Skip to main content

அன்பறிவு திரைப்படம் வேல் படம்போல இருக்கிறதா? - இயக்குநர் அஸ்வின் ராம் விளக்கம்

Published on 12/01/2022 | Edited on 12/01/2022

 

Aswin Raam

 

அறிமுக இயக்குநர் அஸ்வின் ராம் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி, காஷ்மீரா பர்தேஷி, நெப்போலியன், விதார்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான அன்பறிவு திரைப்படம் அண்மையில் ஓடிடி தளத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த நிலையில், படத்தின் இயக்குநர் அஸ்வின் ராமை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்த சந்திப்பில், அன்பறிவு திரைப்படம் வேல் படம்போல இருக்கிறது என்று ரசிகர்கள் சிலர் அளித்த விமர்சனம் குறித்த கேள்விக்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு... 

 

"இந்தப் படத்தை டபுள் ஆக்ஷன் படம் என்று நான் பார்க்கவில்லை. டபுள் ஆக்ஷன் என்ற கான்சப்டை தாண்டி கதையை ரொம்பவும் நம்பினோம். கதை எழுதும்போதே இரண்டு அண்ணன் தம்பிகள் என்று மட்டுமே யோசித்து கதைக்கு என்ன தேவையோ அதை மட்டுமே எழுதினோம். இதை டபுள் ஆக்ஷன் படம் என்று நினைத்து எழுதியிருந்தால் அது சம்பந்தப்பட்ட விஷயங்கள் கூடுதலாக வந்திருக்கும். ட்ரைலர் பார்த்துவிட்டு நிறைய பேர் வேல் படம் மாதிரி இருப்பதாகக் கூறினார்கள். இதுக்கு பதில் சொல்லலாமே என்று என்னிடம் நிறைய பேர் சொன்னார்கள்.

 

பெரிய ஹிட் படத்தோடு நம் படத்தை ஒப்பிடுகிறார்கள். அதை ஜாலியாக ரசிப்பதைவிட்டு எதற்கு பதில் சொல்லணும் என நான் கூறிவிட்டேன். ஹரி சார் மாதிரியான மிகப்பெரிய இயக்குநர் எடுத்த படத்தோடு நம் படத்தின் ட்ரைலரை ஒப்பிடுகிறார்கள் என்றால் அதுவே மிகப்பெரிய அங்கீகாரம்தான். அதே நேரத்தில் படம் பார்க்கும்போது அப்படியில்லை என்று அவர்களுக்கு புரியும் என்றும் நம்பினேன். அதேபோல படம் வெளியான பிறகு யாரும் அது பற்றி பெரிதாக பேசவில்லை. சிலர் மட்டும் கூறினார்கள். அது அவர்களுடைய பார்வை. அதை நாம் மாற்ற முடியாது". இவ்வாறு இயக்குநர் அஸ்வின் ராம் கூறினார்.     

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழில் ஒலித்த குரல் - மகிழ்ச்சியில் ஹிப் ஹாப் ஆதி

Published on 12/10/2023 | Edited on 12/10/2023

 

hiphop adhi about his travelling flight announced information in tamil

 

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான ஆதி, தொடர்ந்து மீசைய முறுக்கு, நட்பே துணை உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து பிரபலமானார். கடைசியாக இவர் நடிப்பில் 'வீரன்' படம் வெளியானது. இப்போது ஐசரி கணேஷ் தயாரிப்பில் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கும் 'பி.டி சார்' படத்தில் நடிக்கிறார். 

 

இந்த நிலையில் தனது சமூக வலைத்தளத்தில் விமானத்தில் பயணம் மேற்கொண்ட போது தமிழில் ஒலித்த குரலை கண்டு மகிழ்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சென்னையில் இருந்து திருச்சி செல்லும் விமானத்தில்... என குரல் ஒலிக்க ஆரம்பித்ததும், அட தமிழ்ல அறிவிப்பு பண்றாங்களேப்பா என ஒரு சின்ன சந்தோஷம். 'வலப்புறம் 2000 ஆண்டுகள் பழைய பொறியியல் அதிசயமான சோழன் கட்டிய கல்லணையைக் காணலாம். இடப்புறம் கொள்ளிடத்தைக் காணலாம்...' என ஒவ்வொரு அறிவிப்பிலும் பெருமையோடு தமிழில் அறிவித்த அந்தக் குரலின் சொந்தக்காரனை காணவேண்டும் என ஆசை. 

 

சாந்தமான முகத்தோடு வந்த பைலட் பிரியன் விக்னேஷிடம் 'அருமை நண்பா' என மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டேன். இதில் சிறப்பு என்னவெனில், பிரியன் ஆங்கிலத்தில் அறிவிக்கும்போது அவர் சொல்லச் சொல்ல, இரண்டு வெளிநாட்டு பயணிகள் எட்டி ஆச்சரியத்தோடு கல்லணையை பார்க்க ஜன்னல் அருகே முண்டியடித்தனர்" என குறிப்பிட்டு அது சம்பந்தமான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். 

 

 


 

Next Story

"கவர்னருக்கு மாற்றில்லை" - டாக்டர் பட்டம் வாங்கிய ஆதி

Published on 24/08/2023 | Edited on 24/08/2023

 

hip hop aadhi about governer rn ravi

 

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஆதி. தொடர்ந்து மீசைய முறுக்கு, நட்பே துணை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். கடைசியாக இவர் நடிப்பில் 'வீரன்' படம் வெளியானது. இப்போது ஐசரி கணேஷ் தயாரிப்பில் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கும் 'பி.டி சார்' படத்தில் நடித்து வருகிறார். 

 

கடந்த மார்ச் அன்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் தான் டாக்டர் பட்டம் முடித்துள்ளதாக தெரிவித்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் பி.ஹெச்டி முடித்துள்ளேன். ஆனால் படிச்சு வாங்கின டாக்டர் பட்டம். அதனால் டாக்டர் ஹிப் ஹாப் தமிழா என்றே அழைக்கலாம். இசைத் துறையில் (Music Entrepreneurship) முடித்துள்ளேன். எனக்கு தெரிந்து இந்தியாவில் இந்த துறையில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளது இதுதான் முதல் முறை. இதை முடிக்க கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் ஆகிவிட்டது" என்றார். 

 

இந்நிலையில் கோவை பாரதியார் அரசுப் பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி கையில் இசைத் துறையில் (Music Entrepreneurship) என்ற பிரிவில் டாக்டர் பட்டம் வாங்கியுள்ளார் ஆதி. பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "5 வருஷம் ஆராய்ச்சி செய்தேன். கடந்த வருஷம் முடித்தேன். இந்த வருஷம் வாங்கிவிட்டேன். நடித்துக்கொண்டே ஆராய்ச்சி செய்ததால் கொஞ்சம் கடினமாக இருந்தது. முனைவர் பட்டம் கவர்னர் கையில் தான் வாங்க வேண்டும். வேறெதுவும் மாற்றில்லை. சந்திரயான் 3 வெற்றி இந்தியாவுக்கே பெருமை" என்றார்.