Skip to main content

"நான் முன்பு போல் இல்லை" - முகம் காட்டாமல் எதிர்ப்பு; தொடர் கிண்டலால் பிரபல இயக்குநர் அதிரடி முடிவு

Published on 23/01/2023 | Edited on 23/01/2023

 

Alphonse Puthren protest  in internet by not showing face for gold movie trolls

 

நேரம் படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் அறிமுகமானவர் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். அப்படத்தைத் தொடர்ந்து அவர் இயக்கிய பிரேமம் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து பிரித்திவிராஜ் மற்றும் நயன்தாராவை வைத்து 'கோல்ட்' படத்தை இயக்கினார். கடந்த மாதம் இப்படம் வெளியான நிலையில் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

 

இதையடுத்து தற்போது அல்போன்ஸ் புத்திரன், தனது சமூக வலைத்தள பக்கத்தில் கோல்ட் படத்திற்கு தொடர் எதிர்விமர்சனங்கள் வருவதாகக் கூறி தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "உங்கள் திருப்திக்கு என்னைப் பற்றியும், என் படத்தைப் பற்றியும் தொடர்ந்து கிண்டலடித்து வருகிறீர்கள் என்றால், அது உங்களுக்குத் தான் நல்லது. எனக்கு இல்லை. அதனால் எனது முகத்தை சமூக வலைத்தளத்தில் காட்டாமல் எதிர்ப்பை பதிவு செய்கிறேன். 

 

பொது இடத்தில் என்னைக் கேலி செய்யவோ அல்லது தவறாகப் பேசவோ நான் யாருக்கும் உரிமை கொடுக்கவில்லை. எனவே, என் படைப்புகள் பிடித்திருந்தால் பாருங்கள். அதற்காக என் வலைத்தள பக்கத்தில் உங்கள் கோபத்தைப் பதிவு செய்யாதீர்கள். அப்படிச் செய்தால், இணையத்தில் நான் இருக்க மாட்டேன். நான் முன்பு போல் இல்லை. நான் முதலில் எனக்கு உண்மையாக இருப்பேன். அதன் பிறகு தான் என் மனைவி மற்றும் குழந்தைகள். நான் கீழே விழுந்த போது உங்கள் முகத்தில் வந்த சிரிப்பை என்றும் மறக்க மாட்டேன். யாரும் வேண்டுமென்றே வீழ்வதில்லை. இயற்கையால் இது நடக்கிறது. எனவே, அதே இயற்கை என்னைக் காக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அல்போன்ஸ்புத்திரன் எடுத்த அதிரடி முடிவு

Published on 18/01/2024 | Edited on 18/01/2024
alphonse puthren shut down social media

பிரேமம் பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், கோல்டு படத்தை தொடர்ந்து 'கிஃப்ட்' என்ற தலைப்பில் இளையராஜா இசையில் ஒரு படம் இயக்கி வந்தார். டான்ஸ் மாஸ்டர் சாண்டி இதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ராகுல் தயாரித்து வந்த இதன் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வந்தது. ஆனால் சமீபத்தில் தனக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு இருப்பதாக தெரிவித்து சினிமா தியேட்டர் கரியரை நிறுத்துவதாக தெரிவித்தார். இருப்பினும் குறும்படங்கள், ஆல்பம் பாடல்கள் என பெரும்பாலும் ஓடிடிக்கு ஏற்றவாறு இயக்குவதாக கூறியிருந்தார். இது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.

இதனிடையே தனது சமூக வலைதள பக்கங்களில் தொடர்ச்சியாக நிறைய பதிவுகளை பகிர்ந்து வருவார். அதில் சில பதிவுகள் பலரது கவனத்தை பெற்று வைரலானது. இந்த நிலையில் இனிமேல் சமூக வலைதளங்களில் எது குறித்தும் பதிவிட போவதில்லை என கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், “நான் இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது, எனது அம்மா, அப்பா மற்றும் சகோதரிகளுக்குப் பிடிக்கவில்லை. சில உறவினர்கள் அவர்களைப் பயமுறுத்துகிறார்கள். அதனால் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் பதிவிடுவதை நிறுத்த முடிவு செய்துள்ளேன். நான் அமைதியாக இருந்தால் அனைவருக்கும் நிம்மதி கிடைக்கும் என்கிறார்கள். அதனால் அப்படியே ஆகட்டும்” என குறிப்பிட்டுள்ளார். 

Next Story

“உடம்ப நல்லா பார்த்துக்க சொல்லுங்க” - ஆடியோ அனுப்பிய கமல்

Published on 17/11/2023 | Edited on 17/11/2023

 

kamal wishes alphonse puthren

 

பிரேமம் பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், கோல்டு படத்தை தொடர்ந்து 'கிஃப்ட்' என்ற தலைப்பில் இளையராஜா இசையில் ஒரு படம் இயக்கி வந்தார். டான்ஸ் மாஸ்டர் சாண்டி இதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ராகுல் தயாரித்து வந்த இதன் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வந்தது. ஆனால் சமீபத்தில் தனக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு இருப்பதாக தெரிவித்து சினிமா தியேட்டர் கரியரை நிறுத்துவதாக தெரிவித்தார். இருப்பினும் குறும்படங்கள், ஆல்பம் பாடல்கள் என பெரும்பாலும் ஓடிடிக்கு ஏற்றவாறு இயக்குவதாக கூறியிருந்தார். இது பலருக்கும் ஆச்சர்யத்தை அளித்தது. 

 

இந்த நிலையில் அல்போன்ஸ் புத்திரன் கடந்த கமல்ஹாசன் பிறந்த நாளுக்காக ஒரு பாடலை பாடி பதிவு செய்துள்ளதாகவும், அதை தன்னிடம் கொடுத்து கமலிடம் கொண்டு சேர்க்க சொன்னதாகவும் பார்த்திபன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பார்த்திபன் வெளியிட்டுள்ள பதிவில் “பெரிதோ சிறிதோ விருதே கிடைத்தாலும்,என் பிறந்த நாள் பரிசாக நான் நினைப்பது இக்குரலை தான்….கேட்கும் மாத்திரத்தில் புரியாது… புதிய பாதைக்கு முன் நாகரீகமாக யாசகமே பலரிடம் கேட்டிருக்கிறேன். அதன் பின் அருள் பாவிக்கும் ரசிகர்களாகிய உங்களின் ஆதரவால் நான் யாரிடமும் எனக்காக எதையும் கேட்பதில்லை.

 

ஆனால் மற்றவர்களுக்காக நிறைய கேட்டிருக்கிறேன். அப்படி மலையாள ‘ப்ரேமம்’ செய்த இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், கமல் சார் பிறந்த நாளுக்கு பரிசாக பாடல் தொகுப்பு ஒன்றை தன் குரலில் பதிவு செய்து எனக்கனுப்பி ‘எல்லா வழியிலும் முயற்சித்து விட்டேன், நீங்கள் அவரிடம் சேர்ப்பிக்க இயலுமா?’ அவருக்குதவ கமல் சாரை அணுகினேன். படங்கள், சொந்த பட வேலைகள், பிக் பாஸ், அரசியல் பணிகள், இப்படி நகர முடியா நெருக்கடியான சூழ்நிலையிலும், தன் குரல் மூலம் ஒரு கலைஞருக்கு தெம்பு டானிக் அதுவும் துரிதமாக அனுப்பியவருக்கு வார்த்தைகள் அற்ற மவுனத்தை மனப்பூர்வமாக பகிர்ந்தேன். உடல்நலம் காரணமாக மனநலமும் குன்றியுள்ள ஒருவருக்கு ஒரு சொட்டு மருந்தாக நான் பயன்பட்டதால் வாழ்வின் ஒரு துளி அர்த்தப்பட்டது” என குறிப்பிட்டுள்ளார். மேலும் கமல் அல்போன்ஸ் புத்திரனுக்காக பேசிய ஆடியோவையும் பகிர்ந்துள்ளார். 

 

அந்த ஆடியோவில், “அல்போன்ஸ் புத்திரனுடைய பாட்டு கேட்டேன். அவர் உடம்பு சுகம் இல்லைனு சொன்னீங்க. ஆனால் மனசு நல்லா இருக்கிற மாதிரி இருக்கு. குரலும் சந்தோஷமாக இருக்கு. அப்படியே சந்தோஷமாக இருக்கட்டும் வாழ்த்துகள். அவர் எடுக்கிற முடிவு அவருடையது என்றாலும் உடம்ப நல்லா பார்த்துக்க சொல்லுங்க” என பேசியுள்ளார்.