Skip to main content

உதவியாளர் காலமானதால் சோகத்தில் அமீர்கான்!

Published on 14/05/2020 | Edited on 14/05/2020

 

ami k


பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கானுக்கு 25 வருடங்களுக்கு மேலாக உதவியாளராகப் பணியாற்றி வந்தவர் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று நெஞ்சுவலி காரணமாக காலமானார். அவருடைய இறுதி அஞ்சலி புதன்கிழமை மதியம் நடைபெற்றது. அதில் அமீர்கான் மற்றும் அவருடைய மனைவி கிரண் ராவ் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.


தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான் படத்தை அடுத்து லால் சிங் சட்டா என்னும் படத்தில் நடித்து வருகிறார் அமீர்கான். தற்போது இந்தியா முழுவதும் லாக்டவுன் நடைபெறுவதால்,  ஷூட்டிங் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில்தான் அமீர்கானின் 25 வருட கால உதவியாளர் ஆமோஸ் பவுல் நாடார் நெஞ்சுவலி காரணமாக மரணமடைந்துள்ளார். அவருடைய திடீர் மரணத்தால் அமீர்கான் மிகவும் சோகமாக இருக்கிறார். அவருடைய மறைவிற்குத் திரையுலகில் அமீருக்கு நெருங்கிய வட்டாரங்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்