Skip to main content

அம்மு அபிராமி - புகழ் காம்போவில் உருவாகும் புதிய படம்

Published on 03/05/2022 | Edited on 03/05/2022

 

ammu abirami cook with comali pugazh joins new film

 

மிதுன் ஆதித் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் 'பாலமுருகனின் குதூகலம்'. முழுக்க முழுக்க காதல் கலந்த நகைச்சுவை திரைப்படமாக உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் உலகநாதன் சந்திரசேகரன் இயக்குகிறார். இவர் பட்டாசு, காக்கி சட்டை, கோடி, எதிர்நீச்சல் உள்ளிட்ட படங்களை இயக்கிய துரை செந்தில்குமாரிடம் துணை இணை இயக்குனராக பணியாற்றி உள்ளார். 

 

புதுமுக நடிகர் பாலமுருகன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக அம்மு அபிராமி நடிக்கிறார். படத்தின்  முக்கிய கதாபாத்திரத்தில் குக் வித் கோமாளி” புகழ், பிஜார்ன் சுர்ராவ், சன்சீவி கோ சுவாமி, கவிதா பாரதி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சுவாமிநாதன் கிளாப் போர்டு அடித்து திருப்பூரில் தொடங்கி வைத்தார். முழு வீச்சில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு விரைவில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“படம் பிடிக்கலைன்னா காலனியால் கூட அடிங்க” - இயக்குநர் பகிர் 

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
hotspot director vignesh karthick viral statement

கலையரசன், சோபியா, சாண்டி மாஸ்டர், அம்மு அபிராமி, கவுரி கிஷன், ஆதித்யா பாஸ்கர், ஜனனி ஐயர், சுபாஷ், உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஹாட்ஸ்பாட்’. விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ள இப்படத்தை கே.ஜே.பி டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் நிறுவனங்கள் சார்பில் கே.ஜே பாலமணி மார்பன் மற்றும் சுரேஷ்குமார் தயாரித்துள்ளனர். சதீஷ் ரகுநாதன் - வான் என இரண்டு பேர் இசையமைத்துள்ளனர். கடந்த மார்ச் 29 ஆம் தேதி இப்படம் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு திரைப்பட சங்க நிர்வாகிகளுக்கு இப்படம் திரையிடப்பட்டது. இதில் பேரரசு, மந்திர மூர்த்தி உள்ளிட்ட பல்வேறு இயக்குநர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய படத்தின் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் படம் பிடிக்கவில்லை என்றால் என்னை காலனியால் கூட அடிங்க என பகிரங்கமாக தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது,  “படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆனால் இன்னும் தியேட்டரில் நாங்க எதிர்பார்க்கிற கூட்டம் வரவில்லை. ஒரு வேளை ட்ரைலர் பார்த்து சில பேர் வராம இருக்காங்களா என தெரியவில்லை. மலையாள படங்களுக்கு அவ்ளோ சப்போர்ட் பன்றீங்க.

நீங்க கண்டிப்பா தியேட்டருக்கு வந்து பாத்தீங்கனா படம் பிடிக்கும். அப்படி பிடிக்கலைனா காலனியால் கூட என்னை அடிங்க. இதை சும்மா பேச்சுக்கு நான் சொல்லவில்லை. நீங்க படம் பாத்தீங்கனா, நல்லாருக்கு, ரொம்ப நல்லாருக்கு இல்ல சூப்பரா இருக்கு இப்படி தான் சொல்வீங்க. பிடிக்கல, அல்லது ஏண்டா வந்தோம்னு ஃபீல் பண்ண மாட்டீங்க. அப்படி ஃபீல் பண்ணீங்கன்னா முன்னாடி சொன்னது போல காலனியால் கூட அடிங்க. நீங்க தியேட்டருக்கு வந்து பார்த்தால் தான் படம் இன்னும் அதிகளவு மக்களை சென்றடையும். 

கருத்து சொல்கிற படமென்பதால் போர் அடிக்கிற மாதிரி எதுவும் சொல்லவில்லை. பயங்கர ஜாலியா தான் சொல்லியிருக்கிறோம். இது தியேட்டருக்கான படம். ஓடிடியில் பார்க்கும் போது அந்த அனுபவம் இருக்காது. ஆனால் தியேட்டரில் மக்களுடன் பார்ப்பது வேறுமாதியான அனுபவம். அதனால் முடிஞ்ச அளவிற்கு தியேட்டருக்கு வந்து பாருங்க. நீங்க சப்போர்ட் பண்ணி அதிகளவு பேசப்பட்டால் தான், இதுக்கப்புறம் பண்ணும் படமும் வித்தியாசமா பண்ணனும்னு தோணும். இல்லைனா வழக்கம் போல் படம் தான் பண்ண தோணும். அது உங்க கையில் தான் இருக்கிறது” என்றார்.  

Next Story

தன்பாலின ஈர்ப்பு குறித்த கேள்வி; அம்மு அபிராமியின் பளிச்சென்ற பதில்!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
ammu abhirami about lesbians dialogue

கலையரசன், சோபியா, சாண்டி மாஸ்டர், அம்மு அபிராமி, கவுரி கிஷன், ஆதித்யா பாஸ்கர், ஜனனி ஐயர், சுபாஷ், உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஹாட்ஸ்பாட்’. விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ள இப்படத்தை கேஜேபி டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் நிறுவனங்கள் சார்பில் கேஜே பாலமணி மார்பன் மற்றும் சுரேஷ்குமார் தயாரித்துள்ளனர். சதீஷ் ரகுநாதன் - வான் என இரண்டு பேர் இசையமைத்துள்ளனர். கடந்த மார்ச் 29 ஆம் தேதி இப்படம் வெளியாகியுள்ளது.

இதையொட்டி நக்கீரன் ஸ்டுடியோவிற்கு படத்தில் நடித்த கலையரசன், சோபியா, அம்மு அபிராமி, சுபாஷ் ஆகியோர் நேர்காணல் கொடுத்திருந்தார்கள். அப்போது அம்மு அபிராபியிடம் “தான் ஒரு தன்பாலீன ஈர்ப்பாளர்” என அவர் பேசிய வசனம் குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இப்போது உலகத்தில் எல்லோரும் முற்போக்கை நோக்கி போக ஆரம்பிச்சுட்டோம். காதல் என்பது காதல்தான். அது உண்மையாக இருந்தால் போதும். குறிப்பிட்ட பாலினத்தவரை பார்த்துத்தான் வர வேண்டும் என்றெல்லாம் கிடையாது. அந்த வசனத்தை பேசியதற்காக எந்த விதத்திலும் நான் வெட்கப்படவில்லை. அது ஒன்றும் தவறும் கிடையாது” என்றுள்ளார்.