பலராலும் பாராட்டு பெற்று ரசிகர்களிடேயே நல்ல வரவேற்பை பெற்ற 'மேயாத மான்' படத்தை இயக்கியவர் ரத்ன குமார். இவர் அடுத்ததாக 'ஆடை' என்ற படத்தை இயக்கவுள்ளார். உணர்ச்சிகரமான கதை களத்தை கொண்ட இந்த படத்தில் நடிகை அமலாபால் நடிக்கவுள்ளார். தற்போது உள்ள சூழலில் நடிகைகள் பெரும்பாலும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகை அமலாபால் 'அம்மா கணக்கு', 'அதோ அந்த பறவை போல' படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள 'ஆடை' படத்தில் நடிக்கவுள்ளார்.மேலும் இந்த படத்தின் மற்ற கதாபாத்திரங்களுக்கான தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது . விரைவில் படத்தை பற்றிய முழு விபரம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.