Skip to main content

ஹீரோயினே இல்லாத படத்தில் அமலா பால்; லோகேஷ் படத்துக்கு வந்த சோதனை

Published on 03/11/2022 | Edited on 03/11/2022

 

amala paul to joined in lokesh kaithi movie hindi remake bhola

 

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் கவனம் செலுத்தி வரும் அமலா பால் கடைசியாக 'கடாவர்' படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து 'அமலா பால் புரொடக்ஷன்' என்ற தனது தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரித்தும் இருந்தார். இப்படம் அமலா பாலின் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து மலையாளத்தில் 'டீச்சர்', 'கிறிஸ்டோபர்' உள்ளிட்ட படங்களில் நடிக்கிறார்.

 

ad

 

இந்நிலையில் அமலா பால் தற்போது பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் 'கைதி'. இப்படம் தற்போது இந்தியில் ரீமேக் ஆகி வருகிறது. இப்படத்தை 'போலா' என்ற தலைப்பில் அஜய் தேவ்கன் நடித்து அதை இயக்கியும் வருகிறார். இப்படத்தில் நடிகை தபு போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து தற்போது அமலா பால் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

 

'கைதி' படம் ஒரே நாள் இரவில் நடக்கும் சம்பவங்களை வைத்து உருவாகியிருந்தது. அதே சமயம் இந்த படத்தில் கதாநாயகியும் பாட்டும் இல்லாமல் காட்சிகள் அமைந்திருக்கும். இப்படத்தில் அமலா பால் நடிப்பது உறுதியாகும் பட்சத்தில் ஹீரோயினே இல்லாத இந்த படத்தில் அவர் எந்த கதாபாத்திரத்தில் நடிப்பார் என்ற கேள்வி ரசிகர்களின் மனதில் எழுந்து வருகிறது.

 

ஏற்கனவே தமிழில் இருந்து இந்தியில் ரீமேக்கான 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'காஞ்சனா', 'ராட்சசன்' உள்ளிட்ட பல படங்கள் தோல்வியடைந்து ரசிகர்களை சோதித்திருந்தது. அந்த வரிசையில் இப்போது லோகேஷ் படமும் வந்துவிடுமோ என்ற கவலையில் உள்ளனர் லோகேஷின் ரசிகர்கள். இதனிடையே லோகேஷின் முதல் படமான 'மாநகரம்' படமும் இந்தியில் 'மும்பைகார்' என்ற தலைப்பில் ரீமேக் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜய் படம் பார்க்கும் சி.எஸ்.கே வீரர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Ruturaj Gaikwad watch vijay leo movie

இந்தாண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் கடந்த மாதம் 22ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 5 முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிஸ் அணியை ருதுராஜ் கெயிக்வாட் தலைமை தாங்குகிறார். இளம் வீரரான இவர் தொடர்ந்து ஒவ்வொரு போட்டிகளிலும் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 8 போட்டிகலில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றியைப் பெற்றுள்ளார். 

இந்த நிலையில் ருதுராஜ் கெயிக்வாட், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யின் லியோ படம் பார்ப்பதைப் போன்று ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இதையடுத்து அந்தப் புகைப்படத்தை சி.எஸ்.கே ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

 

Ruturaj Gaikwad watch vijay leo movie

லியோ படம் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியானது. லலித் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். பல சிக்கல்களைத் தாண்டி வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இருப்பினும் ரூ.500 கோடிக்கு மேல் உலகம் முழுவதும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

Next Story

‘முடிச்சிடலாம்...’ - வெளியான ‘ரஜினி 171’ பட அப்டேட்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
thalaivar 171 titled as coolie

ரஜினிகாந்த் தற்போது தனது 170ஆவது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கி வருகிறார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

இப்படத்தைத் தொடர்ந்து 171ஆவது படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் கை கோர்த்துள்ளார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பரிவ் இணைந்துள்ளனர். இப்படத்தின் கதை எழுதும் பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார். இந்த மாதம் படப்பிடிப்பு தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜூனில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.  

இப்படத்தில் ராகாவா லாரன்ஸ் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. பின்பு பாலிவுட் முன்னணி நடிகர் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இதில் ரன்வீர் சிங் நடிப்பது உறுதியாகிவிட்டதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து இப்படத்தில் ஷோபனா நடிக்கவுள்ளதாகவும், அவரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியானது. தொடர்ந்து ஸ்ருதிஹாசன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டு வந்தது. 

இந்த நிலையில் இப்படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. படத்திற்கு கூலி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. டைட்டில் டீசரில், தங்கம் கடத்தும் குடோனுக்குள், ரஜினி செல்கிறார். அங்கு அந்தக் கும்பலை அடித்துபோடுவது போல் காட்சி இடம்பெற்றுள்ளது. சண்டை காட்சிகள் நிறைந்த இந்த டீசரில் ரஜினி, வசனம் பேசிக்கொண்டே அக்கும்பலை தாக்குகிறார். “அப்பாவும் தாத்தாவும், வந்தார்கள் போனார்கள். தப்பென்ன, சரியென்ன, எப்போதும் விளையாடு. அடப்பாவி என்பார்கள், தப்பாக நினைக்காதே. எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே,... சோறுண்டு, சுகமுண்டு, மதுவுண்டு, மாதுண்டு, மனமுண்டு என்றாலே, சொர்கத்தில் இடமுண்டு” என்று அவர் ஏற்கெனவே அவர் படத்தில் பேசும் வசனம் இடம்பெறுகிறது.

மேலும் இறுதியில் ‘முடிச்சிடலாம் மா...’ ரஜினி சிரித்து கொண்டே பேசும் வசனம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இப்படம் தங்க கடத்தலை வைத்து உருவாகுவது போல் தெரியும் சூழலில் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.