Skip to main content

கர்ப்பமான புன்னகை அரசி... வாழ்த்தும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள்...

Published on 23/08/2019 | Edited on 23/08/2019

தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகை சினேகா. இவர் கடந்த 2000ஆம் ஆண்டு வெளிவந்த என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார்.
 

sneha

 

 

இதனையடுத்து உடனடியாக பல படங்களில் நடித்தார். தொடர்ந்து கமல்ஹாசனுடன் 'வசூல்ராஜா எம்பிபிஎஸ், விஜய்யுடன் 'வசீகரா', அஜித்துடன் 'ஜனா', விக்ரமுடன் கிங்', சுர்யாவுடன் 'உன்னை நினைத்து', தனுஷுடன் 'புதுப்பேட்டை', சிம்புவுடன் 'சிலம்பாட்டம்',  உள்ளியிட்ட படங்களில் நடித்தார். ஆட்டோகிராப், பள்ளிக்கூடம், பார்த்திபன் கனவு, பிரிவோம் சந்திப்போம், போன்ற படங்கள் சினேகாவிற்கு பெரும் புகழை பெற்று தந்தது.
 

2009ஆம் ஆண்டு வெளிவந்த 'அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தில் நடிக்கும்போது அப்படத்தின் நாயகன் பிரசன்னாவை காதலித்தார் சினேகா. பின்னர் மூன்று ஆண்டுகள் கழித்து பிரசன்னாவை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.  அதையடுத்து கடந்த 2015ல் இந்த தம்பதிக்கு விஹான் என்ற மகன் பிறந்தார். குழந்தைக்காக சிறிது காலம் சினிமாவில் ஒதுங்கியிருந்த சினேகா பின்னர் மீண்டும் சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினர்.
 

இந்நிலையில் சினேகா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை அறிந்த பரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் பிரசன்னா சினேகா தம்பதியினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் பட்டாஸ் படத்தில் அவருக்கு ஜோடியாக சினேகா நடித்து வருகிறார். மேலும் கன்னட படமான குருக்‌ஷேத்ரா படத்தில் திரௌபதியாக நடித்துள்ளார். இந்த படம் அண்மையில் வெளியானது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நடிகை சினேகாவிடம் ரூ. 25 லட்சம் மோசடி

Published on 18/11/2021 | Edited on 18/11/2021

 

private company has cheated actor Sneha buying Rs 25 lakh

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த சினேகா கடந்த 2012ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு சில முக்கிய கதாபாத்திரங்களில் மட்டும் நடித்துவரும் சினேகா, தன்னிடம் பணம் பெற்றுக்கொண்டு கௌரி மினரல் சிமெண்ட் ஏற்றுமதி நிறுவனம் ஏமாற்றிவிட்டதாக கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

 

ad

 

இது தொடர்பாக அவர் அளித்த புகாரில், "கௌரி மினரல் சிமெண்ட் ஏற்றுமதி நிறுவனத்தில் ரூ. 25 லட்சம் முதலீடு செய்துள்ளேன். அந்நிறுவனத்தில் முதலீடு செய்யும்போது மாதந்தோறும் ரூ. 1.80 லட்சம் கிடைக்கும் எனக் கூறினார்கள். அதை நம்பி நானும் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தேன். இது தொடர்பாக ஒப்பந்தமும் போடப்பட்டது. ஆனால் ஒப்பந்தப்படி மாதந்தோறும் தருவதாக கூறிய பணத்தை அந்நிறுவனம் தராமல் என்னை ஏமாற்றியுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். இப்புகாரைப் பெற்றுக்கொண்ட கானத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

 

 

Next Story

வெங்கட் பிரபுவுக்கு ஜோடியாக நடிக்கும் சினேகா!

Published on 16/09/2021 | Edited on 16/09/2021

 

Shot Boot Three

 

தமிழில் ‘அச்சமுண்டு அச்சமுண்டு’, ‘நிபுணன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் வைத்யநாதன், தற்போது  ‘ஷாட் பூட் 3’ என்ற படத்தை இயக்குகிறார். குழந்தைகளை மையமாக வைத்து உருவாகவுள்ள இப்படத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை சினேகா நடிக்கிறார். இப்படத்தில் நடிகர் யோகி பாபுவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். யூனிவெர்ஸ் கிரியேஷன்ஸ் மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் மூலம் பிரபல வீணை கலைஞரான ராஜேஷ் வைத்யா இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

 

இப்படத்தின் பணிகள் நேற்று (15.09.2021) சென்னையில் பூஜையுடன் தொடங்கிய நிலையில், இப்படம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.