Skip to main content

பிக்பாஸ்-3 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அனுஷ்கா?

Published on 25/04/2019 | Edited on 25/04/2019

பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழகம், ஆந்திரா, கேரளா என அனைத்து மாநிலங்களிலும் நன்கு ஒளிபரப்பாகிறது. பிக்பாஸ் நடக்கும் நூறு நாட்களிலும் அதற்கென தனி ரசிகர்கள் உள்ளனர். தமிழில் நடிகர் கமல் ஹாசன் இரண்டு சீசனிலும் தொகுத்து வழங்கினார். தெலுங்கில் முதல் சீசன் ஜூனியர் என்.டி.ஆர், இரண்டாவது சீசன் நானி ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள். தற்போது தமிழில் கமல்ஹாசன் அரசியலில் இறங்கிவிட்டதால் இந்த சீசனில் அவர் தொகுத்து வழங்கமாட்டார் என்று சொல்லப்படுகிறது. அதைபோன்று ஜூனியர் என்.டி.ஆர் ஆர்.ஆர்.ஆர். படத்தில் பிஸியாக இருப்பதாலும், நானியும் பிஸி என்பதால் பிக்பாஸ்-3யை யார் தொகுத்து வழங்குவார்கள் என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
 

anushka

 

 

பாகுபலி படத்திற்கு பிறகு உடல் எடை கூடியதை தொடர்ந்து சிகிச்சை பெற்று உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆனார் அனுஷ்கா. உடல் எடை கூடியதால் பட வாய்ப்புகள் சரியாக கிடைக்கவில்லை என்று உடல் எடையை அனுஷ்கா குறைத்தார் என்று திரைத்துறை வட்டாரங்களில் பேச்சு எழுந்தது. இந்நிலையில் தற்போது அவருக்கு படவாய்புகள் வந்துக்கொண்டிப்பதாக கூறப்படுகிறது. 
 

இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனை நடத்துவது குறித்து அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஆந்திரா, தெலுங்கானாவில் அனுஷ்காவுக்கு அதிக ரசிகர்கள் இருப்பதால் அவரை அணுகி இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து விரிவன தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனுஷ்கா சவாலை ஏற்றுக்கொண்ட பிரபாஸ்

Published on 06/09/2023 | Edited on 06/09/2023

 

Prabhas Accepts Anushka Shetty's Food Challenge

 

நடிகர் பிரபாஸ் தனக்கு பிடித்தமான சமையல் குறிப்பு ஒன்றினை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டுள்ளார். நடிகை அனுஷ்கா நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படம் 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி'. இந்தத் திரைப்படத்தில் நடிகை அனுஷ்கா சமையல் கலை நிபுணர் வேடத்தில் நடித்திருக்கிறார். இதனை ரசிகர்களிடம் விளம்பரப்படுத்தும் வகையில் புதுமையான முயற்சியாக ஹேஸ்டேக் சமையல் குறிப்பு சவால் ஒன்றை அனுஷ்கா முன்னெடுத்திருக்கிறார்.

 

இது தொடர்பாக அவர் தனக்கு பிடித்த உணவினையும், அதற்கான செய்முறை குறிப்பையும் பகிர்ந்து கொண்டு, இந்த சவாலை அனைவரும் பின் தொடருமாறு கேட்டுக் கொண்டார். மேலும் இந்த முயற்சியை உணவின் மீதும்... விருந்தோம்பல் மீதும்... பேரன்பு கொண்ட பிரபாஸுடன் இந்த சவாலை தொடங்க விரும்புகிறேன் எனவும் பதிவிட்டிருந்தார். 

 

இதைத்தொடர்ந்து பிரபாஸ் தனக்கு விருப்பமான ரொய்யாலா புலாவ் ( இறால் புலாவ்) எனும் உணவை தயாரிக்கும் செய்முறையை விரிவாகவும், ரசனையுடனும் விவரித்து அதனை சமூக ஊடகங்கள் மூலமாக பகிர்ந்து கொண்டார். அத்துடன் இந்த சமையல் குறிப்பு சவாலை ஏற்றுக்கொள்ளுமாறு அவர் மற்றொரு முன்னணி நட்சத்திர நடிகரான ராம் சரணை டேக் செய்து, அவரிடமும் கேட்டுக் கொண்டார். மேலும் தனது ரசிகர்களிடத்திலும் தங்களுக்குப் பிடித்த உணவையும், அதன் செய்முறையும் புகைப்படத்துடன் அல்லது காணொளியாக சமூக வலைதளங்களில் பதிவிடுமாறும் கேட்டுக் கொண்டிருக்கிறார். பிரபாஸ் மற்றும் அனுஷ்கா முன்னெடுத்திருக்கும் சமையல் குறிப்பு  சவால் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

மேலும் நடிகர் பிரபாஸ் செப்டம்பர் 7ஆம் தேதியன்று அனுஷ்கா நடிப்பில் வெளியாகும் 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

 

 

Next Story

"யுத்த பூமியில் காத்திருக்கிறேன்" - வாழ்த்து தெரிவித்து ரகசியத்தை உடைத்த ஹிரித்திக் ரோஷன்

Published on 20/05/2023 | Edited on 20/05/2023

 

Hrithik Roshan breaks the secret by congratulating junior ntr birthday

 

'ஆர்.ஆர்.ஆர்' பட வெற்றியால் இந்திய அளவில் பிரபலமான ஜூனியர் என்.டி.ஆர், தற்போது அவரது 30வது படத்தில் நடிக்கிறார். கொரட்டாலா சிவா இயக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகிறார். சைஃப் அலிகான் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தை அடுத்து கே.ஜி.எஃப் பட இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். 

 

'என்.டி.ஆர் 30' படத்தை என்.டி ஆர்ட்ஸ் மற்றும் யுவசுதா ஆர்ட்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கின்றன. அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் ஜூனியர் என்.டி.ஆர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு 'என்.டி.ஆர் 30' படக்குழுவும் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று இரவு 7மணிக்கு வெளியிட்டது. அதன்படி படத்துக்கு 'தேவரா' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி (05.04.2024) திரைக்கு வரும் என படக்குழு தெரிவித்துள்ளது.

 

இந்நிலையில் ஜூனியர் என்.டி.ஆருக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவில், "பிறந்தநாள் வாழ்த்துகள் ஜூனியர் என்.டி.ஆர். உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாகவும் சிறந்த ஆண்டாகவும் அமைய வாழ்த்துகள். உங்களுக்காக யுத்த பூமியில் காத்திருக்கிறேன் நண்பரே. நாம் சந்திக்கும் வரை உங்கள் நாட்கள் மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்ததாக இருக்கட்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

நாம் சந்திக்கும் வரை என ஹிரித்திக் ரோஷன் குறிப்பிட்டது விரைவில் இருவரும் இணையவுள்ள படமாக இருக்கும் என யூகிக்க முடிகிறது. முன்னதாக யாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் அயன் முகர்ஜி இயக்கத்தில் ஹிரித்திக் ரோஷன் நடிக்கும் வார் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் ஜூனியர் என்.டி.ஆர் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியானது. இப்போது கிட்டத்தட்ட அது உறுதியாகியுள்ளது. படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன் ஹிரித்திக் ரோஷன் அந்த ரகசியத்தை சூசகமாக உடைத்துள்ளது போல் தெரிகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இப்படம் மூலம் பாலிவுட்டில் தடம் பதிக்கவுள்ளார் ஜூனியர் என்.டி.ஆர்.