Skip to main content

டப்ஸி படத்தை ஹிந்தியில் வெளியிடும் பிரபல இயக்குனர்...

Published on 11/05/2019 | Edited on 11/05/2019

ஆடுகளம், வந்தான் வென்றான், காஞ்சனா-2, ஆரம்பம், வை ராஜா வை ஆகிய தமிழ் படங்களில் நடித்தவர் டாப்ஸி. ஆனால், இவர் பாலிவுட்டில்தான் மிகவும் பிரபலமாக இருக்கிறார். தற்போது மீண்டும் தமிழில்  ‘கேம் ஓவர்’ என்னும் படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்திருக்கிறார். 
 

tapsee

 

 

நயன்தாரா நடித்த மாயா படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கியிருக்கும் மூன்றாவது படம் இது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தின் இந்தி விநியோகஸ்த உரிமையை பிரபல பாலிவுட் இயக்குநரும், இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவருமான அனுராக் காஷ்யப் கைப்பற்றியிருக்கிறார்.
 

இறுதி சுற்று, விக்ரம் வேதா, தமிழ்படம் 2 வெற்றிகளை தொடர்ந்து ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மெண்ட் இணைந்து `கேம் ஓவர்' என்ற படத்தை தயாரித்துள்ளனர்.
 

ரான் ஈதன் யோஹன் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஏ.வசந்த் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரிச்சர்ட் கேவின் படத்தொகுப்பையும், சிவா சங்கர் கலைப் பணிகளையும் மேற்கொள்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ரசிகர்கள் காட்டும் அன்பினால் என் குடும்பம் பாதிக்கப்படுகிறது’- டாப்ஸி வருத்தம்

Published on 18/09/2019 | Edited on 18/09/2019

தமிழில் ஆடுகளம் படத்தில் தனுஷுக்கு ஹீரோயினாக நடித்ததன் மூலம் டாப்ஸி தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானார். ஆனால், அதனை தொடர்ந்து அவருக்கு தமிழில் அமைந்த படங்கள் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. 
 

tapsee

 

 

இதனால் பாலிவுட்டில் கவனம் செலுத்த தொடங்கினார். பிங்க் படத்தின் மூலம் சிறந்த நடிகை என்ற அந்தஸ்திற்கு வந்தார் டாப்ஸி. இதன்பின் அவர் நடிக்கும் படங்களுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உருவானது. டாப்ஸியும் கவர்ச்சி காட்டும் நடிகைகள் லிஸ்ட்டில் இருந்து தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுக்க தொடங்கினார். 

பல வருடங்கள் கழித்து அவர் தமிழில் கேம் ஓவர் என்ற படத்தில் நடித்தார். இது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றது. 
 

super duper


இந்நிலையில் சினிமா வாழ்க்கை குறித்து டாப்ஸி கூறியது: “நான் சாதாரண குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தேன். நான் பிரபலமாக இருப்பது குறித்து அவர்களுக்கு புரியவில்லை. நட்சத்திர அந்தஸ்து என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ள முயன்று கொண்டு இருக்கிறார்கள். நடிகர், நடிகைகளுக்கு தனிப்பட்ட சொந்த வாழ்க்கை இருக்கிறது. நான் நடிகையாவதற்கு முன்னர் தோழிகளுடன் சாலைகளில் நடந்து சென்று இருக்கிறேன். 

ஷாப்பிங் மால்களுக்கு சேர்ந்து செல்வோம். ஓட்டல்களை தேடி சென்று சாப்பிடுவோம். ஆனால் இப்போது அப்படி போக முடியவில்லை. ரசிகர்கள் என்மீது அதிக அன்பு வைத்து இருக்கிறார்கள். சில நேரம் அந்த அன்பு எல்லை மீறி விடுகிறது. பொது இடங்களில் அவர்கள் காட்டும் அன்பினால் எனக்கு சிக்கல் ஏற்படுகிறது. எனது குடும்பத்தினரும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் எனது உடைகளை கூட வெளிநாட்டு மால்களில்தான் வாங்குகிறேன்” என்றார்.

 

 

Next Story

பாலிவுட் புகழ் நடிகையுடன் நடிக்கும் ஜெயம் ரவி...

Published on 07/05/2019 | Edited on 07/05/2019

ஜெயம் ரவி நடிக்க இருக்கும் 26 படத்தில் பாலிவு புகழ் தாப்ஸி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
 

jayam ravi

 

 

தற்போது ஜெயம் ரவி நடிப்பில் ரிலீஸுக்குத் தயாராகிவரும் படம்  ‘கோமாளி’. இப்படத்தில் ஜெயம் ரவி ஒன்பது கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்றும். காஜல் அகர்வால் முதன் முறையாக ஜெயம் ரவியுடன் ஜோடியாக நடிக்கிறார். இது ஜெயம் ரவிக்கு 24வது படம் ஆகும்.
 

ஏற்கனவே ஜெயம் ரவியை வைத்து இரு படங்கள் இயக்கிய லட்சுமண் தான் 25வது படத்தை இயக்குகிறார். இதைத் தொடர்ந்து, ஜெயம் ரவியின் 26வது படத்தை அஹமது இயக்குகிறார். ‘வாமனன்’, ‘என்றென்றும் புன்னகை’, ‘மனிதன்’ ஆகிய படங்களை இயக்கியவர் இவர். இந்தப் படத்தில், ஜெயம் ரவி ஜோடியாக தாப்ஸி ஒப்பந்தமாகியுள்ளார்.
 

தாப்ஸி சில தமிழ் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கான வாய்ப்பு தமிழ் சினிமாவில் பெரிதளவில் இல்லை. ஆனால், பாலிவுட்டில் அவர் நடிப்பில் வெளியான பிங்க் படத்திற்கு பின் தனக்கென ஒரு இடத்தை பாலிவுட்டில் வைத்திருக்கிறார் தாப்ஸி. சமீபத்தில்கூட தாப்ஸி, அமிதாப் பச்சனுடன் நடித்து வெளியான  ‘பத்ளா’திரைப்படம் உலகம் முழுவதும் 100 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.