Skip to main content

''நம்பிக்கை இழந்து விடாதீர்கள்'' - ஆண்ட்ரியா வேண்டுகோள்!

Published on 13/05/2020 | Edited on 13/05/2020

 

ngchd


உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் இதன் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருப்பதால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளதால் தமிழக காவல்துறையினர் இடைவிடாது பணிபுரிந்து வருகிறார்கள். இதனால் காவல்துறையினரில் 75-க்கும் அதிகமானோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருந்தும் அவர்கள் தன்னலமின்றி நேரம், காலம் பார்க்காமல் பணி செய்து கொண்டிருப்பதற்குப் பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர். நேற்று நடிகர் சூரி காவல் நிலையம் சென்று கலவலர்களுக்கு நன்றி தெரிவித்து ஆட்டோகிராஃபும் வாங்கியது பரவலாக பாராட்டப்பட்டது.


இந்நிலையில், நடிகை ஆண்ட்ரியா காவல்துறையினரின் சேவையைப் பாராட்டி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்.. "நாட்டுக்காகவும், எங்கள் அனைவருக்காகவும் கடினமாக உழைக்கும் உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. வைரஸை எதிர்த்துக் கடுமையாகப் போராடி வருகிறீர்கள். நம்பிக்கை இழந்து விடாதீர்கள். எல்லாம் சரியாகும். அனைத்தும் மீண்டும் நல்லபடியாக மாறும் என்று நம்புகிறோம். நன்றி'' எனக் கூறியுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெற்றிமாறனுடன் இணைந்த 'அறம்' பட இயக்குநர் - அறிவிப்பை வெளியிட்ட சூர்யா

Published on 21/12/2022 | Edited on 21/12/2022

 

aram movie director gopi nainar next movie announced

 

தமிழில் பாடகியாக அறிமுகமான ஆண்ட்ரியா தற்போது நடிப்பிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் கடைசியாக வெற்றிமாறன் தயாரித்த 'அனல் மேலே பனித்துளி' படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த மாதம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இன்று (21.12.2022) ஆண்ட்ரியா தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  

 

இதனைத் தொடர்ந்து தற்போது ஆண்ட்ரியா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அறம் படத்தை இயக்கிய கோபி நயினார் இப்படத்தை இயக்க வெற்றிமாறன் தயாரிக்கிறார். 'மனுசி' என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த போஸ்டர் தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. 

 

கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான 'அறம்' படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து அவர் இயக்கத்தில் உருவாகும் 'மனுசி' படத்தை வெற்றிமாறன் தயாரிக்க ஆண்ட்ரியா நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. 

 

 

 

Next Story

தள்ளிப்போகும் பிசாசு 2 - வெளியான லேட்டஸ்ட் தகவல்

Published on 27/08/2022 | Edited on 27/08/2022

 

pisasu 2 get postponed - latest information released

 

கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான பிசாசு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது 'பிசாசு 2' படத்தை மிஷ்கின் இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் முருகானந்தம் தயாரிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வரும் 31 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் இரண்டாவது பாடலான 'நெஞ்சை கேளு' அண்மையில் வெளியானது.

 

இதனிடையே 'பிசாசு 2' படத்தை தணிக்கை குழுவிற்கு படக்குழு அனுப்பியதாகவும், படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் படக்குழு சில காட்சிகளை நீக்கி யு/ஏ சான்றிதழ் வாங்க மீண்டும் தணிக்கை குழுவிற்கு அனுப்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் படம் சொன்ன தேதியில் வெளியாகுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இது குறித்து விரைவில் படக்குழு விளக்கமளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.