Skip to main content

மீண்டும் நடிக்க வரும் சூப்பர்ஸ்டார் நாயகி !

Published on 08/04/2019 | Edited on 08/04/2019

ட்ரைபல் ஹார்ஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் நடிகர் கிருஷ்ணாவின் முதல் தயாரிப்பில், புஷ்பா இக்னாஷியஸ் இயக்கியிருக்கும் 'ஹை பிரீஸ்டஸ்' (High Priestess) வெப் சீரீஸ் வரும் ஏப்ரல் 25 முதல் ZEE5 வலைத்தளத்தில் ஒளிபரப்பாகிறது.

 

amala

 

இதில் நீண்ட வருடங்களுக்கு பிறகு நடிகை அமலா நடித்துள்ளார். மேலும் நடிகர் கிஷோர், பிரம்மாஜி, வரலக்ஷ்மி சரத்குமார், சுனைனா, விஜயலட்சுமி, ஆதவ் கண்ணதாசன், பிக் பாஸ் நந்தினி ராய், ஜி.வி.பிரகாஷ் குமாரின் சகோதரி பவானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இது குறித்து நடிகர் மற்றும் தயாரிப்பாளர் கிருஷ்ணா கூறும்போது......

 

"நான் நிறைய நல்ல கதைகளை ரசிகர்களுக்கு கொடுக்க விரும்புகிறேன். அதற்கு OTT தளங்கள் தான் எனக்கு பரவலான கற்பனை சுதந்திரத்துடன் அதை செய்யும் வாய்ப்பளிக்கிறது. ட்ரைபல் ஹார்ஸ் எண்டர்டெயின்மெண்ட் என்ற இந்த நிறுவனம் இப்போதைக்கு வெப் சீரீஸ், டிஜிட்டல் ஒரிஜினல்ஸ் மற்றும் திரைப்படங்களில் கவனம் செலுத்தும். தெலுங்கில் உருவான என்னுடைய முதல் தயாரிப்பான 'ஹை பிரீஸ்டஸ்' (High Priestess) என்ற வெப் சீரீஸ் மிகச்சிறப்பாக வந்திருப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இந்த மாதிரி அற்புதமாக வரும் என நானே எதிர்பார்க்கவில்லை. அமலா மேடம் போன்ற ஒரு மாபெரும் கலைஞர் இதில் நடிப்பது ஒரு உண்மையான பேரின்பம் மற்றும் ஆசீர்வாதம். குறிப்பாக, இதனை நாகார்ஜூனா சார் அறிமுகப்படுத்தியது மிகப்பெரிய அளவிற்கு மக்களிடம் சென்று சேர்ந்திருக்கிறது. இந்த பேனர் மூலம் OTT தளத்துக்கு பல நல்ல உள்ளடக்கங்களை உருவாக்குவதே எனது உடனடி இலட்சியமாகும், அடுத்த தயாரிப்பு தமிழில் இருக்கும்" என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எனக்கு நானே போட்டி” - நடிகர் கிருஷ்ணா பேட்டி

Published on 11/07/2023 | Edited on 11/07/2023

 

Rayar Parambarai - Actor Krishna  Interview

 

நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக ‘ராயர் பரம்பரை’ படத்தின் குழுவினரைச் சந்தித்தோம். இயக்குநர் ராம்நாத், நடிகர் கிருஷ்ணா மற்றும் நடிகை சரண்யா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். படப்பிடிப்பில் நடந்த சுவாரசியமான விசயங்கள் மற்றும் நடித்த அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டனர்.

 

நடிகர் கிருஷ்ணா பேசியதாவது, “கதைக்கு முழுமையாகப் பொருந்தும் ஒரு டைட்டில் ராயர் பரம்பரை. படம் பார்த்த பிறகு அனைவருக்கும் இது புரியும். ஆனால் இது ஜாதி சம்பந்தப்பட்ட படமா என்று பலர் கேட்கின்றனர். என்னுடைய காமெடி படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. கதையும் கேரக்டரும் எனக்கு கனெக்ட் ஆனால் நிச்சயம் நான் நடிப்பேன். இருப்பதிலேயே கடினமான ஜானர் என்றால் அது காமெடி தான். புதுமுக இயக்குநர்களின் படங்களில் நடிக்கும்போது பிரஷர் அந்த இயக்குநர்களுக்குத் தான் அதிகம் இருக்கும். 

 

ஆடியன்ஸ் என்னிடம் குறிப்பிட்ட எதையும் எதிர்பார்க்காமல் இருப்பதுதான் என்னுடைய பலம். கழுகு, யாமிருக்க பயமேன் போன்ற படங்கள் மக்களுக்கும் எனக்கும் புதிதாக இருந்தது. கதைக்களம் புதிதாகவும் இருக்க வேண்டும், மக்கள் ரசிக்கும்படியும் இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். என்னுடைய சமகால நடிகர்களுடன் நல்ல நட்பு இருப்பதால் போட்டி என்பதற்கே இடமில்லை. எனக்கு நானே தான் போட்டி. 

 

மைனா, ஆரண்ய காண்டம், மாரி போன்ற படங்களில் முதலில் நான் நடிக்க வேண்டியதாக இருந்தது. யாக்கை படத்திற்காக நான் உயிரைக் கொடுத்து நடித்தேன். ஆனால் அதற்கான வெற்றி கிடைக்கவில்லை என்பது வருத்தமாக இருந்தது. மனோபாலா சாரும் மனோகர் சாரும் இந்தப் படத்தில் நடித்தார்கள். ஆனால் படம் வெளியாகும்போது அவர்கள் உயிருடன் இல்லை என்பதை நம்பவே முடியவில்லை. ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர்களோடு எப்போதும் கலகலப்பாக இருக்கும். காமெடியை எதிர்பார்த்து வரும் மக்களை நிச்சயம் இந்தப் படம் திருப்திப்படுத்தும். முழுக்க முழுக்க காமெடியான படம் இது. நிறைய காதல் தோல்விகளைப் பார்த்துவிட்டதால் காதல் தோல்விப் பாடல்கள் எனக்கு நன்றாக செட்டாகின்றன என்று நினைக்கிறேன்.

 

 

Next Story

"இதை எப்படி எடுக்க முடியும் என பயமாக இருந்தது" - இயக்குநர் திரு

Published on 27/10/2022 | Edited on 27/10/2022

 

director thiru speech at jhansi web series press meet

 

நடிகர் கிருஷ்ணா தயாரிப்பில், நடிகை அஞ்சலி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இணைய தொடர் 'ஜான்ஸி'. திரு இயக்கியுள்ள இந்தத் தொடரில்  சாந்தினி சௌத்திரி, ராஜ் அர்ஜுன், ஆதர்ஷ் பாலகிருஷ்ணா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மொத்தம் 10 எபிசோடுகளாக உருவாகியுள்ள இந்தத் தொடர் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இன்று (27.10.2022) வெளியாகியுள்ளது. இதனை முன்னிட்டு படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். 

 

அப்போது நடிகர் கிருஷ்ணா பேசுகையில், "இந்த வருடம் எனக்கு படம் எதுவும் வரவில்லை என்பதால் உங்களை சந்திக்க முடியவில்லை. ஆனால் அடுத்ததாக ‘பெல் பாட்டம்’ வருகிறது. எனக்கு தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்க வேண்டும் என்பது கனவு. இது எங்கள் நிறுவனத்தின் மூன்றாவது படைப்பு. அஞ்சலி போன்ற திறமையான நடிகர்களை பல மொழிகளிலும் இருந்து கூட்டி வந்திருக்கிறோம். நான் இதில் நடிக்கவில்லை எனக்கு எதாவது கொடுங்க எனக் கேட்டேன். ஆனால் கடைசி வரை தரவில்லை. இந்தத் தொடர் மிக நன்றாக வந்துள்ளது" என்றார். 

 

இயக்குநர் திரு பேசுகையில், "கிருஷ்ணா என்னிடம் போன் செய்து இந்தக் கதை பற்றி சொன்னார். முதலில் வெப் சீரிஸாக எடுக்க நிறைய தயக்கம் இருந்தது. இதை எப்படி எடுக்க முடியும் என பயமாக இருந்தது. மிகப்பெரிய ஸ்கேலில் எடுக்க வேண்டிய கதை. எல்லோரும் சேர்ந்து குறிப்பிட்ட பட்ஜெட்டில் 10 எபிசோடில் எடுத்துள்ளோம். இதில் மிகப்பெரிய ப்ளஸ் திரைக்கதை. மிக அட்டகாசமாக எழுதியிருந்தார்கள் பார்க்கும்போது உங்களுக்குத் தெரியும். கிருஷ்ணாவுடன் நடிகராக அவரை இயக்கி வேலை பார்ப்பேன் என நினைத்தேன் ஆனால் அவர் தயாரிப்பாளராக இருக்கும் படைப்பில் வேலை பார்த்திருக்கிறேன். இந்தப் படைப்பு கண்டிப்பாக உங்களை ஆச்சரியப்படுத்தும்" என்றார்.