Skip to main content

பிரம்மாண்ட மல்டிபிளக்ஸ் திரையரங்கை தொடங்கிய அன்புசெழியனின் மகள்!

Published on 17/11/2020 | Edited on 17/11/2020

 

anbu chezhiyan daughter

 

 

பிரபல சினிமா பைனான்சியரும், தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான G.N.அன்புசெழியனின் மகள் சுஸ்மிதா அன்புசெழியன். இவர் MBA முதுகலை பட்டப்படிப்பை முடித்தவர். மேலும் இவர் கோபுரம் சினிமாஸின் உரிமையாளர்.

 

தீபாவளி அன்று மூன்று திரையரங்குகள் அடங்கிய “கோபுரம் சினிமாஸ்” மதுரை மல்டிபிளக்ஸை திறந்து வைத்தார். 

 

இவர் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள நீண்ட வரலாறு பொருந்திய ராஜ் திரையரங்கத்தையும் ஆறு திரைகள் உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டராக மாற்ற முடிவெடுத்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் கூறுகையில், “மதுரை மக்களுக்கு நல்ல படம் பார்க்கும் அனுபவத்தை அமைத்து கொடுக்க வேண்டும் என்பதும், எங்கள் மல்டிபிளக்ஸ்ற்குள் வருபவர்களுக்கு நல்ல பாதுகாப்பையும், தரமான உணவையும் கொடுக்க வேண்டும் என்பதோடு மட்டுமில்லாமல் தூய்மையான சூழ்நிலையையும் உருவாக்கி தருவதே எங்களுடைய மகத்தான நோக்கமாக உள்ளது” என்று கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"எம்.ஜி.ஆர், ரஜினி, விஜய்க்கு அடுத்தது சிவாதான்" - அன்புச்செழியன் புகழாரம்

Published on 18/10/2022 | Edited on 18/10/2022

 

"Next to MGR, Rajini, Vijay is Siva" - Anbuchezhiyan praises!

 

தெலுங்கு இயக்குநரான அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'பிரின்ஸ்' திரைப்படம் வரும் அக்டோபர் 21- ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. உக்ரைன் நாட்டு நடிகையான மரியா ரியாபோஷாப்கா இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில், சென்னையில் 'பிரின்ஸ்' படக்குழுவினர் நேற்று (17/10/2022) செய்தியாளர்களைச் சந்தித்தனர். 

 

அப்போது பேசிய, சினிமா ஃபைனான்சியரும், கோபுரம் ஃபிலிம்ஸின் தலைவருமான அன்புச்செழியன் "பிரின்ஸ் திரைப்படம் தமிழகம் முழுவதும் எங்கள் நிறுவனத்தின் மூலமாக வெளியிடுவதில் மிகவும் சந்தோஷமாக உள்ளது. ஏறக்குறைய, 650 ஸ்கிரீன்களில் இபபடத்தை வெளியிடவிருக்கிறோம். வழக்கமாக, சிவகார்த்திகேயன் நடித்த அனைத்துப் படங்களும் வெற்றி பெற்றிருக்கிறது. அதேபோல், இந்தப் படமும் வெற்றி பெறும். தமிழ் சினிமாவில் எல்லோருக்கும் பிடித்த ஹீரோவாக ஒரு சிலர் இருப்பார்கள். 

 

முதலில் எம்.ஜி.ஆர்., அதற்கு அடுத்தபடியாக ரஜினி சார், விஜய் சார் உள்ளனர். இந்த வரிசையில் சிவகார்த்திகேயன் இடம் பெற்று அனைத்து தரப்பினருக்கும் பிடித்த ஹீரோவாக இருப்பதும், படத்தை வெளியிடுவதும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. இந்த தீபாவளி சிவகார்த்திகேயன் தீபாவளி என்பதில் மிகுந்த சந்தோஷமாக உள்ளது. அனைத்து குழந்தைகளும் சந்தோஷமாகப் பார்த்துச் செல்லும் ஒரு படமாக இப்படம் அமையும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

 

Next Story

ஃபைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் கணக்கில் வராத ரூ.200 கோடி கண்டுபிடிப்பு

Published on 06/08/2022 | Edited on 06/08/2022

 

rs 200 crore found Anbu chezhiyan house income tax department

 

சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட இடங்களில் கடந்த 4 நாட்களாக நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.200 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

 

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அன்புச்செழியன். இவர் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். தங்கமகன், வெள்ளைக்காரத்துரை, ஆண்டவன் கட்டளை உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ளார். மேலும், சினிமா தயாரிப்பாளர்களுக்கு பணத்தை வழங்கி ஃபைனான்சியர் தொழிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் அ.தி.மு.க. முக்கிய பொறுப்பில் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகர் முதல் தெருவில் உள்ள அன்புச்செழியனின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 4 நாட்களாக சோதனை நடத்தினர். 

 

அன்புச்செழியனுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் 10 இடங்களிலும், மதுரையில் சுமார் 30 இடங்களிலும் நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை இன்று நிறைவடைந்தது.

 

இந்நிலையில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 200 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் கணக்கில் வராத ரூ.26 கோடி ருபாய் ரொக்கம் மற்றும் ரூ. 3 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இன்னும் சில தயாரிப்பாளர்களின் இல்லத்திலும் சோதனை நடத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது.