Skip to main content

"இந்த வாரமும் நிகழ்ச்சியில் தொடர்ந்திருந்தால் என் அப்பாவை..." தந்தை மரணம் குறித்து அனிதா சம்பத் உருக்கம்!

Published on 29/12/2020 | Edited on 29/12/2020

 

anitha sampath

 

ஊடகங்களில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானவர் அனிதா சம்பத். இவர், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொண்டார். சமீபத்தில் அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

 

இந்த நிலையில், அனிதா சம்பத்தின் தந்தை ஆர்.சி.சம்பத் இன்று மரணமடைந்தார். இவர், தனது மகனுடன் இணைந்து சீரடி சென்றுள்ளார். அங்கு தரிசனத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பும் வழியில் ரயிலிலேயே இத்திடீர் மரணம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, தன்னுடைய தந்தை குறித்து, அனிதா சம்பத் உருக்கமாக வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "எனது தந்தை ஆர்.சி.சம்பத் வயது முதிர்வு காரணமாகத் திடீரென மரணமடைந்தார். அவருக்கு அல்சர் பாதிப்பு இருந்தது. அவர் இப்போது இல்லை என்பதை என்னால் நம்பமுடியவில்லை. கடைசியாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக என்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளச் சென்றபோது அவரைச் சந்தித்தேன். பிக்பாஸ் முடிந்து வீடு திரும்புகையில், அவர் சீரடி சென்றுவிட்டார். நான் அவருடன் பேசவில்லை. ஏனெனில், அவர் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தார். இன்று காலை 8 மணிக்கு அவர் இறந்துவிட்டார் என்ற செய்தியை அறிந்தேன். அவர் சீரடியில் இருந்து சென்னை திரும்பிக் கொண்டிருந்தார். நாளை சென்னை வந்திருக்க வேண்டியவர்.

 

அப்பா, நீ வீட்டுக்கு நடந்துவரணும். உன்கிட்ட நிறைய பேசணும். உன்னுடைய குரல் கேட்டு நூறுநாளுக்கு மேல ஆச்சு. தெரிஞ்சிருந்தா முன்னாடியே பிக்பாஸில் இருந்து வெளியேறி, அப்பா கூட கொஞ்சநாள் இருந்திருப்பேன். விஜய் டிவி நிகழ்ச்சி திரும்ப வரும். என் அப்பா இனி திரும்ப வரமாட்டாரு. இந்த வாரம், நான் நிகழ்ச்சியில் தொடர்ந்திருந்தால், கடைசியாகக் கூட அப்பாவைப் பார்த்திருக்க முடியாது. வாழ்க்கை கணிக்க முடியாதது. எல்லாம் ஒரு காரணங்களுடன்தான் நடக்கிறது. பெற்றோரைக் கவனித்துக்கொள்ளுங்கள். குற்ற உணர்ச்சிக்கு ஆட்பட்டுள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

செய்தி வாசிப்பாளரிலிருந்து சினிமா நடிகை; “இலக்கே இல்லாதது எனது பயணம்” - அனிதா சம்பத்

Published on 21/04/2023 | Edited on 21/04/2023

 

 Anitha Sampath Interview 

 

செய்தி வாசிப்பாளராக இருந்து சின்னதிரை நிகழ்ச்சிகளின் வழியே இப்போது சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி இருக்கும் அனிதா சம்பத்தை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்தோம். அப்போது அவரது இந்த நீண்ட பயண அனுபவம் குறித்த கேள்விகளை அவரிடம் முன்வைத்தோம்.

 

அனிதா சம்பத் பேசியதாவது, “எனக்கென்று இலக்கே இருந்ததில்லை. ஒரு இலக்கு இருந்தது. அது செய்தி வாசிப்பாளராக இருக்க வேண்டும் என்பது தான். அது கிடைத்ததும் அதிலிருந்து கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையுமே நான் பயன்படுத்திக் கொண்டேன். நகைக்கடை விளம்பரம் முதல் பெரிய நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவது வரை அடுத்தடுத்து அதுவாகவே என்னை அழைத்துக் கொண்டு போகிறது. கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் என்னுடைய பெஸ்டை கொடுக்க வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய பாலிசி. அது தான் என் பயணமாக இருக்கிறது என்று நினைக்கிறேன்.

 

எந்த வாய்ப்பு கிடைத்தாலும் அதில் என்னுடைய கடின உழைப்பை செலுத்தி என்னை நிரூபிக்க முயற்சி செய்வேன். அந்த வகையில் தான் தெய்வ மச்சான் திரைப்படத்தில் விமலுக்கு தங்கையாக நடித்துள்ளேன். அதை காமெடியாக காட்டியிருக்கிறார்கள். சிறியவர் முதல் பெரியவர்கள் வரை கண்டுகளிக்கும் வகையில் ஒரு சிறப்பான படமாக திரையரங்கில் வர உள்ளது.” என்றார்.

 


 

Next Story

'எஸ்.கே 20' படத்தில் இணையும் அனிதா சம்பத்?

Published on 06/01/2022 | Edited on 06/01/2022

 

big boss fame anitha sampath joining sk20 movie

 

டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் டான் படத்திலும், இயக்குநர் ரவிக்குமார் இயக்கும் அயலான் படத்திலும் நடித்துமுடித்துள்ளார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து இறுதிக்கட்ட பணியில் உள்ளது. இதையடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தாக இயக்குநர் அனுதீப் இயக்கம் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக 'எஸ்.கே 20' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து சுரேஷ் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. தமன் இசையமைக்கவுள்ளார்.

 

இந்நிலையில் பிக் பாஸ் புகழ் அனிதா சம்பத் 'எஸ்.கே 20' படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழக மக்களிடையே பிரபலமானார். அதன் பிறகு ஓரிரு படங்களில் நடித்து வரும் அனிதா சம்பத் அடுத்ததாக சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.