Skip to main content

‘என்னோடு நீ இருந்தால்...’ - ப்ரோபோஸலை ஏற்றுக்கொண்ட எமி ஜாக்சன்

Published on 29/01/2024 | Edited on 29/01/2024
Amy Jackson gets engaged to Ed Westwick

மதராசபட்டினம், தாண்டவம், ஐ, தெறி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான எமி ஜாக்சன் ரஜினியின் 2.0 படத்திற்குப் பிறகு எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார். பின்பு நீண்ட இடைவெளிக்குப் பிறகு பொங்கலை முன்னிட்டு வெளியான அருண் விஜய்யின் மிஷன் சாப்டர் 1 படத்தில் நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

இதனிடையே 2019 ஆம் ஆண்டு ஜார்ஜ் பனாயிடோவுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இவர்களுக்கு அதே ஆண்டு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. பின்பு திருமணம் செய்து கொள்ளாமலே சில காரணங்களால் இருவரும் பிரிந்தனர். இதையடுத்து 2021லிருந்து ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக்குடன் டேட்டிங் செய்து வந்ததாகத் தகவல் வெளியானது. பின்பு 2022 ஆம் ஆண்டு இருவரும் காதலை உறுதி செய்தனர்.

இந்த நிலையில், ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக் எமி ஜாக்சனிடம் நிச்சயதார்த்தத்திற்காக மோதிரம் நீட்டி ப்ரோபோஸ் செய்துள்ளார். அவரது ப்ரோபோஸலை ஏற்றுக்கொண்ட எமி, அவர் கொடுத்த மோதிரத்தை வாங்கி கையில் அணிந்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் எமி ஜாக்சன். அந்த பதிவிற்கு கீழ் நடிகை கியாரா அத்வானி, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழில் ரீ என்ட்ரி - முன்னணி ஹீரோவுக்கு ஜோடியாகும் எமி ஜாக்சன்

Published on 02/09/2022 | Edited on 02/09/2022

 

Re-entry in Tamil cinema - Amy Jackson to pair with arun vijay in al.vijay direction movie

 

'மதராசபட்டினம்', 'தாண்டவம்', 'ஐ', 'தெறி' உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான எமி ஜாக்சன் கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியான 2.0 படத்தில் நடித்திருந்தார். இதனிடையே இந்தி, தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் நடித்தார். மேலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார். பின்பு, தான் கர்ப்பமாக உள்ளதை அறிவித்து கடந்த 2019-ஆம் ஆண்டு ஜார்ஜ் பனாயிடோவுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். மேலும் அதே ஆண்டு இருவருக்கும் ஆண் குழந்தை பிறக்க, பிறகு திருமணம் செய்து கொள்ளாமலே சில காரணங்களால் இருவரும் பிரிந்தனர். இப்போது ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக்கை காதலிப்பதாக கூறப்படுகிறது. 

 

இந்நிலையில் எமி ஜாக்சன் மீண்டும் நான்கு வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமா மூலம் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. இயக்குநர் ஏ.எல் விஜய், அடுத்ததாக அருண் விஜய்யை வைத்து இயக்கவுள்ளதாக கூறப்படும் படத்தில் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் ஆக்ஷன் ஜானரில் உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இது குறித்தான அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

 

 

Next Story

அக்‌ஷய் குமாரின் பாத்திரம் உருவாக்கப்பட்ட ’சலீம் அலியின்’ கதை இதோ... 

Published on 30/11/2018 | Edited on 01/12/2018

2.0 படத்தில் அக்‌ஷய் குமார் நடித்துள்ள ‘பக்‌ஷிராஜன்’ பாத்திரம், முழுக்க கற்பனை பாத்திரம் அல்ல. உண்மையில் இந்தியாவில் பறவைகளின் காதலர் ஒருவர் வாழ்ந்தார். அவர்தான் சலீம் அலி. தோற்றம் தொடங்கி, பல விதங்களில் சலீம் அலியை அடிப்படையாகக்கொண்டே அக்‌ஷய் குமாரின் பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. சலீம் அலியின் கதை இதோ...