Skip to main content

'அண்ணாத்த படப்பிடிப்பு'; பிறந்தநாள் வாழ்த்தோடு சிவா கொடுத்த அப்டேட்!

Published on 12/12/2020 | Edited on 12/12/2020

 

director siva

 

தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் சிவா இயக்கி வரும் 'அண்ணாத்த' படத்தில் நடித்து வருகிறார். முழுவீச்சில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு கரோனா நெருக்கடி நிலை காரணமாக தடைபட்டது. தற்போது படப்பிடிப்பு நடத்துவதற்கான அனுமதியை அரசு அளித்துள்ளது. இதனையடுத்து, அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு ஜனவரியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

 

இந்த நிலையில், இம்மாதத்தின் தொடக்கத்தில் தனது அரசியல் வருகை குறித்து ரஜினி உறுதிப்படுத்தினார். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால், அண்ணாத்த படத்தின் பணிகளை முடித்துவிட்டு அரசியலில் கவனம் செலுத்த ரஜினி திட்டமிட்டுள்ளார். இதனால், இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதமே தொடங்கவுள்ளது எனச் செய்திகள் வெளியாகின. 

 

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த்  இன்று தனது 70-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அதனை முன்னிட்டு பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அண்ணாத்த படத்தின் இயக்குனரான சிவா, அண்ணாத்த படக்குழு சார்பாக ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்து காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவுள்ள தகவலையும் அவர் தெரிவித்துள்ளார். அக்காணொளியை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதன்படி, அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 15-ம் தேதி மீண்டும் துவங்கவுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஒரே ஒரு வசனம் - ஆக்ரோஷமாக கத்தும் சூர்யா

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
suriya kanguva teaser released

சூர்யா தற்போது தனது 42வது படமான ‘கங்குவா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  3டி முறையில் சரித்திரப் படமாக 38 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் வருகிற ஏப்ரலில் வெளியாகவுள்ளதாகக் கூறப்பட்டு வருகிறது. 

இப்படத்தின் படப்பிடிப்பு கோவா, கொடைக்கானல், தாய்லாந்து, சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. அதில் கடந்த நவம்பரில் சென்னையில் நடந்த படப்பிடிப்பின் போது, ரோப் கேமரா அறுந்து சூர்யாவின் தோள்பட்டையில் மோதியதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்பு ஓய்விற்காக வெளிநாடு சென்று பின்பு சென்னை வந்து இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இப்படத்தின் கிளிம்ஸ் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், கடந்த பொங்கலை முன்னிட்டு செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது.  

இதனைத் தொடர்ந்து படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருவதாக படக்குழு அறிவித்தனர். அது தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டனர். சூர்யா டப்பிங் செய்யும் புகைப்படங்களும் வெளியாகின. இந்த நிலையில் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இன்று மாலை 4.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்பு சற்று தாமதமாக வெளியானது. டீசரில், பீரியட் ட்ராமா ஜானருக்கே உரித்தான கப்பல் காட்சிகள், ஆக்‌ஷன் காட்சிகள் எனப் பல அம்சங்கள் இடம்பெறுகிறது. மேலும் சூர்யாவிற்கும் பாபி தியோலுக்கும் இடையேயான சண்டைக் காட்சிகள் அதிகம் இருக்குமெனத் தெரிகிறது. இரு தரப்பிற்கும் நடக்கும் மோதலே படக்கதையாக உருவாகியுள்ளது போல் தெரிகிறது. டீசரில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் வசனம் வருகிறது. அதுவும் சூர்யா ஆக்ரோஷமாக ‘பெருமாச்சி..’ எனக் கத்தும் காட்சியாக இருக்கிறது. பட வெளியீடு குறித்து டீசரில் சொல்லவில்லை. விரைவில் அது குறித்த அப்டேட் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டீசர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Next Story

கங்குவா படப்பிடிப்பில் சூர்யாவிற்கு விபத்து

Published on 23/11/2023 | Edited on 23/11/2023

 

Suriya's accident on the set of kanguva

 

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கங்குவா’. இப்படத்தில் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 3டி முறையில் சரித்திரப் படமாக 10 மொழிகளுக்கு மேலாக வெளியாக உள்ள இப்படத்தை, ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் அடுத்த வருடம் ஏப்ரலில் வெளியாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.  

 

ad

 

இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சூர்யாவின் பிறந்தநாளன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடந்ததாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதையடுத்து சென்னையில் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. 

 

இந்த நிலையில் அந்த படப்பிடிப்பில் விபத்து நடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நேற்று, படப்பிடிப்பின் போது ரோப் கேமரா அறுந்து சூர்யாவின் தோள்பட்டையில் மோதியுள்ளதாகவும் அதில் சூர்யாவுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த விபத்து காரணமாக இன்று படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.