Skip to main content

விஜய் படத்தில் இணைந்த மற்றொரு முன்னணி நடிகை  

Published on 30/10/2019 | Edited on 30/10/2019

'பிகில்' படத்திற்கு பிறகு நடிகர் விஜய் அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்த நிலையில் இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது தலைநகர் டெல்லியில் தொடங்கியுள்ளது.

 

andrea

 

 

விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கும் இப்படத்தில் நாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் சாந்தனு, ஆண்டனி வர்கீஸ் ஆகியோர் நடிக்கும் இப்படத்தில் தற்போது புதிய வரவாக நடிகை ஆண்ட்ரியா இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முக்கிய கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிப்பதாகவும், டெல்லியில் நடைபெறும் படப்பிடிப்பில் அவர் விரைவில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

இனி ‘தளபதி 64’ இல்லை... வெளியானது விஜய் பட தலைப்பு!

Published on 31/12/2019 | Edited on 31/12/2019

பிகில் படத்தை தொடர்ந்து விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்யுடன் விஜய்சேதுபதி, சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படம் சென்னை, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் ஷூட் செய்யப்பட்டு தற்போது கர்நாடகாவில் சிமோகா மத்திய சிறையில் ஷூட் செய்யப்பட்டு வருகிறது.
 

master

 

 

டிசம்பர் தொடக்கத்திலிருந்து இந்த பகுதியில் ஷூட்டிங்கை தொடங்கியுள்ள படக்குழு அடுத்த மாதம் வரை ஷூட்டிங்கை நடத்த திட்டமிட்டுள்ளது. விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் சேர்ந்து நடிக்கும் காட்சிகள் சிமோகாவில்தான் எடுக்கிறார்கள் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு இன்று மாலை ஐந்து மணிக்கு ஃபர்ஸ்ட் லுக் வெளியிடுவதாக முன்னமே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உலகளவில் ட்விட்டரில் ட்ரெண்டாகியுள்ளது. தளபதி 64 என்று சொல்லப்பட்டு வந்த இப்படத்திற்கு மாஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ளது. 

 

 

Next Story

தளபதி 64 ஷூட்டிங்கில் ரசிகருக்கு கேக் ஊட்டிய விஜய் சேதுபதி!

Published on 28/12/2019 | Edited on 28/12/2019

பிகில் படத்தை தொடர்ந்து விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்யுடன் விஜய்சேதுபதி, சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படம் சென்னை, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் ஷூட் செய்யப்பட்டு தற்போது கர்நாடகாவில் சிமோகா மத்திய சிறையில் ஷூட் செய்யப்பட்டு வருகிறது.
 

vijay sethupathi

 

 

டிசம்பர் தொடக்கத்திலிருந்து இந்த பகுதியில் ஷூட்டிங்கை தொடங்கியுள்ள படக்குழு அடுத்த மாதம் வரை ஷூட்டிங்கை நடத்த திட்டமிட்டுள்ளது. விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் சேர்ந்து நடிக்கும் காட்சிகள் சிமோகாவில்தான் எடுக்கிறார்கள் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் தனது பிறந்தநாளை கொண்டாடிவிட்டு, கேக்கை எடுத்துக்கொண்டு சிமோகா ஷூட்டில் இருக்கும் விஜய் சேதுபதியை பார்க்க சென்றுள்ளார். அப்போது அவருக்கு பிறந்தநாள் என்ற விஷயம் தெரிந்த விஜய் சேதுபதி, அவருக்கு கேக்கை ஊட்டிவிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.