Skip to main content

உருவ கேலி செய்த நிறுவனம்... அனுஷ்காவுக்கு ஆதரவு கொடுத்த ரசிகர்கள்...

Published on 09/09/2019 | Edited on 09/09/2019

அனுஷ்கா, தமிழ் மற்றும் தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர். இவர் ரஜினிகாந்த், விஜய், அஜித், விக்ரம் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். கதாநாயகிகளுக்கு முக்கியத்தூவம் கொடுக்கும் அருந்ததி, பாகமதி உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார். பாகுபலி படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் பலராலும் பாராட்ட பெற்றது.

anushka shetty

 

 

ஆர்யாவுடன் இணைந்து நடித்த  ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில் இவர் உடல் பருமன் கொண்டவர் போன்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதற்காக உடல் எடையை இரு மடங்காக ஏற்றினார். இதனை தொடர்ந்து அனுஷ்காவில் எடை கூடிக்கொண்டே போகிறது. பாகுபலி படத்தில் கூட இவரை உடல் மெலிந்தவராக காட்ட படக்குழு மிகவும் சிரமப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டது.
 
கடைசியாக அனுஷ்கா நடிப்பில் பாகமதி படம் வந்தது. அதன்பிறகு பட வாய்ப்புகள் இல்லை. உடல் எடை கூடி குண்டான தோற்றத்தில் இருந்ததால் அனுஷ்காவை ஒதுக்கினர். இதனால் கடும் உடற்பயிற்சிகள் செய்து எடை குறைந்து ஒல்லியான தோற்றத்துடன் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இது செம வைரலானது. 

அதன்பிறகு நிசப்தம் என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதில் மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே மற்றும் ஹாலிவுட் நடிகர்களும் நடித்து இருக்கிறார்கள். 4 இந்தியர்களுக்கும் அமெரிக்க போலீசுக்கும் நடக்கும் கிரைம் திகில் படமாக தயாராகி உள்ளது. அமெரிக்காவில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் இப்படம் திரைக்கு வருகிறது.
 
இந்நிலையில் அனுஷ்கா ஹைதராபாத் விமான நிலையத்துக்கு வந்தபோது எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதில் மீண்டும் உடல் எடை கூடி குண்டான தோற்றத்தில் இருக்கிறார் அனுஷ்கா. இந்த புகைப்படத்தை தெலுங்கு பத்திரிகை நிறுவனம் ஒன்று சமூக வலைதளத்தில் பகிர்ந்து, அனுஷ்காவை உருவ கேலி செய்துள்ளது. இதனால் கோபமடைந்த அனுஷ்காவின் ரசிகர்கள் அனுஷ்காவுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் அந்த பதிவை டெலிட் செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனுஷ்கா சவாலை ஏற்றுக்கொண்ட பிரபாஸ்

Published on 06/09/2023 | Edited on 06/09/2023

 

Prabhas Accepts Anushka Shetty's Food Challenge

 

நடிகர் பிரபாஸ் தனக்கு பிடித்தமான சமையல் குறிப்பு ஒன்றினை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டுள்ளார். நடிகை அனுஷ்கா நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படம் 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி'. இந்தத் திரைப்படத்தில் நடிகை அனுஷ்கா சமையல் கலை நிபுணர் வேடத்தில் நடித்திருக்கிறார். இதனை ரசிகர்களிடம் விளம்பரப்படுத்தும் வகையில் புதுமையான முயற்சியாக ஹேஸ்டேக் சமையல் குறிப்பு சவால் ஒன்றை அனுஷ்கா முன்னெடுத்திருக்கிறார்.

 

இது தொடர்பாக அவர் தனக்கு பிடித்த உணவினையும், அதற்கான செய்முறை குறிப்பையும் பகிர்ந்து கொண்டு, இந்த சவாலை அனைவரும் பின் தொடருமாறு கேட்டுக் கொண்டார். மேலும் இந்த முயற்சியை உணவின் மீதும்... விருந்தோம்பல் மீதும்... பேரன்பு கொண்ட பிரபாஸுடன் இந்த சவாலை தொடங்க விரும்புகிறேன் எனவும் பதிவிட்டிருந்தார். 

 

இதைத்தொடர்ந்து பிரபாஸ் தனக்கு விருப்பமான ரொய்யாலா புலாவ் ( இறால் புலாவ்) எனும் உணவை தயாரிக்கும் செய்முறையை விரிவாகவும், ரசனையுடனும் விவரித்து அதனை சமூக ஊடகங்கள் மூலமாக பகிர்ந்து கொண்டார். அத்துடன் இந்த சமையல் குறிப்பு சவாலை ஏற்றுக்கொள்ளுமாறு அவர் மற்றொரு முன்னணி நட்சத்திர நடிகரான ராம் சரணை டேக் செய்து, அவரிடமும் கேட்டுக் கொண்டார். மேலும் தனது ரசிகர்களிடத்திலும் தங்களுக்குப் பிடித்த உணவையும், அதன் செய்முறையும் புகைப்படத்துடன் அல்லது காணொளியாக சமூக வலைதளங்களில் பதிவிடுமாறும் கேட்டுக் கொண்டிருக்கிறார். பிரபாஸ் மற்றும் அனுஷ்கா முன்னெடுத்திருக்கும் சமையல் குறிப்பு  சவால் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

மேலும் நடிகர் பிரபாஸ் செப்டம்பர் 7ஆம் தேதியன்று அனுஷ்கா நடிப்பில் வெளியாகும் 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

 

 

Next Story

அனுஷ்கா பெயரில் பண மோசடி - பட ஆசையால் தயாரிப்பாளருக்கு நடந்த சம்பவம்

Published on 27/01/2023 | Edited on 27/01/2023

 

Money laundering in the name of Anushka

 

தமிழில் நடிகை அனுஷ்கா நடிப்பில் கடைசியாக 'பாகமதி' படம் வெளியானது. கடந்த 2018 ஆம் ஆண்டு இப்படம் வெளியான நிலையில், அதன் பிறகு பெரியளவில் எந்தப் படத்திலும் அனுஷ்கா நடிக்கவில்லை. இப்போது தனது 48வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஒரு சமையல் கலைஞர் கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.

 

இந்நிலையில், அனுஷ்கா பெயரில் பண மோசடி நடந்துள்ள சம்பவம் அம்பலமாகியுள்ளது. மேலாளர் எல்லா ரெட்டி என்பவர் அனுஷ்காவை சந்திக்க வைத்து அவரிடம் கால்ஷீட்டை பெற்றுத் தருவதாகக் கூறி அனுஷ்காவை வைத்துப் படமெடுக்க ஆசைப்பட்ட தயாரிப்பாளர் லட்சுமண் சாரியிடம் ரூ.51 லட்சம் பணத்தைப் பெற்றுள்ளார். இது மட்டுமல்லாமல் இசையமைப்பாளர் மணி சர்மாவின் கால்ஷீட்டையும் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.25 லட்சம் பணத்தைப் பெற்றுள்ளார்.

 

ஆனால் பல முறை தயாரிப்பாளர் லட்சுமண் சாரியை பெங்களூருக்கு அழைத்துச் சென்ற எல்லா ரெட்டி, கடைசி வரை இருவரையும் சந்திக்க வைக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தயாரிப்பாளர் லட்சுமண் சாரி, எல்லா ரெட்டியிடம் பணத்தைத் திரும்பக் கேட்டுள்ளார். எல்லா ரெட்டி பணத்தைக் கொடுக்காததால் பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தில் தயாரிப்பாளர் புகார் கொடுத்துள்ளார்.

 

இது தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த பிரச்சனை தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்திடம் லட்சுமண் சாரி புகார் அளித்திருந்த நிலையில் எல்லா ரெட்டியை கண்டித்துள்ளார்கள். ஆனால், பணம் திரும்ப வராததால் காவல் நிலையத்திற்குத் தயாரிப்பாளர் சென்றுள்ளதாகச் சொல்லப்படுகிறது.