Skip to main content

பும்ராவும் நானும் காதலிக்கிறோமா? பதிலளித்த நடிகை அனுபமா!

Published on 10/07/2019 | Edited on 10/07/2019

பிரேமம் படத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரனுக்கு தென்னிந்தியாவில் ரசிகர்கள் ஏராளம். மலையாள படங்கள் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் இவர்.
 

anupama parameshwaran

 

 

இந்நிலையில் நடிகை அனுபமாவும், இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ராவும் காதலிக்கின்றனர் என்று சமூக வலைதளத்தில் பரவலாக தகவல் 2019 உலகக்கோப்பை தொடர் தொடங்கும் முன்பில் இருந்தே பரவி வருகிறது. அதற்கு காரணம் என்ன என்றால் பும்ரா பின் தொடரும் ஒரு சிலரில் அனுப்பமா மட்டுமே நடிகை வேறு எந்த நடிகையும் அவர் பின் தொடரவில்லை. அதேபோல அனுபமா, பும்ரா பதிவிடும் அனைத்து பதிவுகளையும் லைக் செய்து, சில்வற்றை ரீட்வீட்டும் செய்கிறார். இதுபோன்ற விஷயங்களை வைத்து இருவரும் யாருக்கும் தெரியாமல் மறைமுகமாக காதலித்து வருகின்றனர் என்று தகவல் பரவி வந்தது. 
 

ஞாயிற்றுக்கிழமை அனுபமா ஒரு பதிவு ஒன்றை போட்டுள்ளார். திங்கட்கிழமை பும்ரா ட்விட்டரில் பதிவு ஒன்றை போட, இவ்விரண்டை வைத்தும் சமூக வலைதளத்தில் இருவரும் காதலிப்பது போன்ற மீம்ஸ்கள் போட தொடங்கிவிட்டனர்.

 
இந்நிலையில் நடிகை அனுபமா இதுகுறித்து ஒரு பேட்டியில், நாங்கள் இருவரும் காதலிக்கவில்லை. இருவரும் நல்ல நண்பர்களே. காதல் என்று வரும் செய்திகள் அனைத்தும் புரளிகள் மட்டுமே என்றும் விளக்கம் அளித்துள்ளார். மேலும் இது போன்ற கிசுகிசுக்கள் சகஜம் தான் என்றும் அனுபமா குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மகிழ்ச்சியைப் பரப்புங்கள்; பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெளியிட்ட நெகிழ்ச்சி வீடியோ

Published on 11/09/2023 | Edited on 11/09/2023

 

Spread the joy to Inspirational video released by Pakistan Cricket Team

 

முதல் குழந்தையை பெற்றெடுத்த இந்திய கிரிக்கெட் வீரர் பும்ரா மற்றும் சஞ்சனா தம்பதியினருக்கு, பாகிஸ்தான் வீரர் ஒருவர் தனது வாழ்த்துகளை தெரிவித்து, அன்புப் பரிசையும் வழங்கியுள்ளார். 

 

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடர் நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 4 சுற்றின் மூன்றாவது ஆட்டத்தில் நேற்று (10-09-2023) இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. முதல் பேட்டிங்கின் பாதியிலேயே, மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. ரிசர்வ் நாளான இன்று ஆட்டம் தொடரவிருக்கிறது.

 

ஆசியக் கோப்பை 2023ன் சூப்பர் 4 சுற்றின் மூன்றாவது ஆட்டம் நேற்று (10-09-2023) கொழும்பு, பிரேம தாசா மைதானத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பவுலிங்கைத் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி விக்கெட் எதுவும் இழக்காமல் 100 ரன்களை எளிதாகக் கடந்தது. பின்னர், அரை சதம் அடித்த ரோகித் 56 ரன்களில் வெளியேற இந்தியாவின் முதல் விக்கெட் 121 ரன்னில் விழுந்தது. இந்த நிலையில், நேற்றைய ஆட்டத்தில் 24.1 ஓவரில் இந்திய அணி 147 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்திருந்தது. இன்றைக்கு (11-09-2023) இந்திய அணி தொடர்ந்து பேட்டிங் செய்து 50 ஓவர் வரை விளையாடும். பின்னர், பாகிஸ்தான் இலக்கைத் துரத்தும். ஆனால், இன்றும் கொழும்புவில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், இன்றைய ஆட்டமும் பாதிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், கடந்த வாரம் ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் சஞ்சனா கணேசன் தம்பதியினர் தங்களது முதல் குழந்தையைப் பெற்றெடுத்தனர். தங்கள் மகனுக்கு அங்கத் ஜஸ்பிரித் பும்ரா என்றும் பெயர் சூட்டியுள்ளனர். பல்வேறு இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்களது வாழ்த்துகளை ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பாகிஸ்தான் அணியின் வேகப் பந்து வீச்சாளர் ஷாகீன் ஷா அஃப்ரிடி, பும்ராவுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து, அன்புப் பரிசையும் வழங்கியுள்ளார். இந்தப் பரிசை வாங்கிய பும்ரா தனது நன்றியை தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோவை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதிகாரப்பூர்வமான எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் பகிர்ந்துள்ளது. அது மட்டுமல்லாமல், அந்த பதிவில் “மகிழ்ச்சியை பரப்புங்கள்” என்ற வாசகத்தையும் எழுதி பதிவிட்டுள்ளது.  இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்தியா-பாகிஸ்தான் வீரர்கள் தங்களது அன்பை பரிமாறிக் கொண்டது ரசிகர்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

Next Story

இந்திய கிரிக்கெட் அணியில் பும்ராவிற்கு பதில் முகமது சிராஜ் சேர்ப்பு! 

Published on 30/09/2022 | Edited on 30/09/2022

 

Mohammed Siraj replaces Bumrah in the Indian cricket team!

 

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 20 ஒவர் கிரிக்கெட் தொடரில் ஜஸ்பிரித் பும்ராவிற்கு பதிலாக முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார். 

 

இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடர், தற்போது நடைபெற்று வருகிறது. இதில், முதல் போட்டியில் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக, இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இடம் பெறவில்லை. இந்த நிலையில், காயம் குணமடையாததால், ஜஸ்பிரித் பும்ராவிற்கு பதில் முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார்.