்சியில் உண்மையில் என்ன நடந்தது என்று ஆர்யா தான் கூற வேண்டும். அவர் எப்பொழுதும் சும்மா செய்யும் வேலையை அந்த நிகழ்ச்சியில் காசு கொடுத்து செய்ய வைத்திருக்கிறார்கள்" என்று கிண்டலாக கூறினார்.   

 

இவ்வாறு திரைப்பட நட்சத்திரங்கள் ஜாலியாக எடுத்துக்கொண்ட நிகழ்ச்சியை உண்மையென நம்பிப்  பார்த்தவர்கள்தான் பாவம் போல...