Skip to main content

“மிகவும் சிக்கலான மனிதர் சுஷாந்த்”- பிரபல இயக்குனர் வெளியிட்ட உரையாடல்!

Published on 10/09/2020 | Edited on 10/09/2020
anurag kashyap

 

 

சுஷாந்த் சிங் மரணத்தை தொடர்ந்து பல சர்ச்சைகள் உருவாகி வருகிறது. இந்நிலையில் இயக்குனர் அனுராஜ் காஷ்யப் சுஷாந்தின் மேலாளருடனான உரையாடலை வெளியிட்டுள்ளார். 

 

புகைப்படத்தை பகிர்ந்து, “இதை பகிர்வதற்கு மன்னித்துவிடுங்கள். சுஷாந்த் இறந்த மூன்று வாரங்களுக்கு முன் நடந்த உரையாடல் இது. 22 மே அன்று சுஷாந்தின் மேலாளருடன் நடந்த உரையாடல். இப்போது பகிரவேண்டிய தேவை உள்ளதாக நினைக்கிறேன். எனக்கான காரணங்களுக்காக நான் அவருடன் பணியாற்ற விரும்பவில்லை" என்று குறிப்பிட்டிருந்தார். 

 

சுஷாந்த் இறப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே இந்த உரையாடல் நடைபெற்றுள்ளது. "உங்களுக்கு இப்படி நடிகர்களைப் பரிந்துரை செய்வது பிடிக்காது என்று எனக்கு தெரியும். ஆனால், என்னால் உங்களிடம் அதை செய்ய முடியும் என நினைக்கிறேன். சுஷாந்த் உங்கள் திரைப்படத்தில் பொருந்துவார் என நினைத்தால் தயவுசெய்து அவரை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். ஒரு ரசிகனாக, நீங்கள் இருவரும் சேர்ந்து ஓர் அற்புதத்தை உருவாக்குவதை பார்க்க விரும்புகிறேன்" என்று சுஷாந்த் மேனேஜர் கூறியுள்ளார்.

 

அதற்கு பதிலளித்த அனுராக், "அவர் மிகவும் சிக்கலான மனிதர். அவர் நடிக்க வருவதற்கு முன்னாலிருந்தே, 'கை போ சே' படம் ஆரம்பிப்பதற்கு முன்னாலிருந்தே எனக்கு அவரைத் தெரியும்" என்று கூறியுள்ளார்.

 

 

பின்னர், சுஷாந்த் இறந்த அன்று அவருடைய மேனேஜருடன் நடைபெற்ற உரையாடலையும் அனுராக் பகிர்ந்துள்ளார். "ஜூன் 14 அன்று மேலாளருடன் நடந்த உரையாடல். நீங்கள் பார்க்க விரும்பினால் அதில் சில விஷயங்கள் உங்களுக்கு புலப்படும். இதை செய்வது கடுமையானதாக இருக்கிறது. ஆனால், என்னால் இதை பகிராமல் இருக்க முடியாது. மேலும் அவரது குடும்பத்துக்காக நாங்கள் கவலைப்படவில்லை என்று சொன்னவர்களும் இதை பார்க்கலாம். எவ்வளவு உண்மையாக இருக்க முடியுமோ அவ்வளவு உண்மையாக பகிர்கிறேன். என்னைப் பற்றி நீங்கள் தீர்மானம் செய்ய வேண்டுமானால் செய்து கொள்ளுங்கள்" என்று புகைப்படத்தை பதிவிட்டு அனுராக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“1 மணி நேரத்திற்கு 5 லட்சம்” - கண்டிஷன் போட்ட இயக்குநர்

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Anurag Kashyap fixed a rate for his meeting

பாலிவுட்டில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் அனுராக் காஷ்யப். தமிழில் விஜய் சேதுபதியின் இமைக்கா நொடிகள் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளிவந்த லியோ படத்தில் ஒரு காட்சியில் மட்டும் நடித்திருந்தார். இப்போது விஜய் சேதுபதியின் மகராஜா, சுந்தர்.சி-யின் ஒன் டூ ஒன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இரண்டு படங்களும் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதையடுத்து ஜி.வி பிரகாஷை வைத்து தமிழ் மற்றும் இந்தியில் ஒரு படம் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், தன்னிடம் சந்திப்பு மேற்கொள்ள கட்டணம் வசூலிக்கவுள்ளதாக அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், “எனக்கு  மெசேஜோ அல்லது ஃபோனிலோ யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம். என்னுடன் சந்திப்பு மேற்கொள்ள பணம் செலுத்துங்கள் உங்களுக்கான நேரம் கிடைக்கும்” என பதிவிட்டுள்ளார். மேலும், “நான் புதிய நபர்களுக்கு உதவி செய்து நிறைய நேரத்தை வீணடித்திருக்கிறேன். தான் மேதாவி என நினைத்து கொண்டிருக்கும் நபர்களைச் சந்தித்து இனிமேல் எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. 

எனவே நான் இப்போது சந்திப்பு மேற்கொள்ள பணம் வாங்குகிறேன். 10-15 நிமிடத்திற்கு 1 லட்சமும் அரை மணி நேரத்திற்கு 2 லட்சமும், 1 மணி நேரத்திற்கு 5 லட்சமும் வசூலிக்கிறேன். இந்த தொகைக்கு நீங்கள் உடன்பட்டால் என்னை அழைக்கலாம் அல்லது கொஞ்சம் தள்ளியே இருங்கள். ஆனால் பணத்தை முன்கூட்டியே செலுத்த வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.  

Next Story

மீண்டும் அதே இயக்குநர் - பாலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமாகும் ஜி.வி. பிரகாஷ்

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
gv prakash make his bollywood debut as actor under anurag kashyap direction

ஜி.வி. பிரகாஷ் நடிகராக ரெபல், இடி முழக்கம், 13, கள்வன், டியர், கிங்ஸ்டன் உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இசையமைப்பாளராக தங்கலான், அமரன், சூர்யாவின் 43வது படம் உள்ளிட்ட படங்களில் பணியாற்றுகிறார். இதில் ரெபல் படம் வருகின்ற 22 ஆம் தேதி வெளியாகிறது. ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ். இயக்கத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், ஜி.வி. பிரகாஷ் தற்போது பாலிவுட்டில் ஹூரோவாக அறிமுகமாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப் இயக்கத்தில் இப்படம் உருவாவதாகவும் இந்தி மற்றும் தமிழில் இப்படம் தயாராகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருவரும் இணைந்து ஒரு படம் பண்ணுவதாக முன்னரே தகவல் வெளியான நிலையில், தற்போது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

gv prakash make his bollywood debut as actor under anurag kashyap direction

இப்படம் உறுதியாகும் பட்சத்தில் பாலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமாவார். ஏற்கனவே இசையமைப்பாளராக அனுராக் கஷ்யப் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான கேங்க்ஸ் ஆஃப் வாஸிப்பூர் படம் மூலம் அறிமுகமானார். இப்படத்திற்கு பின்னணி இசை மட்டும் இசையமைத்திருந்தார். இப்போது இந்தியில் கங்கனா ரணாவத்தின் எமர்ஜென்சி, சூரரைப் போற்று ரீமெக் என இரண்டு படங்களை கைவசம் வைத்துள்ளார்.

அனுராக் கஷ்யப், விஜய் சேதுபதியின் இமைக்கா நொடிகள் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளிவந்த லியோ படத்தில் ஒரு காட்சியில் மட்டும் நடித்திருந்தார். இப்போது விஜய் சேதுபதியின் மகராஜா, சுந்தர்.சி-யின் ஒன் டூ ஒன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இரண்டு படங்களும் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.