/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/DZwnFyqUQAAFKPx.jpg)
விஜய் யேசுதாஸ் நாயகனாக நடித்த படை வீரன் படத்தின் நாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் புதுமுக நடிகை அம்ரிதா. இவருடைய குறு குறு பார்வையும், துரு துரு நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இவர் தற்போது விஜய் ஆண்டனியின் காளி படத்தில் நான்கு நாயகிகளில் ஒருவராக நடித்கிறார். இந்நிலையில் இப்படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து அம்ரிதா பேசும்போது...."விஜய் ஆண்டனி சாரின் இசையையும், அவரது நடிப்பையும் பார்த்து நான் வியந்திருக்கிறேன். மிகப்பெரிய உயரங்களை தொட்ட பிறகும் மிகவும் அடக்கமாக, எளிமையாக இருக்கும் அவரது பண்பை பார்த்து ஆச்சர்யப்படுகிறேன். படப்பிடிப்பில் ஒரு தோழராக மிகவும் நன்றாக பழகினார், நாங்கள் இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகளில் என் நடிப்பை பாராட்ட அவர் தவறியதே இல்லை. அது எனக்கு ஊக்கமளிக்கும் ஒரு சக்தியாக அமைந்து என்னை இன்னும் மெறுகேற்றிக் கொள்ள உதவியாக இருந்தது. குறிப்பாக நான் மிகவும் பதட்டப்படும் நெருக்கமான காதல் காட்சிகளில் நன்றாக பயமில்லாமல் நடிக்க உதவுவார்" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)