Advertisment

கரோனா தொற்று... வீட்டுத் தனிமையில் நடிகை ஆண்ட்ரியா!

Andrea Jeremiah

Advertisment

இந்தியாவில் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை ஏற்படுத்திய தாக்கத்தால், பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதிகரிக்கும் மரணங்கள், மருத்துவமனைகளில் நிலவும் ஆக்சிஜன் மற்றும் படுக்கைகளின்மை ஆகியன மத்திய, மாநில அரசுகளுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன. அதே நேரத்தில், கரோனா தொற்றில் இருந்து மீண்டு வருவோரின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்துவருவது சற்று ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது.

இந்த நிலையில், பிரபல நடிகை ஆண்ட்ரியாவிற்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "கடந்த வாரம் எனக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. என்னைப் பார்த்துக்கொண்ட என் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு நன்றி. இன்னும் வீட்டுத்தனிமையில்தான் உள்ளேன். தற்போது நல்லபடியாக குணமடைந்துவருகிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Andrea Jeremiah
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe