Skip to main content

"அந்த மூனு பேரை நம்பித்தான் நான் அப்படி நடித்தேன்" - நெகிழ்ந்த  அமலாபால்

Published on 06/07/2019 | Edited on 06/07/2019

'ஆடை'... ஃபர்ஸ்ட் லுக் வெளிவந்ததில் இருந்தே அதிர்வலைகளை ஏற்படுத்திய திரைப்படம், விரைவில் வெளிவர இருக்கிறது. இப்படத்தில் கதையின் முக்கியத்துவம் கருதி அமலா பால், நிர்வாணமாக நடித்திருந்தார். அந்த அனுபவம் குறித்து முதல் முறையாக 'ஆடை' படத்தின் செய்தியாளர் சந்திப்பில் வெளிப்படையாகப் பேசினார் அமலா. அவரது பேச்சில் இருந்து...

 

amala paul



"முதலில் கதையைப் படித்து, கேட்டு ஒரு ஆர்வத்தில், ஒரு தைரியத்தில் ஒத்துக்கொண்டேன். ஆனா அந்தத் தருணம் நெருங்க நெருங்கதானே சீரியஸ்னஸ் தெரியும்? அந்த நேக்கட் ஸீன் ஷூட் பண்ற நாள் வந்தது. நான் கேரவன்ல இருந்தேன். என் மேனேஜர் கிட்ட கேட்டேன், செட்ல எத்தனை பேர் இருப்பாங்க, செக்யூரிட்டி எப்படி இருக்கும் என்றெல்லாம். ஒரு மாதிரி ஸ்ட்ரெஸ்ஸா ப்ரெஷரா இருந்தது. செட்குள்ள போனேன். உள்ள பௌன்சர்செல்லாம் இருந்தாங்க. வர்றவங்க எல்லார்கிட்டயும் ஃபோனை வாங்கி வச்சுட்டாங்க. ஏர்போர்ட் அளவுக்கு செக்யூரிட்டி பலமா இருந்தது. லைட் மேன் அண்ணா, செட் அஸிஸ்டண்ட்ஸ் எல்லாருக்கும் அன்னைக்கு ரெஸ்ட் கொடுத்துட்டாங்க. செட்ல பதினைந்து பேர்தான் இருந்தாங்க.

  amala paul aadai



முதல் ஸீன் நடிச்சு முடிச்சுட்டு நான் போய் அவங்ககிட்ட, "பாஞ்சாலிக்கு அஞ்சு கணவர்கள்தான். நான் இப்போ என்னை 'பந்த்ராலி' (பதினஞ்சு கணவர்கள் உள்ளவள்) போல உணர்கிறேன். அந்த அளவு நம்பிக்கை வச்சாதான் அப்படி அங்க நடிக்க முடியும். அந்த அளவுக்கு அந்த டீம் எனக்கு கம்ஃபர்ட் கொடுத்தாங்க. டைரக்டர் ரத்னா, தயாரிப்பாளர் சுப்பு, கேமராமேன் விஜய் கார்த்திக் இவுங்க மூனு பேர் மேல நான் வச்ச நம்பிக்கை, இன்னைக்கு நல்ல படமாக வந்திருக்கு. இவங்கள நம்புனதுதான் சமீபத்தில் நான் எடுத்த மிக நல்ல முடிவு"

இப்படி மிக நெகிழ்ந்து பேசினார் அமலா பால்.

 

             

சார்ந்த செய்திகள்

Next Story

நடிகை அமலாபாலை கௌரவித்த அமீரகம்!

Published on 29/12/2021 | Edited on 29/12/2021

 

actress amala paul has been granted golden visa uae

 

ஐக்கிய அரபு அமீரகத்தில் முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர், ஆராய்ச்சி மற்றும் அறிவியலில் சிறந்து விளங்கும் மாணவர்கள், விளையாட்டு துறையில் சாதித்தவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் 10 ஆண்டுகள் செல்லுபடியாகக் கூடிய  கோல்டன் விசாவை வழங்குகிறது. அதன்படி இந்தியாவில், ஷாருக்கான், அமிதாப்பச்சன், மோகன் லால், துல்கர் சல்மான், மம்முட்டி உள்ளிட்ட பலருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.

 

ad

 

சமீபத்தில் நடிகை த்ரிஷா மற்றும் நடிகர் பார்த்திபன் இருவருக்கும் அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்த நிலையில் தற்போது நடிகை அமலாபாலுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில்," இந்த கௌரவத்தை பெற்றதற்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் துபாயின் ஒரு அங்கமாக தற்போது உணருகிறேன். எனக்கு பிடித்த இடங்களில் துபாய்யும் ஒன்று. கோல்டன் விசா வழங்கிய துபாய் அரசு மற்றும்  அதிகாரிகளுக்கு நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.

 

 

Next Story

"எனக்கென்று தனிப்பட்ட வாழ்க்கை எதுவும் இல்லை" - அமலா பால் 

Published on 16/07/2021 | Edited on 16/07/2021

 

hrhsdhdsh

 

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்துவரும் நடிகை அமலாபால், தற்போது தெலுங்கில் ‘குடி யடமைத்தே’ எனும் வெப் தொடரில் நடித்துள்ளார். அமலா பால் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் இந்தப் படம் இன்று (16.07.2021) ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. ராம் விக்னேஷ் இயக்கியுள்ள இத்தொடரில் அமலாபாலுடன் இணைந்து ஈஸ்வர் ரச்சிராஜு, ப்ரதீப் ருத்ரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த தொடர் குறித்த ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேட்டி அளித்த அமலா பால், தன் சினிமா வாழ்க்கை குறித்து பேசும்போது....

 

"எனக்கு பதினேழு வயது இருக்கும்போது திரைத்துறைக்குள் வந்தேன். என் தனிப்பட்ட வாழ்வில் நான் கடந்துவந்த விஷயங்கள் அனைத்தும் என் திரை வாழ்விலும் பிரதிபலித்தன. அதேபோல சினிமா வாழ்வில் சந்தித்த விஷயங்கள் என் சொந்த வாழ்க்கையிலும் பிரதிபலிக்கின்றன. அவை இரண்டையும் பிரிக்கும் கலை எனக்குத் தெரியவில்லை. என் அப்பாவின் மரணத்தை நான் எதிர்கொண்டபோது, அது எனக்கு உண்மையில் ஒரு சுயபரிசோதனை காலகட்டமாகவே இருந்தது. அப்போது நான் ஒரு திறந்த புத்தகமாக உணர்ந்தேன். எனக்கென்று தனிப்பட்ட வாழ்க்கை எதுவும் இல்லை என்று உணர்ந்தேன். நான் செய்த விஷயங்களைத் தாண்டி என் வாழ்க்கை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதைப் போல உணர்ந்தேன். தற்போது என் சினிமா வாழ்க்கையிலிருந்து என் தனிப்பட்ட வாழ்க்கையைப் பிரிக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். அந்தக் கலையை நான் கற்றுக்கொள்ள இன்னமும் முயற்சி செய்துவருகிறேன்" என கூறியுள்ளார்.