Skip to main content

ரஜினி, விஜய் வரிசையில் இணைந்த அல்லு அர்ஜுன்

Published on 08/09/2022 | Edited on 08/09/2022

 

Allu Arjun paid rs125 crore for Pushpa 2 movie

 

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் 'புஷ்பா – தி ரைஸ்'. இப்படத்தில் ராஷ்மிகா மந்தானா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பான் இந்தியா படமாக வெளியான இப்படம் வசூல் ரீதியாக பெரும் வெற்றி பெற்றது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இவர் இசையில் வெளியான அனைத்துப் பாடல்களும் நல்ல வரவேற்பு பெற்றது. குறிப்பாக சமந்தா சிறப்புத் தோற்றத்தில் நடனமாடிய 'ஊ...சொல்றியா மாமா' பாடலை இளைஞர்கள் கொண்டாடித் தீர்த்தனர். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 'புஷ்பா 2' படத்திற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

 

இந்நிலையில் புஷ்பா 2 படத்தில் நடிப்பதற்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு படக்குழு ரூ.125 கோடி சம்பளம் பேசியுள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. புஷ்பா படத்தின் மூலம் பான் இந்தியா ஸ்டாராக மாறியுள்ளதால் அல்லு அர்ஜுனுக்கு இந்த சம்பளம் கொடுத்துள்ளதாகவும் பேசப்படுகிறது. இதன் மூலம் இந்திய சினிமாவில் ரஜினி, விஜய்,, சல்மான் கான், அமீர் கான் உள்ளிட்ட ஒரு சில முன்னணி நடிகர்களின் பட்டியலில் தற்போது அல்லு அர்ஜுனும் இணைந்துள்ளார். இதனிடையே அல்லு அர்ஜுன் ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க உள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை சமீபத்தில் நடைபெற்றதாகவும் சொல்லப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அல்லு அர்ஜுனின் புகைப்படம் இணையத்தில் வைரல்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
allu arjun Wax Statue at dubai

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன், 'புஷ்பா’ படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார். மேலும் உலக அளவில் சினிமா நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இந்த நிலையில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 15ஆம் தேதி விரைவில் திரைக்கு வருகிறது. இதை முடித்துவிட்டு அட்லி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அல்லு அர்ஜுனுக்கு துபாயில் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. அச்சிலை புஷ்பா படத்தில் அவர் செய்யும் போஸ் ஒன்றை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள இந்த சிலையின் திறப்பு விழா நேற்று நடைபெற்றுள்ளது. நேற்றைய தினம் அல்லு அர்ஜுன் ஹீரோவாக அறிமுகமாகி 21 ஆண்டுகள் கடந்துள்ளன.

இதன் திறப்பு விழாவில் கலந்து கொண்ட அல்லு அர்ஜுன், மெழுகு சிலை அருகில் அதே போஸுடன் அதே ஆடையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது.

Next Story

‘வாயா சாமி... மன்மத சாமி...’ - திகைத்துப் போன ராஷ்மிகா மந்தனா!

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Rashmika Mandanna gets warm welcome in Tokyo

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா கடைசியாக பாலிவுட்டில் அனிமல் படத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் பான் இந்தியா ஹீரோயினாக அறியப்படுகிறார் ராஷ்மிகா. இப்போது தெலுங்கில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக 'புஷ்பா 2' படத்திலும், வெங்கி குடுமுலா இயக்கத்தில் நிதினுக்கு ஜோடியாக ஒரு படத்திலும் நடிக்கிறார். தமிழில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'ரெயின்போ' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் தனுஷின் 51வது படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில், டோக்கியோவில் 8வது க்ரஞ்சி ரோல் அனிமி விருது விழா நாளை (02.03.2024) நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டு விருது வழங்கவுள்ளார் ராஷ்மிகா மந்தனா. அதற்காக மும்பை விமான நிலையத்திலிருந்து டோக்கியோவுக்கு சென்றார். டோக்கியோவில் இறங்கிய அவர், புஷ்பா படத்தில் அவர் நடித்த ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் உள்ளிட்ட அவரது புகைப்படங்களுடன் ரசிகர்கள் நின்றுகொண்டிருந்ததை பார்த்தார். 10க்கும் மேற்பட்ட ரசிகர்கள் ராஷ்மிகா புகைப்படத்தை கையில் வைத்துக்கொண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களின் வரவேற்பைக் கண்ட ராஷ்மிகா திகைத்துப் போய் நின்றார்.

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் வெளியான படம் 'புஷ்பா – தி ரைஸ்'. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பான் இந்தியா படமாக வெளியான இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார். இப்படத்திற்காக அல்லு அர்ஜுன் மற்றும் தேவிஸ்ரீ பிரசாத் தேசிய விருது வாங்கியது குறிப்பிடத்தக்கது. இப்படம் வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.