Skip to main content

காட்டை கலங்கவைக்கும் 'கா'.... புதிய பரிமாணத்தில் ஆண்ட்ரியா

Published on 30/04/2018 | Edited on 02/05/2018

Andrea


அவள் படத்தை அடுத்து நடிகை ஆண்ட்ரியா நடிப்பில் ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம்  'கா'. முழுக்க முழுக்க கதாநாயகியை முன்னிலைப்படுத்தி உருவாக்கப் பட்டுள்ள இப்படத்தை புதுமுக இயக்குனர் நாஞ்சில் இயக்கியுள்ளார். கா என்றால் இலக்கியத் தமிழில் காடு, கானகம் என்று பொருள்படும். முழுக்க முழுக்க காட்டை மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளதால் இதற்கு 'கா' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். கொடிய மிருகங்கள் வாழும் காட்டுப் பகுதிகளுக்கு சென்று அவற்றின் வாழ்க்கை முறைகளையும் மற்றும் குணாதிசயங்களையும் பதிவு செய்யும் வைல்ட் லைப் போடோகிராபர் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் இளவரசு மற்றும்  நீண்ட இடைவெளிக்கு பிறகு 'வேதநாயகம்' புகழ் சலீம் கவுஸ்  நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கிரைம் திரில்லர் படமாக உருவாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கி அந்தமான், மூணார், மேற்கு தொடர்ச்சி மலைகள் போன்ற இடங்களில் நடைபெற உள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

''நம்பிக்கை இழந்து விடாதீர்கள்'' - ஆண்ட்ரியா வேண்டுகோள்!

Published on 13/05/2020 | Edited on 13/05/2020

 

ngchd


உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் இதன் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருப்பதால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளதால் தமிழக காவல்துறையினர் இடைவிடாது பணிபுரிந்து வருகிறார்கள். இதனால் காவல்துறையினரில் 75-க்கும் அதிகமானோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருந்தும் அவர்கள் தன்னலமின்றி நேரம், காலம் பார்க்காமல் பணி செய்து கொண்டிருப்பதற்குப் பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர். நேற்று நடிகர் சூரி காவல் நிலையம் சென்று கலவலர்களுக்கு நன்றி தெரிவித்து ஆட்டோகிராஃபும் வாங்கியது பரவலாக பாராட்டப்பட்டது.


இந்நிலையில், நடிகை ஆண்ட்ரியா காவல்துறையினரின் சேவையைப் பாராட்டி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்.. "நாட்டுக்காகவும், எங்கள் அனைவருக்காகவும் கடினமாக உழைக்கும் உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. வைரஸை எதிர்த்துக் கடுமையாகப் போராடி வருகிறீர்கள். நம்பிக்கை இழந்து விடாதீர்கள். எல்லாம் சரியாகும். அனைத்தும் மீண்டும் நல்லபடியாக மாறும் என்று நம்புகிறோம். நன்றி'' எனக் கூறியுள்ளார்.

 

 

 

Next Story

நடிகை ஆண்ட்ரியாவுக்கு மிரட்டல்? காரணமான அந்த நபர் அதிர்ச்சி தகவல்!

Published on 19/10/2019 | Edited on 19/10/2019

சில நாட்களுக்கு முன்பு நான் திருமணம் ஆன நபரால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானேன் என்று நடிகை ஆண்ட்ரியா கூறியிருந்தார். இது தமிழ் சினிமா துறையினர் மத்தியில் பெரும் சர்ச்சையானது. அதாவது, நடிகை ஆண்ட்ரியா ’ப்ரோக்கன் விங்க்’ என்ற தலைப்பில் கவிதை புத்தகம் ஒன்றை எழுதி இருக்கிறார். இந்த புத்தக வெளியீடு சமீபத்தில் பெங்களூரில் நடந்தது. அப்போது அந்த புத்தகத்தில் சோகமாக பல வரிகள் உள்ளது என்று நிகழ்வுக்கு வந்தவர்கள் ஆண்ட்ரியாவிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு திருமணம் ஆன ஒரு நபருடன் நான் உறவில் இருந்தேன். அதனால் நான் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகுந்த துன்புறுத்தலுக்கு அவரால் பாதிக்கப்பட்டேன் என்று தெரிவித்து இருந்தார். 
 

actress



மேலும் இதிலிருந்து விடுபட சில நாட்கள் ஓய்வு எடுத்துக் கொண்டு ஆயுர்வேத சிகிச்சை பெற்று கொண்டேன். எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இந்தப் புத்தகத்தில் தைரியமாக குறிப்பிட்டு இருக்கிறேன்” என்று தெரிவித்து இருந்தார். அதோடு,  அந்த நபர் யார் என்று ரசிகர்கள் தொடர்ந்து கேட்க அதுகுறித்த முழுமையான தகவலை தான் "broken wings" புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பதாகவும், தங்களுக்குள் நடந்த அனைத்தும் தகவல்களும் அதில் இடம்பெறும் என்று குறிப்பிட்டிருந்தார்.மேலும் அந்த நபரை பற்றி வெகு விரைவில் சொல்லப்போவதாக தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் ஆண்ட்ரியாவிற்கு சில மர்ம நபர்கள் மிரட்டல் விடுவதாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதற்கு காரணம் ஆண்ட்ரியா ’ப்ரோக்கன் விங்க்’ புத்தகத்தில் குறிப்பிட்ட அந்த நபர் காரணமாக இருக்கலாம் என்று கூறிவருகின்றனர்.