Advertisment

ரஜினிக்கு நிறைவேறாத ஆசை, எஸ்.ஜே.சூர்யாவுக்கு நிறைவேறுகிறது... 

sj surya and hamithab

ஹிந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சனுடன்தமிழில்ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்பது தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஆசை. ஆனால், இந்த ஆசை ரஜினிகாந்திற்கு நிறைவேறாமல் இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யாவுக்கு நிறைவேறியுள்ளது. அமிதாப் பச்சன் முதன் முதலாக நடிக்க இருக்கும் இந்த படத்திற்கு உயர்ந்த மனிதன் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் எஸ்.ஜே.சூர்யா அவருடன் நடிக்கிறார் என்ற அதிகாரபூர்வ செய்தி நேற்று வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கான முதல் போஸ்டரை நேற்று ரஜினிகாந்த் வெளியிட்டார். அதை எஸ்.ஜே.சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

Advertisment

'உயர்ந்த மனிதன்' படம் தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகளிலும் எடுக்கப்படப்போவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்தை கள்வனின் காதலி என்ற படத்தை இயக்கிய தமிழ்வாணன் இயக்குகிறார். கள்வனின் காதலி படத்தில் ஹீரோவாக எஸ்.ஜே. சூர்யாவும், ஹீரோயினாக நயன்தாராவும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் இப்படத்தின் சூட்டிங் தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe