Advertisment

“கற்றதை மறந்து முற்றிலும் புதிதாக கற்கிறோம்”- அனுஷ்கா உருக்கம்! 

கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு 21 நாட்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.இதனால் மக்கள் யாரும் அத்தியாவசியத்தேவையாக இருந்தால் மட்டுமே வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Advertisment

rree

இந்நிலையில் நடிகை அனுஷ்கா சமூக வலைத்தளத்தில் நீண்ட பதிவு ஒன்று பதிவிட்டுள்ளார். அதில்,''வாழ்க்கையில் நாம் கற்றுக்கொண்டதையெல்லாம் மறந்து, முற்றிலும் புதிதாக கற்றுக்கொண்டிருக்கிறோம்.நாம் இதுவரை செய்ய முடியாது என்று நினைத்ததை எல்லாம் இப்பொழுது செய்துகொண்டிருக்கிறோம்.நம்மால் இயன்றதை இப்பொழுது செய்ய முடியாத நிலை.

நாம் சற்று இளைப்பாறும் நேரத்தில் நாம் காலத்தால், புவியியல் ரீதியான தடைகள் இருந்தாலும் நாம் ஒன்றாக நிற்கிறோம். நம்மைப் பாதுகாக்க, நம்மைக் கவனித்துக்கொள்ள பணிபுரியும் ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல வார்த்தைகள் போதாது.

Advertisment

இந்தப் பிரச்சனைகளில் இருந்து வெளியில் வரும்போது எல்லோருக்கும் ஒரு கதாப்பாத்திரம் இருக்கிறது செய்வதற்கு. சிறியதோ பெரியதோ அந்தக் கதாப்பாத்திரத்தை மனிதனாக மனிதத்தன்மையுடன் செய்வோம்'' என்று தெரிவித்துள்ளார்.

anushka shetty
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe