Skip to main content

'அமலா பால் சிறப்பாக நடித்துள்ளார்' - நெகிழ்ந்த தயாரிப்பாளர் 

Published on 03/10/2018 | Edited on 03/10/2018
ratchasan

 

ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் ஜி.டில்லிபாபு தயாரித்துள்ள படம் 'ராட்சசன்'. விஷ்ணு விஷால், அமலா பால் இணைந்து நடித்துள்ள இப்படத்தில் காளி வெங்கட், முனீஷ்காந்த் ராமதாஸ், சுசானே ஜார்ஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தை முண்டாசுப்பட்டி இயக்குனர் டி.ராம் இயக்கியுள்ளார். வரும் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகும் இப்படம் குறித்து தயாரிப்பாளர் ஜி.டில்லிபாபு பேசும்போது... "ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி எப்போழுதும் நடிகர்களை தேர்வு செய்வதற்கு முன்னரே, வலுவான கதைகளை தேர்வு செய்து வருகிறது. அதே வகையில் தான் 'ராட்சசன்' படத்தையும் தேர்வு செய்தோம். நான் ஒரு தீவிர கிரைம் நாவல் வாசகர் என்பதால், இயக்குனர் ராம்குமார் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்து விட்டது.

 

 

 

அவர் சொன்னதை விட, படத்தை சிறப்பாக முடித்துக் கொடுத்திருக்கிறார். மேலும் படக்குழுவை பற்றி பாராட்ட எனக்கு வார்த்தைகளே இல்லை. நாயகன் விஷ்ணு விஷால் தனது கதாபாத்திரத்தை மிகச்சிறப்பாக செய்ய, நிறைய உழைத்தார். ஆராய்ச்சி செய்தார். தனது கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுக்க, அவரது தந்தையிடம் நிறைய விஷயங்களை கேட்டு தெரிந்து கொண்டார். அமலா பால் இதுவரை நடித்த படங்களை தாண்டி, அவரது சிறந்த படமாக இந்த படம் இருக்கும். மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். காளி வெங்கட், முனீஷ்காந்த், சுசானே ஜார்ஜ் ஆகியோர் இந்த படத்தில் இணையற்ற நடிப்பை வழங்கியிருக்கிறார். ஜிப்ரான் இசை படத்துக்கு மிகப்பெரிய பலமாக விளங்குகிறது. அவருக்கு ஒலி மற்றும் ஒலியை இசையுடன் கலப்பதில் நல்ல அறிவாற்றல் இருப்பதால் அது திரைப்படத்திற்கு மேலும் உயிர் சேர்க்கிறது" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரம்மண்டமாக நடந்த அமலா பால் வீட்டு நிகழ்வு

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
amala paul baby showering photos

அமலா பால் தற்போது மலையாளத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் பிரித்திவிராஜ் நடிப்பில் கடந்த மாதம் 28ஆம் தேதி வெளியான ஆடுஜீவிதம் படத்தில் நடித்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை படம் பெற்று வருகிறது. இப்படத்தை தவிர்த்து தற்போது இரண்டு மலையாள படங்கள் கைவசம் வைத்துள்ளார். 

இதனிடையே கடந்த 2014ஆம்  ஆண்டு இயக்குநர் ஏ.எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அமலா பால். பின்பு 2017 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார். 2020 ஆம் ஆண்டு மும்பையை சேர்ந்த பாடகர் பவ்நிந்தர் சிங்குடன், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வந்ததாக தகவல் வெளியானது. மேலும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி இணையதளத்தில் வைரலானது. ஆனால் இதை அமலா பால் அந்த புகைப்படங்கள் வெறும் ஃபோட்டோஷூட் தான் என மறுத்துவிட்டார். 

இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதி அவரது பிறந்தநாளன்று அவரின் நண்பர் ஜகத் தேசாய் ப்ரபோசலுக்கு சம்மதம் தெரிவித்தார். மேலும் விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாக தெரிவித்தார். அதன்படி கடந்த ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி கேரள மாநிலம், கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ஜகத் தேசாயை அமலா பால் திருமணம் செய்துகொண்டார். 

திருமணமான நான்கே மாதத்தில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார் அமலா பால். அப்படி இருக்கும் நிலையில் கூட ஆடுஜீவிதம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். இதையடுத்து கர்ப்பமானதை கணவருடன் பார்டி வைத்து கொண்டாடினார். அப்போது கணவருடன் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. 

இந்த நிலையில் அமலா பாலுக்கு வளைகாப்பு விழா பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது. கேரளாவில் நடந்த இந்த விழாவில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.  

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Amala Paul (@amalapaul)

Next Story

'இறைவனாய் தந்த இறைவியே…' - திருமண கோலத்தில் அமலா பால்

Published on 06/11/2023 | Edited on 06/11/2023

 

 

 

அமலா பால், அவரது கடந்த பிறந்தநாளன்று அவரின் நண்பர் ஜகத் தேசாய் ப்ரபோசலுக்கு சம்மதம் தெரிவித்தார். மேலும் விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாக தெரிவித்தார். இந்த நிலையில் கேரளா மாநிலம், கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ஜகத் தேசாயை அமலா பால் திருமணம் செய்துகொண்டார். நேற்று நடந்த (05.11.2023) இந்த திருமணத்தில் மணமக்களது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.